Sri Dwija Ganapathi Temple

ஸ்ரீ துவிஜர் சன்னதி

நவகிரஹங்களின் பீடத்தின் மீது ஸ்ரீ துவிஜர் காட்சி தருவது அற்புதக் காட்சியாகும். தொழில் முன்னேற்றம், கல்வியில் முன்னேற்றம், விவசாயம் செழிக்கவும், காலா காலத்தில் மழையும், தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கவும் பூஜைகள் மேற்கொண்டு வருகின்றார்கள். இங்கு தேங்காய் உடைக்காமல் முழுமையாக வைத்தே பூஜிக்கப்படுகின்றது. திருமணத் தடை நீங்கவோ, தொழில் முன்னேற்றம் கருதியோ விரதம் இருப்பவர்கள், வெற்றிலை-பாக்கு, மஞ்சள் தடவிய இரண்டு தேங்காய்கள், மஞ்சள் கொம்பு, மஞ்சள் கயிறு, எலுமிச்சம்பழம் கொண்டு வந்து பூஜித்து வருகின்றார்கள். வெற்றி மேல் வெற்றி அடையவே இங்கு பக்தர்களுக்காக பிரார்த்தனை செய்யப்படுகின்றது. வெள்ளிக்கிழமை இங்கு விரதமிருப்போர் வழிபடுகின்றனர். யாக சமித்துக்கள் காணிக்கையாகப் பெறப்படுகிறது.

Call Now Button