ரசவாதம் சிறக்கவோர் அருமருந்து!

956

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். 

 

22•09•2017,

வியாழக்கிழமை, 

குரு ஈஸ்வராலயம்,

பொள்ளாச்சி. 

 

(449) மனிதனே புனிதன் —

ரசவாதம் சிறக்கவோர் அருமருந்து!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஒரு மனிதனிடத்தில் லட்சியம் என்பது உருவாகி விட்டால், தனது தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்திக் கொள்வதற்கு உள்ள உபாயம என்னவென்றால்,

மற்றவர்களிடத்தில் மறைந்து இருக்கும் தெய்வீக ஆற்றலை எடுத்து உபதேசிப்பதும், அதனை  வெளிப்படுத்தும் விதமாக தகுந்த வழிகாட்டுதல்களும் தந்துதவ வேண்டும். அதனை உணர்ந்து கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள். வெற்றியும் பெறுவார்கள்.  ஞானயோகி என்று சற்குரு நாதரால் கொப்புக் கண்ட பெருமாள் மலையின் உச்சியில் வைத்து அழைக்கப்பட இருக்கின்ற திரு SSM ஐயா அவர்கள் நமது நாகராஜன் சுவாமி அவர்களைப் பார்த்து செந்நீர் பற்றி விளக்கம் தரக் கேட்டுக் கொண்டார். சற்று நேரம் தனது சுவாசத்தில் ஜெபம்  செய்து விட்டு, “ஐயா செந்நீர் என்பது நமது உடலில் ஓடுகின்ற குருதி”என்றதும் அதனை நம்பாத அவர்,  “சித்தர்கள் பரிபாக்ஷையில் கூறியுள்ள அதற்கு உண்மை விளக்கம் வேண்டும் ” என்று கேட்டுக் கொண்டார். “ஆகட்டும் கூறுகிறேன் ஐயா ” என்று கூறிவிட்டு, சற்று நேரம் மெளனமாக இருந்தார். 

 

பிறகு சுவாமி, “செந்நீரில் மற்றொன்று ரசவாதம் கற்றுக் கொண்டவர் உபயோகிக்க பயன்படுத்தும் அது பாறைகளில் கசிவு ஏற்பட்டுப் பக்குவமாக வரும் நீராகும். உலோகத்தைப் பக்குவப்படுத்தி சொக்கத்தங்கமாக மாற்றி விடுவதற்கு பச்சிலைச் சாருடன் இது இணைந்து செயல்படும். இன்னுமொன்றை சற்குரு நாதர் உபதேசித்துள்ளார். கர்நாடகா தேசத்தில் மூடுபத்திரி என்ற  ஷேத்திரம் உண்டு. அங்குள்ள சிவலிங்கத்தின் கீழ் பாகத்தில்  சுரந்து வருகின்ற நீருக்கும் செந்நீர் என்ற பெயருண்டு. சிவந்த குங்குமத்தை உடலில் பூசிக் கொண்டு நேர்ச்சை செய்திடும் பக்தர்களால் அங்குள்ள குளங்களின் நீரோ செந்நிறத்தில் மாறிப் போயிருக்கும். சிவலிங்கத்தின் அடிபாகத்தில் அருவிபோல் ஊற்றெடுக்கும்  நீரின் உண்மைத் தன்மை அது ஆராய்ச்சிக்கு உட்பட்டது. என்னிடம் அதன் ரகசியம் கூறப்படவில்லை ” என்று சொல்லி விட்டு அமைதியானார். பூ நீர், புவிநீர்,

செந்நீர் பற்றிச் சுருக்கமாக நமது சுவாமி கூறியவுடன், மகிழ்வுடன் கூடிய  பிரமிப்பு சற்று நேரம்  நிலவியது.

 

அதன் பிறகு திரு SSM ஐயா அவர்களின் உறவினர் ஒருவரிடம் இருந்து கேள்வி எழுந்தது. “தங்கம் செய்யப் பயன்படுத்தும் மூலிகைகள் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன் கூறுங்கள் ” என்றார். நமது சுவாமி, “அநேக  மூலிகைகள் தங்கத்தாதுவின் சத்துக்கள்  மிகுந்தவை தான். அவைகளில் உள்ள தங்கத்தைப் பிரித்து எடுப்பதற்கு ஆகும் சிலவினங்கள்  மிக அதிகமாக இருக்கும். வைத்தியத்திற்குத் தங்கச்சத்துக்கள் அதிகம் தேவைப்படும் போது சுத்த நீர்நிலைகள் அதிகமாக இருக்கும் இடங்களில் அருமையாகச் புஷ்பிக்கக் கூடிய கரப்பு என்ற மூலிகைகளை உபயோகிக்கும் முறைகளை அனுபவ வைத்தியர்கள் கையாண்டு வருகின்றனர் ” என்றார் சுவாமி. 

“வேறு மூலிகைகள் பெயர்கள் தெரியுமா? “என்ற கேள்வி மீண்டும் வந்தது. சுவாமி சில மூலிகைகளின் பெயர்களைக் கூறினார். “வேறு ஏதாவது முறையில் ரசவாதிகள் தங்கம் செய்கின்றார்களா? ” என்ற கேள்வி மீண்டும் கேட்கப்பட்டது.

நமது சுவாமி,  “மூலிகைகளைக் கொண்டு தங்கம் தயார் செய்து அதனை சித்த மருத்துவம் செய்யப் பயன்படுத்தினர். மிகக் குறைவாகக் கிடைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தி  தங்கத்தைப் பெரிய அளவில் செய்ய முடியாத நிலையில்,  விற்பனைக்கு வரும் தங்கத்தின் விலை அதனைவிடக் குறைவாகவே இருக்கிறது. லிங்கரசத்தை குறிப்பிட்ட  மூலிகை மரங்களின் அடிப்பாகத்தில் சில காலம் வரை புதைத்து வைத்து எடுத்தால்,  அந்த லிங்க ரசம் தங்கமாக மாறியிருக்கும். அதனை யோகியர் பெருமக்கள் பக்குவப்படுத்தி நாக்கினடியில் வைத்துக் கொண்டு  தியானத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிந்து இருக்கிறேன். காயகற்ப விஷயங்களை யோகப் பயிற்சியில் அடைந்திட எண்ணும் சிலர், தங்கரச மணியை உபயோகப்படுத்திப் பயன் பெற்று வருகின்றார்கள்” என்று நாகராஜன் சுவாமி பேசினார். 

 

சாமியார்கள் பற்றிக் கேள்வி எழ “பரதேசி என்பவன் யார்?” எனக் கேட்டனர். சுவாமி “ஆன்மிக வாதிகள் அனைவரையும் ஒன்றாக்கி ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சேர்த்த பிறகு, ஒரு  அமைப்பையும் உருவாக்கி வைத்துவிட்டு, அதற்கு ஒத்துழையாமல், உலகம் சார்ந்த சமூக தருமத்திற்கு வேறுபாடாக நடந்து கொள்பவர் யாராயினும் அவன் சுயநலமிக்க பரதேசி என்று அறிஞர் பெருமக்களால் கணிக்கப்படுகிறான்” என்றார்  திரு SSM ஐயா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை  இல்லை! தியானத்தில் அமர்ந்து இருந்த நமது சுவாமியை அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். 

 

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

நன்றி! வணக்கம்! 

 

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்! 

மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button