ஞானயோகியின் அழைப்பு.

192

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்.

24•08•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(420) மனிதனே புனிதன் —-
ஞானயோகியின் அழைப்பு.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° ஞானயோகி திரு SSM. சுப்பிரமணியம் அவர்களின் மகள் திருமதி வேணியம்மாள் காமாட்சி சுந்தரம் அவர்கள் நமது சுவாமியிடம், “அப்பா உங்களைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறார். அநேகமாக அங்கே பவானியில் நடைபெறும் சங்கக் கூட்டத்திற்கு உங்களை எதிர்பார்கிறார்கள் என நினைக்கிறேன்” எனக் கூறினார். தவயோகினி திருமதி சுந்தரம்மாள் அவர்கள், “நாகராஜன் சுவாமியை எதற்காக பவானிக்கு அழைக்கிறார்கள்? இது என்னப்பா அதிசயம்? அம்மா வேணி என்னம்மா காரணம்? “என்று கேட்க, “அத்தே எனக்கு அதுபற்றிய விபரம் என்னவென்று தெரியவில்லை” எனச் சுருக்கமாக விடை பகர்ந்தார். எல்லோரும் நமது சுவாமியின் முகத்தைப் பார்த்தார்கள். அவர் மெளனமாக இருந்தார். சற்குரு நாதர் அங்கு செல்லும் நிகழ்வுகள் பற்றியும், நாகராஜன் சுவாமி 2000 – ஆவது ஆண்டுக்கும் மேல் வெளிப்பட்ட போவதும் மற்றும் ராமாயண காலத்துப் பரிகார ஸ்தலம் பொள்ளாச்சியில் தோற்றம் ஆவது பற்றியும், எந்தவொரு விஷயத்தையும் அவைகள் வெளிப்படும் வரையில் யாரிடமும் கூறிடக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனால் நமது சுவாமி பற்பல முக்கியமான செய்திகள் பேசப்படும் போது அவர் மெளனம் காப்பது வழக்கம். பிறகு,” நமது் பலம் எது? பலவீனம் எது? “என்பது பற்றிக் கூற வேண்டும் என நமது சுவாமியின் கருத்தைக் கேட்டிருந்தார்கள். முன்பு ஒருமுறை அதற்குரிய பதிலைக் கூறியிருந்தார். திரும்பவும் அதே வினா கேட்டப்பட்டதால் அதனை விளக்கமாகப் பேசினார். ” நமது வேதங்களில் ஆதி முனிவர்கள் தங்களது குருநாதர் களிடம் கற்றுக் கொண்ட பாடங்களில் மிகவும் முக்கிய விஷயமாகவும், பலவீனமாகவும் கருதப்படுவது, ‘நம்மை எதிர்பார்த்து வாழ்கின்றவர்களில், யாராவது ஒருவருக்கு நம்மால் நன்மைகள் செய்ய முடியும்’ என்று எண்ணுவதே பலவீனம் என்று கூறியுள்ளனர். இது ஒன்றே உலக பந்தங்கள் யாவற்றிற்கும் மூலகாரணம் என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் பற்றின் வழியாகவே துன்பங்கள் உண்டாகின்றது.”

“மற்றும் இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜீவர்களில் யாரேனும் ஒருவர்கூட நம்மை எதிர்பார்த்து வாழவில்லை என்பதை அடிக்கடி மனதிற்கு எடுத்துக் கூறவேண்டும். இதனை நமது ஞானியர்கள் வேதங்களில் இயம்பி உள்ளார்கள். மேலும் கூறுகிறார்கள், ஒரு பிச்சை ஏற்பவன் கூட நம்முடைய கருணையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லையாம்! நமது உதவியை எதிர்பார்த்து ஓர் உயிர் கூட வாழவில்லையாம்! அனைத்தும், இயற்கையில் இறைவனை நம்பியே வாழ்ந்து கொண்டுள்ளனவாம் அனைவருக்கும் இறைவன், பிரபஞ்ச இயற்கையின் வாயிலாகவே உதவிக் கொண்டே இருக்கின்றார். நம்மை எதிர்பார்த்து ஒரு உயிர் கூட வாழ வில்லை என்பதே உண்மையாக இருக்கிறது. மனிதர்கள் இந்த உலகில் இல்லா விட்டாலும் கூட இயற்கை உதவிக்கொண்டே தான் இருக்குமாம்! நமக்காகவோ வேறு யாருக்காகவோ இறை சக்தி இயற்கையின் வழியில் உதவுகின்ற போக்கு நிற்காதாம். இதிலிருந்து மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன தெரியுமா? ‘மற்றவர்களுக்கு நாம் உதவிகள் செய்வது என்பது, நம்மை நாமே பண்படுத்திக் கொள்வதற்காக, இறைவன் இயற்கையின் வாயிலாக நமக்குத் தருகின்ற நல்லதொரு வாய்ப்பு, அல்லது நமக்குத் தரப்படுகின்ற மிகப் பெறும் பேறு’ என்றே தானம் செய்வதை நமது வேதம் அருமையாக, உள்ளங்கையில் நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக உரைக்கின்றது. மனிதனின் கர்வத்தை அவன் மூலமே உடைத்து எறிகின்றது. அத்துடன் நமது உதவிகள் பிறருக்குத் தேவையாக இருக்கின்றனவா? அதனால் அவருக்கு நம்முடைய உதவியினால் பயன் பெறுவாரா என்பதை அறிந்த பின்னரே ஒன்றைக் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கூறுகிறது. வேதங்களின் சாரத்தை நன்கு கற்றறிந்த, ஆழ்ந்து சிந்திக்கின்ற, மன ஒருமைப்பாடு மிகுந்த, இயற்கை சுதந்திரத்தை மதித்து வாழ்கின்ற, நல்ல வழியில் நடக்கின்ற, சான்றோர்கள் வழியைப் பின்பற்றி நடந்தால், நமது கடமைகள் என்ன? குறிப்பிட்ட சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதைப் பற்றிய எவ்வித சந்தேகங்களும் நமக்கு எழாது. ஆகவே நல்லோர் வழி செல்தல் என்பதே எளிமையும், சுலபமானதும், சிறப்பானதும் ஆகும்” என்றார். இந்த வேத விளக்கத்தைப் பற்றிய உண்மைகளைப் புகழ் விரும்பிகள் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டினாலும், குரு நாதனின் வழி செல்வோர் வரவேற்றார்கள். “உதவிகள் செய்தால் சுய விளம்பரம் வேண்டாமா? ” என்று முணுமுணுப்பதும் பின்னால் இருந்து கிசுகிசுப்பதும் சுத்தமாகக் கேட்டது. பத்துப் பைசா கற்பூரத்தை நான்காக உடைத்துப் பத்து நாளைக்குப் பகவானுக்குக் காட்டிப் பகவானைத் திருப்திப் படுத்தி வரம் வாங்கி விடுவோம் என்று சவால் விடுபவர்களுக்கு அல்ல வேதாந்தங்கள்.

( மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி!வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button