ராமன் இருக்கும் இடமே அயோத்தி!

692

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(35) நாகவனம் பள்ளி கெண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

ராமன் இருக்கும் இடமே அயோத்தி!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

“மனிதனின் அறிவானது அறியாமை என்னும் இருளால் மறைக்கப்பட்டிருக்கும் போது, அவனது செயல்களின் நன்மை, தீமைகள் பற்றி அறியாமல், ஆராயாமல் செயல்கள் நடந்து விடுகின்றன. அறிவை மயக்கத்தில் ஆழ்த்தி எண்ணத்தைச் சிதறடிக்கச் செய்து விடுகிறது. அதனால் எதையும் யோசனையுடனும், பிறருக்குத் தீமை ஏற்பட்டு விடாமலும் காரியமாற்ற வேண்டும். லக்ஷ்மணா, உன்னுடைய காண்டீபத்தின் வல்லமை பற்றி நன்கறிவேன். அதற்கு இது சமயமல்ல! சத்தியத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கின்றது. எனவே நீீ ஆத்ம அறிவால், தூய்மையும், சாந்தமும் அடைவாயாக. உனதறிவு சூரியனைப் போன்று பிரகசிக்கட்டும்” என்று அன்புடன் ராமர் இளையவரிடம் கூறவும் அவர் சாந்தமடைந்தார். பிறருக்காகவே  வாழ்ந்திருந்த ராமபிரான், தனது குடும்பத்திலும் துயரத்திற்கு ஆளாகித் தவித்த அனைவருக்கும் சாலப் பொருத்தமான விமோசனங்களை அவர் தேடித்தந்ததோடல்லாமல், பண்பாட்டிற்கும் உறைவிடமாக இருந்தார் என ராமகாவியம் இயற்றிய பள்ளி கொண்ட ஆஞ்சநேயர் குறிப்பிடுகின்றார். வனவாசம் செல்வதற்கு முன்னால் ராமலக்ஷ்மணர் இருவரும் தங்களுக்குச் சொந்தமான செல்வத்தையெல்லாம், அயோத்தி மக்களுக்கு வாரிவழங்கினர். கைகேயி மீது தசரதச் சக்கரவர்த்திக்கு அளவு கடந்த அன்பிருந்ததால் , கௌசல்யாதேவி, சுபத்திரை இருவரிடமும் உதவிக்கு ஆட்கள் அதிகம் இல்லாமல் செல்வாக்குக் குறைந்து இருந்தனர். எனவே எதையும் தைரியமாகச் சமாளித்து வாழப் பழகிக் கொண்டனர்.

 

கைகேயியின் தீமையான குணங்கள் ராமர் மீது பொறாமை கொள்ளச் செய்து விட்டது. அத்துடன் அரச ஆபரண உடைகள் நீக்கி மரவுரிதரித்த கோலத்தைக் காண அவள் மனம் மிகுந்த ஆவல் கொண்டது. சிலருக்குப் பிறறை சிறுமைப்படுத்திட, அதனைக் கண்டு ரசித்திட எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் ராமபிரானோ வனம் வாழும் தவ ரிஷிகளின்படி வாழ்வதற்கு ஏற்றபடி தன்னை உருவாக்கிக் கொண்டார். அத்துடன் வனத்தில் அரக்கர்கள் தொல்லை இருக்குமாதலால், தங்களின் குரு வஷிட்டர் பெருமானிடம் கொடுத்து வைத்திருந்த மந்திர அஸ்த்திரங்களை, அவரது நல்லாசிகளுடன் பெற்றுக் கொண்டு புறப்படத் தயாராயினர்.

வனயாத்திரை செல்லும் மூவரும் ஆலம் பால் கொண்டு தலைமுடியில் தோய்த்துத் திரித்து ஜடாமகுடமாக  அணிந்தனர். அணிமணி, பட்டு வஸ்த்திரங்களை நீக்கி மரவுரி ஆடைகள் அணிந்தனர். வனம்ஏகும் வனவாசிகளாகி தாயாரிடம் ஆசி பெற்றுக் கொண்டனர். தந்தை புத்திர சோகத்தில் மூழ்கி தன்னையறியாமல் பேசுவதும், மயங்கி வீழ்வதும் கண்டு சற்று தூரத்தில் நின்றபடியே வணங்கி விடை பெற்றுக் கொண்டு நகர் எல்லை வரையில் நடந்து சென்றனர். அயோத்திநகர் மக்களின் சோகம் சொல்லத்தரமன்று. ராமர் இருக்கும் இடமே அயோத்தி என்று முடிவு செய்து, நகரத்தைக் காலி செய்து விட்டுக் குடும்பம் குடும்பங்களாகத் தங்கள் மனைவி மக்களுடன் ராமரைப் பின்தொடர்ந்து  சென்றனர் .சுமந்திரர் தேரை ஓட்டி வந்த தேரில் மூவரும் அமர்ந்து கொண்டதும் வனத்திற்குத் தேர் ஏகியது. பின்தொடர்ந்த மக்களைத் திரும்பிச் செல்லும்படி ராமர் கேட்டுக் கொண்டார்.

 

குரு ஈஸ்வராலயம் நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் எழுதிய ராமகாவியம் அனைத்துமே சாப விமோசனம் மற்றும் தோஷ நிவரத்திகளைக் கூறுவதாகவே அமைந்திருப்பது வியப்பான உண்மைகள் தான். இப்போது இது ராமரின் வாழ்க்கை வரலாறு கூறும் காவியம் போல் தோற்றம் தந்தாலும் அநேக இடங்களில் சம்பாஷணைகள் மூலமாகப் பரிகாரம் மற்றும்  மனிதனுக்குப் பல விஷயங்களில் பாதுகாப்புப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. ராமாயணம் என்ற காப்பியத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் ஒன்று போல் தோன்றினாலும், நமது வாழ்விலும் தோன்றும் அநேக பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் பற்றி ஆஞ்சநேயர் ஆலோசித்கிருப்பது பல இடங்களில் காணக்கிடைக்கின்றது. தசரதச் சக்கரவர்த்தி கைகேயி கேட்ட வரத்தினால் மனமுடைந்து போனார். தனது இறப்புக்குப் பிறகும் கூட தன்னைத் தீண்டவோ, தனது முகத்தில் விழிக்கவோ கூடாது என்றவர், தனது இறப்பிற்குப்பின் நடைபெறும் ஈமச்சடங்கில் பரதன் பங்கேற்கக் கூடாது எனக கோபத்துடன் ஏசினார். தான் கௌசல்யை வசிக்கும் மாளிகைக்குச் செல்ல வேண்டும் என்று கூறவும் பணியாட்கள் அவ்விடம் கொண்டு சென்றனர். அங்கும் மன்னர் நிம்மதி கொள்ளாதவாறு கௌசல்யை தனது பங்கிற்கு  கோபத்துடன் வைது கொண்டு இருந்தாள். சிரவண சாபம் வந்ததா?

 

(நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஓம் ஶ்ரீ சுவாமியே ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button