உண்மையான உயர்வு எது?

240

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

26•08•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(422) மனிதனே புனிதன் —- உண்மையான உயர்வு எது?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உன்னதமான இறைசக்தியான பராபரம் ஒவ்வொரு மனிதரின் உள்ளேயும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இதனை மனிதன் அறியாமல் இருக்கிறான். மேலும் அதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவதும் இல்லை. அறிந்து, உணர்ந்து, தெளிந்து கொள்பவர் உயர்வு நிலையை நோக்கிப் பீடு நடை போடுவார். புனித எண்ணம் அவர்களுக்குள் உடன் தோன்றி விடும். சாதாரணமாக மனித வாழ்க்கை இன்பத்தை அடிப்படையாகவும், அதனைப் பெற்று அனுபவிப்பதையே நோக்கமாகவும் இருக்கிறது என சான்றோர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாகத்தான் இறை இன்பத்தை மனிதன் நாடுவதில்லை. அதற்கு மனிதனின் அச்சமே காரணமாக உள்ளது. இறைவனை நாடிச் சென்று விட்டால் எங்கே தனது இன்பத்தையெல்லாம் இழந்து விடுவோமோ என்ற தவறான கருத்தை மனிதன் கொண்டு விட்டான். அதனால் அஞ்சுகிறான். அவனது பயத்தை ஞானியரின் கருத்துக்கள் தவறானது எனச் சுட்டிக் காட்டுகிறது. அத்துடன் உலகியல் இன்பத்தை நாடும் மனிதன், இறைவனை நாடினால் அதனால் கிடைக்கும் இன்பமானது உலக இன்பத்தை விட ஆயிரம் மடங்கு பேரின்பம் உண்டாவதை உணர்ந்து ஆனந்த அனுபவத்தைப் பெற முடியும் என உறுதிபடக் கூறுகிறார்கள். அதற்கு மனிதன் தன்னைப் பாவம் செய்தவன் என்று எண்ணக்கூடாது. பாவம் செய்தவன் என்று மனிதன் எண்ணுகின்ற எண்ணம் தான் அவன் மனதைப் பலகீனப்படுத்தி,
ஆத்மாவில் சாதிக்க இயலாதவனாக ஆக்கி விடுகிறது. பாவ எண்ணத்தை விட்டொழித்து விட்டு இறைவனை நாடுபவன் உலகில் சாதனையாளனாக, ஆசைகள் அற்றவனாக, இன்பத்தை அனுபவித்து வாழ்பவனாகப் புனிதனாக மாறி விடுகின்றான்.

வாழ்வில் பொருளாதார வசதிகளை நிறைவாக அடைந்து வாழ விரும்பும் மனிதனே,
துன்பத்தை ஏற்படுத்தும் எதனையும் அவன் விரும்பாத காரணத்தால், ஆன்மிகக் கருத்துக்களை அதன் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள முயன்று, கொள்கை அளவில் அடைந்தும் விடுகின்றான். ஆனால் மேற் கொண்டு ஆன்மிக விஷயங்களைத் தொடந்து கடைப்பிடிக்காத காரணத்தால், மன உறுதியில் இருந்து பிறழுகிறான். மனக்கட்டுப் பாட்டை இழந்து விடுகின்றான். பலம் அவனை விட்டுப் போய் விடுகின்றது. அறிவின் தீவிரம் குறைந்து போய் அவனது கம்பீரத் தன்மை, வாலிபத்தின் மிடுக்கை இழந்து நிற்கின்றான். தனது சாதனைகளை மறந்து ‘பகவானே, பகவானே’ என்று புலம்பிக் கொண்டே இருக்கிறான். இதனை வேதரிஷிகள் உறுதிபடக் கூறுவது டன், இறைவனின் ஆன்மிகக் கருத்துக்களை அனுஷ்டிப்பதால் உலக இன்பத்தை அடைய முடியும் என்றும் கூறுகிறார்கள். அதற்கும் மேல் இறைவனின் உடன் இருந்து பேரின்பத்தை அனுபவிக்க எண்ணுபவன், ஆசைகள் அற்றவனாகவும், மிகுந்த அறிவாளியாகவும், அடக்கம் உடையவனாகவும் இருந்து வாழ்வாங்கு வாழ்கின்றான். நமது சுவாமி ஸ்ரீ நாகராஜன் அவர்களிடம், “கிராமத்தை விட்டு வெளியே செல்ல எண்ணம் கொண்டு விட்டீர்கள். உங்கள் மனநிலையைப் பற்றிக் கூற வேண்டுகிறோம்” என்று கேட்டதற்கு அவர், ” குரு நாதரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு செல்கின்றேன். பவானிதான் என்ன? எங்கிருந்தாலும் தான் என்ன? என்னுடைய உள்ளத்தில் குருவருளுடன், திருவருளும் நிறைந்து என்றும் நிலையாக உள்ளது. எனது சித்தத்திலோ சாந்தம் நிறைவாக இருப்பதாக எண்ணுகிறேன். குருவருள் துணை கொண்டு என்றும் இறை சிந்தனையை மறக்காது வாழ்வேன். இறையருளுடன் சத்திய, தர்ம, ஞாயத்தைக் கடைப்பிடித்து வருவேன். எந்த தீமை சக்திக்கும் அடிபணியாமல் தைரியத்துடனும், விவேகத்துடனும் இருப்பேன். துன்பங்களைக் கண்டு அஞ்ச மாட்டேன். இயற்கைக்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டேன். எக்காரணத்தை முன்னிட்டும் பயந்து நடுநடுங்க மாட்டேன். கையேந்திப் பிழைக்க மாட்டேன். என்னால் முடிந்த வரையிலும் உழைத்து உண்பேன். எனது மனதினைக் காத்துக் கொண்டு தவவாழ்வில் மகிழ்ந்து இருப்பேன்” என்றார். எங்களுக்கோ இன்ப அதிர்ச்சியாக இருந்தது. “சுவாமி எப்போது திரும்பி வருவீர்கள்? ” என்று கேட்டதற்கு,

“சற்குருநாதர் ஈஸ்வர பட் சுவாமியின் கட்டளைப்படி தான் அனைத்தும் நடைபெறுகின்றது. சத்திய வாக்கு ஒன்றினுக்கு அங்கே நான் கட்டுப்படப் போகின்றேன். அந்தக் காலம் நிறைவடைந்த பிறகு தெய்வீகப் பரிகார ஸ்தலம் ஒன்றை சற்குரு நாதர் நிறுவப் போகின்றார். அது ஏற்கனவே ஸ்ரீ வித்யா பீடத்தில் சித்தர்களால் உண்டாக்கப்பட்டு விட்டது. அதன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள எனது குருநாதர் உத்தரவு போட்டு விட்டார். உலகம் அறிய வெளிப்படுத்தப் போகும் அதன் பெயர் குரு ஈஸ்வராலயம் ஆகும்” எனச் சுவாமி அவர்கள் கூறினதும் மேலும் மேலும் இன்ப அதிர்ச்சி அடைந்து உவகை கொண்டோம்.
நமது சுவாமியிடம் எங்களுக்குப் பிடித்த இன்னெரு விஷயம் ஒன்று இருக்கிறது. அதாவது..

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button