தீமை செயலைச் செய்யாதே

325

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். 

 

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(4)

நாகவனம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு. 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தீமை செயலைச் செய்யாதே :–

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ராவணனின்  உயிர் தங்கியிருக்கும் கேந்திரத்தின் ரகசியத்தை,  சிவனோகியார் அறிந்திருந்தாலும்,  அறிந்ததை பிறரிடம் கூறிக்  கொள்ள அவரால் இயலவில்லை. காரணம் அவரிடத்தில் இருந்து வரும் சாபத்தினால் ஏற்பட்ட மறதிதான் காரணமாக இருந்து வந்தது. நளமகா முனிவர் தன்னை சந்திக்க வருவதை தியானத்தில் உணர்ந்து கொண்ட சிவயோகி அவரைத் தனியே சந்தித்து விபரம் முழுவதையும் அறிந்து கொண்டார். ராவணன் திக்விஜயம் செய்யும்  நரகலோகத்திற்கு அவனுடன் செல்லக்கூடாது என, நளமகாமுனிவரிடம் சிவயோகி கேட்டுக் கொண்டார். காரணம் அங்கு அவனுடைய உயிர் தங்கி இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்தார். ராவணேஸ்வரன்  அதனை அறிந்து கொண்டு பாதுகாப்பு செய்து விட்டால், அவனை சம்ஹரிப்பதென்பது இயலாத காரியமாகி விடும். எனவே  நளமகா முனிவர் ராவணனுக்கு அந்த  ரகசியத்தைக் கூறக்கூடாது எனக் கேட்டுக் கொண்டார். நளமகா முனிவர் உயிர் ரகசியத்தை அவனுக்குக் கூறுவதில்லை எனச்  சிவயோகியிடம்  வாக்குச் தத்தம்  தந்து விட்டார்.

 

ராவணனின் உயிர் ரகசியம் அறிந்தவர்கள் நால்வர். பிரம்மா, நளமகா முனிவர் இருவருமே கடைசி வரையில் உயிர் ரகசியம் காத்தனர். சிவயோகியாக வந்த ஆஞ்சநேயர் தனது பலத்தை தானே மறந்து விடும் சாபத்தால் ரகசியம் வெளிப்பட வாய்ப்பு ஏற்படவில்லை. ராமாயண வரலாற்றில் ராவணனது சகோதரன் விபீஷனர் மட்டுமே, யுத்தகளத்தில் அதனை ஸ்ரீ ராமர்  அறிய வெளிப்படுத்தினதால் ராவண சம்ஹாரம் நிகழ்ந்தது என அகத்தியர் எழுதிய ஏட்டின் வரலாறு கூறுவது உண்மைதான். நளமகா முனிவர்  சிவயோகியிடம் கிஷ்கிந்தா மலையில் வாலி இருக்கும் இடத்திற்குப் போய் ஸ்ரீ ராமரைச்  சந்திக்கும் வரையில்  வாழ்ந்து வரச்சொன்னார். அதற்கு சிவயோகியும் சம்மதித்தார். அவரது சுயரூபமான அனுமான் வடிவத்தில் புறப்பட்டுச் செல்லும் முன்பு ராவணனைச் சந்திக்கச் சென்றார். சிவயோகியைக் கண்டதும் ராவணன் மீண்டும் கோபம் கொண்டான். கடுமையான வார்த்தைகளால் சிவயோகியை நிந்தனை செய்து விரட்டினான். சிவயோகியோ ராவணனைப் பார்த்து , ” ராவணேஸ்வரா, கடைசியாக உன்னைக் கேட்டுக் கொள்கிறேன். நரகலோகம் செல்லும் பயணத்தை விட்டு விடு. தீமை செயல்களைச் செய்ய எண்ணாதே . நல்லோர்தம் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு சுகமாக அரசாள்வாய் ” என்றதும், சிவயோகியை மீண்டும் கோபத்துடன் நிந்தனை செய்தான்.  குருதோஷம் என்பது சகல பாவச் செயல்களிலும் அது மிகவும் கொடியது. குரு தோஷம் பெற்ற ஒருவனுக்கு மற்ற தோஷங்களும் வந்துவிட வாய்ப்புண்டு. உடனே சிவயோகி கிஷ்கிந்தா மலை சூழ்ந்த பம்பா நதிக் கரையில் தவம் செய்திடப் போய்ச் சேர்ந்தார்.

 

 அங்கு வாலி என்றொரு மன்னன் அரசாண்டு கொண்டிருந்தான். தன்னை எதிர்ப்பவர்களின் ஆற்றலில் பாதி பலத்தைக் கிரகித்துக் கொள்ளும்  வரம் பெற்றிருந்தான். கிஷ்கிந்தா நகரில் இருந்து மன்னன் வாலி, பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஆகாயமார்க்கமாகப் பறந்து சென்று, நானாவித சமுத்திரங்களில் நீராடித் திரும்ப வந்து  நாள் தவறாது சூரிய நமஸ்காரம் விதிப்படி செய்து வந்தான். இதனைக் கண்டு மனம் மகிழ்ந்த அமராவதிப் பட்டிணத்தின் மன்னன்  தேவராஜன் மனம் மகிழ்ந்து, அவனுக்கு என்றுமே வாடாத ஸ்வர்ணபுஷ்ப  மாலையை அணிவித்து, “யார் உன்னை எதிர்த்தாலும், எதிர்ப்பவனின் சரிபாதி பலத்தை இந்த மாலையானது கிரகித்து உனக்குத் தரும்”  என்ற வரமும் தந்தான். பூலோக திக்கு விஜயத்தின் போது வாலியை எதிர்த்த ராவணனின் ஆற்றலின் பாதி பலத்தை அவனும் கிரகித்துக் கொண்டான். அதுவுமல்லாமல்  தனது வாலில் பலமிழந்த ராவணனைக் கட்டி இழுத்து அலைக்கழித்தான். அவமானம் அடைந்த ராவணனும் அங்கிருங்து தப்பி ஓடினான்.  அதனால் ராவணனின் இடையூறு அற்ற அங்கு தான் தவம் செய்தலே  உத்தமம் என்று சிவயோக முனிவராக இருந்த ஆஞ்சநேயர் எண்ணினார். அவரும்  தவம் செய்து கொண்டு, ஸ்ரீ ராமன் வரவை எண்ணிக் காத்துக் கொண்டு இருந்தார். அதே வனத்தில் மதங்க மாமுனிவர் ஸ்ரீ ராமர் அவதாரம் எடுப்பதற்கு முன்பிருந்தே அவர்  வரவிற்காகத் தவமிருந்து காத்திருந்தார். வயோதிகதசையை அடைந்துவிட்ட முனிவர், ஶ்ரீ ராமரின் தரிசனத்தைக் காணாது அவரது இறுதிக் காலம் வந்து இறைவன் திருவடி நிழலை அடைந்தார். அதன் பிறகு மதங்க மாமுனிவர் ஆசிரமத்தில் சேவை சாதித்து வந்த அன்னை சபரி,  ஸ்ரீராமர் வருகையை  எண்ணி அங்கேயே தவம் செய்து கொண்டு காத்திருந்தார். அவர்களது தவம் பலிதமாகும் காலமும் விரைவில் வந்துற்றது.

 

வளம் பெறுக! அருள் பெறுவோம்!

 

(குரு ஈஸ்வராலயம் பரிகாரஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வரலாயம், பொள்ளாச்சி


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button