Sri Nagalakshmi Thayar Temple

ஸ்ரீ நாகலக்ஷ்மித் தாயார் சன்னதி

நாகவனத்து குரு ஈஸ்வராலயத்தின் வரதேவதை! சித்தர்களாலும் முனிவர்களாலும் தெய்வங்களினாலும் பூஜிக்கப்படும் மகா சக்தி தேவி! பதினாறு நாகங்கள் குடை பிடிக்க அருள் அரசாட்சி புரிபவள். அன்னையின் சன்னதியில் ராகு புத்தி திசை நடப்பவர்கள் ஸர்ப தோஷம் மற்றும் ஸர்ப ஹத்தி செய்தவர்கள் கருவில் வளரும் கால ஸர்ப தோஷம் உடையவர்கள் வந்து வழிபாடுகள் செய்து தோஷம் நீங்கப் பெறுகின்றனர்.

வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் வில்வம், அறுகு, தர்பை இம் மூன்றையும் வாழை இலையில் வைத்து தாயாரின் சன்னதியில் பூஜிக்கப்பட்டு அவைகளை பிரசாதமாக கொண்டு செல்கின்றார்கள். அப்பிரசாதங்களை நீரில் இட்டு குளித்திடும் போது ஸர்ப தோஷம் நீக்கம் பெறுகிறது. வெள்ளிக் கிழமைகளில் பொங்கல் வழிபாடும் பக்தர்களால் நிறைவேற்றப்படுகிறது.

Call Now Button