ஞானயோகியின் கடிதம்.

179

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

25•08•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(421) மனிதனே புனிதன் —
ஞானயோகியின் கடிதம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
S•S•M• SUBRAMANIAM,
3 • 6 • 86.

அன்புள்ள திரு M. நாகராஜன் அவர்கட்கு எழுதியது. நலம், வணக்கம்.

வரும் 7 • 6 • 86 ல் பவானியில் நம் சங்க வளர்ச்சி பற்றி ஆலோசிக்கும் கூட்டம் நடை பெற உள்ளது. உங்களுக்கு அழைப்பு வந்திருக்கலாம் என எண்ணுகிறேன்.
நேற்று சற்குரு தேவர் உங்களுக்கு கடிதம் எழுதச் சொன்னார்கள். வரும் 8 • 6 • 86 காலை எங்கள் குமாரபாளையம் வீட்டில் காலை தியானத்திற்கு உங்களை வரச் சொன்னார்கள். நீங்கள் பவானி கூட்டத்திற்கு வந்தாலும் சரி. அன்று தங்கி இங்கு காலை தியானமிருந்து விட்டுத் திரும்பலாம். அப்படி இல்லாவிட்டால் அதிகாலை முதல் பஸ்ஸில் பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு நேரே குமாரபாளையம் எங்கள் வீட்டிற்கு வரவும். இங்கு வருவது பொள்ளாச்சியிலும் யாருக்கும் சொல்ல வேண்டாம். பவானி வந்தாலும் இங்கு வருவது யாருக்கும் சொல்லாமல் வரவும். நலம்; வணக்கம்.
(கையொப்பம் — SSM)
அதி முக்கியமான விஷயமாக இருந்தால் அன்றி ஞானயோகி அவர்கள், யாருக்கும் சொல்லாமல் வரவேண்டும் என்று அவர் குறிப்பிட மாட்டார். இக் கடிதத்தில் அவர் இரண்டு முறைகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ( குறிப்பு : ஆன்மிக ஞான வழியின் முக்கியத்துவம் வாய்ந்த ஞானயோகியின் கடிதங்கள் நமது குரு ஈஸ்வராலயத்தில் போற்றிப் பாதுகாக்கப்படுறது.)

ஞானயோகி திரு.SSM அவர்கள் தாம் நிறுவிய ஞானவழியின் தியான சங்கத்தில் தமக்கு வழி காட்டும் ஞான ஆற்றலை “குரு தேவர்” என்று குறிப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அதுவே பிறகு தாம் வெளியிட்ட நூல்கள் அனைத்திலும் குரு தேவர் என்றே “ஸ்ரீ ஈஸ்வர பட்” சுவாமி அவர்களைக் குறிப்பிடுகின்றார். நமது நாகராஜன் சுவாமி அவர்கள் நமது சமய வழக்கப்படி தமது குருவைத் “தலைவர்” என்றும், “தந்தையே” என்றும் சில சமயங்களில் “குருநாதர்” என்று தான் அழைப்பார்கள். மற்றும் தமது குருநாதரைப் பற்றிய முக்கியமான உண்மைகளை இப் புதினத்தின் இறுதியில் குறிப்பிடப் போகின்றார். பேரின்ப அதிர்ச்சி தரும் தெய்வீக உண்மைகளே அனைத்தும் என்றால் மிகையாகாது. உடன் இருந்து பல ஆன்மிக விஷயங்களையும், ஈஸ்வர குமாரரின் பல தெய்வீகத் தன்மைகளை அறிந்து கொண்டவன் என்ற மெய்யுணர் வோடுதான் “மனிதனே புனிதன்” வரலாறு எழுதத் தலைப் பட்டேன். நன்றி. ஞானயோகி என்று நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் குறிப்பிடும் திரு.SSM ஐயா அவர்களைப் பற்றியும், பவானியில் அவர் நிறுவிய “சத்தியத்தின் சக்தி நிலைச் சங்கம் ” பற்றியும் நான் அறிந்து கொண்ட உண்மைகளை நமது தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களிடம் மட்டுமே பேசியிருக்கிறேன். அதனை மெய்யுணர்வுடன் கூற விரும்புகிறேன். திரு.SSM ஐயா அவர்கள் சிறந்த அறிவாளியாகத் திகழ்ந்தவர். அவர் தனது தவத்தால் அறிந்து கொண்டு கூறிய ஞானக் கருத்துக்களை தமது பெயரில் வெளியிடாமல், புகழை விரும்பாமல் உண்மைப் புகழை பிறர் அடைந்து கொள்ளட்டும் என்ற சத்திய தர்ம தயவால் வாழ்ந்தவர். அவரது நூல்களில் எல்லாம்” ஸ்ரீ ஈஸ்வர பட்டர் அருளியது” என்றும், “ஸ்ரீ ஈஸ்வர பட்டர் அருளாசிகள் பெற்றது” என்றும் எமுதப்பட்டிருக்கும். தமது தவத்தால் அறிந்து கொண்ட அநேக விஷயங்களை நூலில் எழுதினாலும், புகழ் விரும்பாத உத்தமராகவே இருந்து வாழ்ந்து மறைந்தவர். இது பற்றிய நமது தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் கூறிய கருத்துக்களையும் எழுத இருக்கிறேன். பலதரப்பட்ட அநேக ஆன்மிக உண்மைகளை வெளிப்படுத்தப் போகும் நமது சுவாமிகள் அடக்கமாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதவராக சுமார் ஆறு ஆண்டுகள், ஞானயோகி திரு. SSM சுப்பிர மணியம் அவர்களுடன் சேர்ந்து தவவாழ்வு வாழ்ந்து, தமது சற்குரு நாதரின் கருத்துக்களை மற்றும் சித்தர்கள் பற்றிய அருமைகளை வெளிப்படுத்தப் போகின்றனர். நாமும் அவர்களுடைய பிரார்த்தனை யில் பங்களிப்பு செய்வோம்.

மனித சமுதாயத்திற்கு மனதில் எப்போதும் அமைதி நிலவ வேண்டும். துன்பமற்ற வாழ்வும், உலகியல் இன்பங்களை எல்லாம் மனிதன் பெற வேண்டும். அவைகளை அடைவதற்கு ஏற்றபடி தான் மனிதனுக்கு லட்சியக் கருத்துக்கள் இருக்க வேண்டும். மட்டுமல்ல, மனிதன்
பொருளாதாரத்தில் வசதியான முன்னேற்றம் பெறவேண்டும். மனிதகுல சமுதாய முன்னேற்றத்திற்கு ஆன்மிகக் கருத்துக்கள் உதவிகள் செய்வதாக அமைந்திருக்க வேண்டும். இந்த உலகத்தில் துன்பங்களுக்குப் பிறகு தான் போக பாக்கியங்கள் கிடைக்கும் என்பதனை மனிதனுடைய அறிவு ஏற்றுக் கொள்வதில்லை. மனிதனின் மனதிற்கும் அவனுடைய உடலுக்கும் துன்பங்களை ஏற்படுத்தும் எதனையும் அவன் விரும்புவது இல்லை. காரணம் அவன்……

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button