சற்குருநாதர் பற்றி வேதாள் பட்

320

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2

(37) சற்குருநாதர் பற்றி வேதாள் பட்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

“பரம்பொருளாகிய இறைவனைக் கருத்தில் கொண்டே உலக வாழ்வை ஜீவர்கள் சரிவர நடத்த முடிந்திடும். ஆண்டன் படைத்த இந்த உலகத்தில் இயற்கை அமைப்பின் இயல்பு நிலையை மறந்து விட்டுப் பரமார்த்திகப் பெருநிலையின் தர்மத்தை யாராலும் நடத்திடவும் முடிந்திடாது. இவையிரண்டும் வெவ்வேரானவைகள் அல்ல! இரண்டுமே ஒன்றுதான். இதனை உரைத்தவர் உங்கள் இருவருக்கும் தனிப்பட உபதேசம் செய்த அவர் வேறுயாருமல்ல! சற்குருநாதர் ரூபம் தாங்கியுள்ள சர்வேஸ்வரன் தான். உலகில் உள்ள அனைத்து ஜீவர்களும், மற்ற பொருட்களும் ஒன்றை ஒன்று அனுசரித்து தாங்கும்படி அமைத்த இறைவனுடைய படைப்பின் தன்மை நமக்கு நன்றாகப் புரிய வரும். காரணம் அவரும் உலக ஜீவர்களில் ஒருவராக நம்மிடையே சற்குருநாதராக வந்து கலந்து உலவிக்கொண்டு இருப்பது தான். அதனைப் போன்றே ஆறாம் அறிவின் பகுத்தறியும் திறனுடைய மேலாம் மக்களாகிய நாமும், ஒருவருக்கு ஒருவர் பயன்படவும், ஒன்றுபட்டு வாழவும் செய்திட்ட இறைவன் கருணைக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். சர்வேஸ்வரனாகிய நமது சற்குருநாதர் பிரபஞ்சம் அடங்கும் பொருள் எனவும், உலகத்தை அறியும் பொருள் என ஒரு முறை கூறினார். அதன் விளக்கத்தை அறிய விரும்பி மௌனமாக இருந்தோம். பிரபஞ்சம் முழுவதும் அதனுடைய அகண்ட அறிவினுக்குள் அடங்கும்படி இறைவன் சிருஷ்டித்தார். அப்படியே உலகத்தை சிருஷ்டிக்கும் போது அதனைச் சுற்றியுள்ள ஆகாயம், காலம், அதன் நடைமுறையும், பிறகு கல்பம் ஆகியவற்றை அறியும் பொருளாய் ஏற்படுத்தி அருளினார்.”

“பகுத்தறியும் ஜீவர்களின் அறிவு இதனால் மேலும் வளர்ச்சியுற்றது. அடக்கத்துடனும், அன்பினாலும், சத்திய தர்மங்களைக் கடைப்பிடித்ததாலும், இறையருள் பெற்ற தவஞானியர்கள், கடந்து சென்ற அநேக காலத்தில் மறைக்கப்பட்ட ரகசியங்கள் மற்றும் எதிர் காலத்தின் நடை முறை உண்மைகளையும் அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. இவைகளைக் கொண்டு ஆன்மாவே உயரிய பொருள் எனத் தெளிந்த ஞானியர், ஆன்மாவின் அறிவும் உலகத்தின் நன்மையும் ஒன்றாக இருப்பதையும், எதுவும் நன்றாக முடிவதையும் கண்டு கொண்டு, தங்கள் தவத்தை மேம்பாடு அடையச் செய்தனர். எந்த சமயத்தில் எது நேர்ந்தாலும் அது முழுமையாக முடிவது தான் மனிதனது வாழ்க்கை என்பதை அனுபவ வாயிலாக உணர்ந்து கொண்டனர். அதனால் தங்கள் வாழ்வில் நேர்ந்ததற்குத் தக்கபடி தங்கள் கடமை இது தான் என்று முடித்துக் கொண்டு, அதனையும் பரிபூரண முழுமை எனவும் ஏற்றுக் கொண்டனர். ஓர் பகுத்தறிவு ஜீவனுக்கு இறையருளால் தன்னைத்தான் அறிந்து கொள்ளும் சக்தி அதற்கு உண்டு. தனக்கு வேண்டியவாறு தன்னைத் தனது வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். தன்னைப் பற்றிப் பெருமையாகத் தானே கூறிக் கொள்ளவும் அதற்கு இயலும். தான் வாழ்வில் பெற்றதைத் தானே அனுபவித்து வாழும். அதனை மற்றவர்களுக்கும் கொடுத்து அனுபவிக்க அதன் சுயநலம் அதற்கு இடம் தராது. மனித ஜீவனைத் தவிர மற்ற தாவர வர்க்கங்களும், மற்ற பிராணிகள் அனைத்தும் அவைகள் தங்கள் வாழ்வில் பெற்றதை, எல்லா மனித ஜீவர்களும் அனுபவிக்கும்படி தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும்.”

“பகுத்தறிவைக் கொண்டு தான் மனிதனின் வாழ்வை சமநிலையாகச் செய்து கொள்ள முடியும். சமநிலை அடைந்த மனிதன் அதனை மற்றவர்களும் அடையத் தகுந்த வழிகாட்டும் போது தான், அதே வழியில் தனது சமநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பிறப்பை, வாழும் வாழ்வை சந்தோஷமாக எதிர் கொள்ளும் மனிதன் தனது ஆயுளின் கடைசிக் காலத்தையும் சமநிலையுடன் எதிர்கொள்வதுதான் ஆத்மாவினுக்கு சிறப்பு என முன்னோர்கள் உரைத்தனர். மனிதன் தனது வாழ்வை வெறுத்து இறப்பை விரும்பினால், எப்போதும் நற்கதி ஏற்படாது என்பதுதான் உண்மை” என்ற வேதாள ரிஷியின் முகத்தை ஆவலுடன் விக்கிரமாதித்தியனும், மதியூகி பட்டியும் உற்றுப் பார்த்தனர். வேதாள ரிஷி கை உயர்த்தி ஆசி வழங்கினார். அவர்கள் காடாறு மாதம் முடித்து அரசாட்சியை ஏற்க நாடு திரும்பட்டும் என்று நாமும் பிரார்த்தனை செய்து கொள்வோம். இனி விக்கிரமாதித்திய சகாப்தத்தில் இருந்து வேதியர் வேணுநாதர் ஶ்ரீ வல்லபர் ரிஷி இருவரும் காலச்சக்கரத்தில் பிரயாணம் செய்து திரும்பும் நிகழ்வுகளுடன், அநேக தியான உண்மைகளையும் அறிந்து கொள்ள நாமும் பயணிக்கலாம். இதோ வேதியர் வேணுநாதர், காலன் என்கின்ற தம்பனவசியனால் தாக்கப்பட்டு, மாகாளிப் பட்டிணத்து மருத்துவ விடுதியில் உணர்வு இன்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மருத்துவர் அருகே ஶ்ரீ வல்லபரும் நின்று கொண்டு சிகிட்சையைக் கவனித்தபடியே இருந்தனர்

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!
நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,
பொள்ளாச்சி –2 .


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button