வேதியரின் வினாவும் ரிஷியின் விடையும்.

248

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2

(34) வேதியரின் வினாவும் ரிஷியின் விடையும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வேதாள வனத்தில் வைத்து சந்திப்போம் என ரிஷி கூறியதால் சில விடைகளை அறிய வேதியர் விரும்பினார். அதனை முகக்குறிப்பால் உணர்ந்து கொண்ட ஶ்ரீ வல்லபர், ” வேதியரே தயங்காமல் மனதில் உள்ளதைக் கேட்டு விடுங்கள். குரு சுவாமி விடை இறுப்பார் கேளுங்கள் ” என்றார். வேதியர், ” பொறுத்தருள வேண்டும் ஐயனே, காலச்சக்கரத்தில் பயணித்ததே விடைகள் அறிந்து கொள்ளவே. குருவே மனிதனுக்கு வழிகாட்டியாக உள்ளது எது?” ரிஷி உடனே, “ஞானம். அந்த ஞானம் எது என்றால் அது ஆறு வகைச் செயல்கள் ஆகும். உமது சற்குருநாதர் ஶ்ரீ ஈஸ்வர பட் அவர்களிடம் அறியாத ஞானங்களா? அவரோ இறைசக்தியில் ஓர் அங்கம். உமது வினாவினுக்கு ஆறு விடைகள் உண்டு.

1. தன்னுள் தெய்வீகமாகக் குடி கொண்டு விளங்கி வரும் ஆத்மாவினுக்குத் தீங்கு நேராமல் பாதுகாத்து வருதலே ஞானம். இதுவே சக்தி குணம்.இன்ப துன்பங்களுக்கு மேலாக ஆத்மாவை நிலை நிறுத்தி வைப்பது ஞானமாம். இதனை ஞானகுணம் என்பர்.

2. இன்ப துன்பங்களுக்கு மேலாக ஆத்மாவை நிலை நிறுத்தி வைப்பது ஞானமாம். இதனை ஞானகுணம் என்பர்.

3. கபடம், மோசம், பயனிலாத செயல் இவைகளைச் செய்யாதிருப்பதற்கு அன்பு குணம் வேண்டும். அதனை ஞானம் என்று கூறுவர்.

4. மற்றவர்கள் நமக்கு இவைகளைச் செய்ய வேண்டும், அல்லது செய்யாதிருக்க வேண்டும் என எதிர்பாராது இருத்தலே ஞானமாம். இதனை அழகு குணம் எனலாம்.

5. பிரபஞ்சங்களைப் படைத்த இறைசக்தி நம்மையும் ஓர் அங்கமாகப் பிறக்க வைத்துள்ளதற்குக் காரணம் இறைவனே! நமக்கு நேரிடும் சுக துக்கம் இரண்டையும் எந்தவிதமான வருத்தமும் கொள்ளாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு எது நேரிட்டாலும் மேற்கூறிய இவற்றிற்குக் காரணம் நம்மையெல்லாமர படைத்த இறைவனே காரணம் என்று அறிதலே அறிவின் ஞானமாகும்.

6. கடவுள் படைத்த பிரஞ்சத்தில் மரணத்தின் இயல்பு நிலையாகவும், எப்போதும் நீங்காது நிலை பெற்று இருப்பதாகும். அதனை நாம் சாந்தமான சித்தத்தில் ஏற்றுக் கொள்ளுதல் என்பதே உண்மை ஞானமாகும். இதனையே ஞானியர்கள் பக்தி என உரைத்தனர்.”

மேலும், “உமக்கு இன்னும் சொல்ல எண்ணுகிறேன் கேளுங்கள்! கடமைகளை செய்து முடிப்பதில் உணர்ந்து விரைவாகச் செய்து வர வேண்டும்.
ஆத்ம சுத்திக்கு வேண்டிய ஞானமும் மற்றும் விவேகத்தையும் அடைதலில் ஆர்வமும் வேகமும் வேண்டும்.”

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,
பொள்ளாச்சி –2 .


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button