மூன்னீர் அறிய விருப்பம்.

976

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். 

 

21•09•2017,

புதன்கிழமை, 

குரு ஈஸ்வராலயம்,

பொள்ளாச்சி. 

 

(448) மனிதனே புனிதன் —

மூன்னீர் அறிய விருப்பம்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மனிதன் எப்போதும் தன்னுடைய பகுத்தறிவைப் பயன்படுத்தி எதனையும் ஆராய்ந்து பார்ப்பது தான் அவனுடைய இயல்பு. எந்த நூல்களானாலும் அதனைப் படித்தறிந்து, சிந்தனை செய்து, உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஏற்றுக் கொள்கிறான். அதனைப் போன்றே எதிர்காலம் பற்றிய  கணிப்புகளானாலும், அறிஞர் பெரு மக்களின் உரைகளாயினும்

அதன்மீது நம்பிக்கையை  ஏற்படுத்துவதோ அல்லது புறந்தள்ளி விடுவதற்கோ காரணமாக அமைவது,  மனிதனின் உண்மையை அறிந்து கொள்ளத் துடிக்கும் பகுத்தறிவே தான். அறிவின் தாகம், குறிப்பாக ஒன்றைப்பற்றியே குறிப்பிட்டுக் கூறிக்கொண்டே இருப்பதினால் மட்டுமே அது அடங்குவதில்லை. புதினங்களை அறிந்து கொள்ள விரும்பும் மனமானது, உண்மையானது என அறிந்து ஏற்றுக் கொண்டிடும் பக்குவத்தைப் பெறுவதற்குப் பகுந்து அறியும் தன்மையின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். ஒருவன் அதீதமான அறிவின்  ஆற்றலைப் பெற்றிருந்தால், மிகவும் புத்திசாலி என்று பாராட்டப் பட்டிருந்தால், வெற்றியின் மகிழ்வை எட்டியிருந்தால், அற்புத ஆற்றல் பெற்றவனாகக் காணப்பட்டால், அவன்  அநேக தோல்விகளை சந்தித்துத்தான்    அறிவின் திருவாக மாறியிருக்க வேண்டும் என்பது     அறிஞர் பெரு மக்களின் கணிப்பாகும்.

 

திரு SSM சுப்பிரமணியம் ஐயா அவர்கள் நமது சுவாமியிடம்,  “மூன்று வகையான முக்கியம் வாய்ந்த நீர்   இருப்பதாகவும், அவைகள் பூநீர், புவி நீர், மற்றும் செந்நீர் எனப்படும் இவைகளை எனக்குத் தருவதாகக் கூறினார். அவற்றின் பயன்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றார். அதனைக் கேட்டதும் நமது சுவாமி புன்முறுவல் பூத்தார். “சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்கள் இதனைப் பற்றிக் கூறியுள்ளார். பூ நீர் என்பது சிம்மம் போல் சிவந்த நிறமும், உறுதியான திடமும், உடைத்தால் தூய்மையான வெண்மை நிறமுடைய அண்டக் கல், கடலில் மிதக்கும் கடல் காகம் என்னும் கருப்புக் கல்லும், உவர்ப்புத் தன்மை மிகுந்த  செம்மண் பூமியில் குறிப்பிட்ட ஆழத்தின் கீழே இரவில் பூக்கும் பூநீரும் சேகரித்துக் பக்குவமாய் பஸ்ப்பங்கள் தயார் செய்து, அத்துடன் ஆகாய கங்கை என்னும் பனிநீரையும் சேர்த்து,  ஜெய நீர் வடித்து சூரியப்புடமிட வேண்டும். அதனில் கிடைக்கும் தாதுப்பொருளை முப்பூ என்ற பொதுப் பெயரில் மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது” என்று கூறினார்.

 

சற்று நேரம் பூஜை அறையில் மெளனம் நிலவியது. நமது சுவாமியின் முகத்தை நிமிர்ந்து

பார்த்த திரு SSM ஐயா அவர்கள்  அழகான புன்சிரிப்பும், கண்களில் மலர்ச்சியும் ஏற்பட்டது. எல்லோருக்கும் அதனால் மிகுந்த சந்தோஷம் உண்டானது.  மலர்ந்த முகத்துடன் திரு SSM ஐயா அவர்கள்,  “தம்பி நாகராஜா,

புவி நீர் என்று  சித்தர்கள் எதனைக்  கூறுகின்றார்கள்? ” எனக் கேட்டார். நமது சுவாமி சற்றும் தயங்காமல்,  “ஐயா, இந்த உலகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தையும் புவிநீர் என்ற பெயரில் தான் உலக மக்கள் அறிந்துள்ளார்கள்,  அது உண்மைதான். சில நீர நிலைகளில் வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமிக்கு முதல் நாள்  ஒருவகையான மஞ்சள் நிறத்தில்  பூமிக்குள் இருந்து நீர் வெளிப்படுகிறது.  குறிப்பாக எரிமலைகள்  மறைவாக இருக்கும் கேரளப் பகுதியில் இந் நீர் சுரக்கின்றது என்பதை ஸ்ரீ ஈஸ்வர சற்குரு நாதர் என்னிடத்தில் முக்கியமான பாடத்தில் கூறியுள்ளார். இதனை வனத்தில் வாழும் மிருகங்கள் அதனைப் பருகுகின்றனவாம்! இதனை சித்தர்கள் நாடிச் சென்று அந்நீரை ஏதோ உபாயம் செய்து  அம்முறையில் அதனை உண்கின்றனர். மறுநாள்  பெளர்ணமி இரவு வரையில் சுரக்கும்  நீரை சேகரித்து வைத்து பயன்படுத்துவார்களாம். இது தான் நான் அறிந்தது” என்றதும் அவர் வாய் விட்டுக்  குழந்தை போல் சிரித்தது எல்லோர் மனதையும் கவர்வதாக இருந்தது. ” இனி அடுத்த கேள்வி செந்நீர் பற்றியது” என்றார் திரு SSM ஐயா அவர்கள்.  நமது சுவாமி தலையசைத்துச் சிரித்து உவகை கொண்டார்.  உண்மையில் ஓர் அருமை, பெருமை மிகுந்த மனிதனை தனது சற்குரு நாதர் சந்திக்கச் செய்து விட்டார் என்று நமது  சுவாமி மனதில் சிந்தனை சுடர்ந்தது.

 

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

நன்றி! வணக்கம்! 

 

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்! 

மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button