Sri Vaikunta Vasa Perumal Temple

ஸ்ரீ வைகுண்ட வாஸப் பெருமாள் சன்னதி

ஸ்ரீ தேவி பூதேவி உடனமர் ஸ்ரீ வைகுண்ட வாஸப் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றார்கள். பிதுர் தோஷம், குல தெய்வ சாபம், அந்தணர் சாபம், சந்நியாசிகளின் சாபம் பெற்று அல்லல் உறுபவர்கள் இங்கு வந்து வழிபட்டு சாபங்கள் நீங்கி நன்மைகள் அடைகின்றார்கள். தோஷங்கள் அகன்று விடுகின்றன. பிரதி அமாவாசை தினத்தன்று மதியம் 12.00 மணிக்கு முன் (அபிஜின் முகூர்த்த காலம்) மோட்ச தீப வழிபாடு நடைபெறுகின்றது. இறந்து பட்ட ஆத்மாக்கள் பிறவாப் பெரு நிலையை அடையவே இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

தவிரவும் அமாவாசை தினம் ஸ்ரீ வைகுண்ட வாஸர் திருமேனியின் மீதுவெண்ணை போடும் நிகழ்ச்சியும் இரவு வரை செய்கின்றார்கள். அமாவாசை மட்டுமே இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாழ்வில் துயரம் நீக்கிடும் ஸ்ரீ வைகுண்ட வாஸருக்கு இதுவே காணிக்கையாக்கப்படுகிறது.

அமாவாசை அன்றைய இரவு ஸ்ரீ வைகுண்ட வாஸருக்கு மூலிகைத் தைலக் காப்பும், வெண்ணீர் ஸ்நானமும் செயவிக்கப்படுகிறது. மூலிகைத் தைலமானது தோல் சம்பதமான வியாதிகளுக்கு மேல் பூசும் ஔஷதமாக உபயோகிக்கப் பக்தர்களால் கொண்டு செல்லப்படுகின்றது. இவரை வழிப்பட்டு நன்மை பெற்று வரும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து வாழ்கின்றார்கள்.

Call Now Button