குற்றம் குறைகளை நீக்குதல்.

199

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

23•08•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(419) மனிதனே புனிதன் —-
குற்றம் குறைகளை நீக்குதல்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இறைவனாகிய பராபரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொள்ள வேண்டும். நம்பிக்கை இழப்பவர்கள், இறைவனை விட்டு விலகிச் செல்பவர்கள், இவர்களிடம் சுயநலம் மிகுந்து இருக்கும். அதனால் அவர்கள் அறிவு குறைபாடு உடையவர்கள் என்பது ஞானியர்கள் வாக்கு. அவர்களிடமும் இறையருள் நிறைந்திருந்தும், இறையருள் சக்தியை நிந்தனை செய்வதனால், அறிவின் பிரகாசம் ஒளி குன்றி அங்கே சுடர்ந்து கொண்டிருக்கும். அதனால் தான் அவர்கள் மற்ற வர்களுக்குத் தீங்கு செய்பவர்களாக மாறி விடுவார்கள். தாங்கள் செய்வது தவறு என்பதை அறியாதவர் களாகவே இருந்து விடுகிறார்கள். பராபரமாகிய இறைவன் மீது தங்களின் எண்ணத்தைச் செலுத்தித் தங்களின் தவறுகளைத் திருத்திக் கொண்டு, நல்லறிவு பெற்று வாழும் நல்வழிகளாக, இறையருள் இயற்கையாக அளித்துள்ள ஆற்றல்களை மறந்து போய் விடுகிறார்கள். குற்றங்களே அவர்களுக்கு ஞாயங்களாகத் தென்படுவதினால், பராபரமான இறைவனின் கோபத்திற்கும் ஆளாகித் துன்பத்தில் உழல்கிறார்கள். குறுகிக்கொண்டு வரும் காலத்தில் வாழுகின்ற நாம் இறைசக்தியின் நாட்டத்தை செயல்படுத்திக் கொண்டு நல்லறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டும்.

இறைவனை மறந்து விடுபவர் களின் உள்ளத்தை தீமை சக்திகள் வசப்படுத்திக் கொள்கின்றன. தீமை சக்திகள் உள்ளத்தில் குடிவந்தவுடன் தவறான வழிகளில் செல்லவும், ஒழுக்கக் கேடான வாழ்வியலில் வழி நடத்தப்படுகிறான். அதனால் இறைவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அறிவின் விழிப்புணர்ச்சியை இழந்து விடுகின்றான். அன்பும், பண்பும், கனிவும், பாசமும், தைரியமும், அமைதியும் மனிதனை விட்டுப் போய் விடுகின்றன. ஆளுமை என்னும் சக்தி குடும்பத்தில் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது. அதனால்
குடும்ப ஒற்றுமை குலைந்து நிம்மதியை இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது. அநேகம் பேர் தங்களின் தவறான முடிவால் இறைவன் நம்பிக்கையை விட்டு விலகிச் சென்று விடுகிறார்கள். ஒழுக்கமற்ற, கண்ணியம் குறைந்த வாழ்வை, தீமை சக்தி அவர்களுக்கு வழங்கி ஆளுமைப் படுத்தித் தனக்கு அடிமையாக்கி விடுகிறது. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் மதியாது நடந்து கொண்டு அழிவுப் பாதையில் அடியெடுத்து வைத்து ஆணவமுடன் செல்கின்ற்ர்கள். அவர்களின் தவறுகளைப் பராமரமாகிய இறை சக்தி ஒரு போதும் மன்னிப்பதில்லை. இறைவனை எண்ணித் தியானம் செய்திடும் நல்வழிக்கே மனிதன் வந்து விட்டால், தீமை சக்திகளைப் பராமரமாகிய “ஆண்டவன் மீது ஆணை, விலகிச் சென்று விடு ” என விரட்டி விடலாம் என்று தகைமைசால் ஆன்றோராகிய ஞானியர்கள் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.

நமது நாட்டமும், தியானமும் இறைசக்தியின் மீது இருந்து விட்டால் சகல செள பாக்கியங்களுடன், இறைவன் வாழவைக்கக் காத்துக் கொண்டு இருப்பதையும் அறிந்து கொண்டிடலாம். பகவானாகிய இறைவனின் கருணா கடாட்சத்தை எண்ணிப் போற்றி வணங்கி வருபவர்களுக்கு அறியாமை நிச்சயமாக விலகி விடும். எல்லா உயிர்களுள்ளும் இறைவன் இருப்பதையும, அங்கு இறைவனது அருளாட்சி நடை பெற்றுக் கொண்டிருப்பதையும், அறிந்து கொள்கின்றவர்களுக்கு இறைவனை அடையும் வழி மார்க்கங்களை உணர்த்த ஒரு நல்ல குரு தேடி வந்து அடைவார், இது உண்மையே. நமது நாகராஜன் சுவாமி அவர்கள் வாழ்விலும் சற்குரு நாதர் அநேக ஆன்மிக உண்மை களையெல்லாம் உவந்தூட்டினார். குமாரபாளையம் ஞானயோகி திரு SSM.சுப்பிரமணியம் ஐயா அவர்களைச் சந்தித்து அவர் கேட்கும் ஆன்மிக ஞான வினாக்களுக்கு விடைகளைக் கூறும்படி ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தார். அத்துடன் மறைக்கப்பட்ட தெய்வீகப் பரிகார ஸ்தலம் ஒன்றைக் கூறிப்பிட்டு, அது வெளிப்படுத்தப்படும் வரை நீ தியானத்தில் ஆழ்ந்து இருக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். கடிதம் ஒன்று உன்னைத் தேடி வரும், புறப்படத் தயாராகிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். ஒரு வருட காலம் தனது சமாதிக்குள் இருந்து தவம் புரிந்து விட்டு வருவேன், அதுவரையிலும் உன்னிடம் தொடர்பில்லாமல் இருப்பேன் என்றும், பழனி சமாதியில் பிரதமசீடர் நடராஜா அவர்களைப் பவானி அழைத்து வந்து அறிமுகப்படுத்துகிறேன் எனவும் கூறியிருந்தார். நமது சுவாமி அவர்களை பவானி புறப்பட்டுச் சென்ற வருடம் 1986, ஜூலை மாதம். பொள்ளாச்சி தியான சங்கத்தில் வாராவாரம் நடைபெறும் கூட்டம் அன்று மகாலிங்கபுரம், வக்கீல் ஐயாவின் துணைவியார் தவயோகினி திருமதி சுந்தரம்மாள் வீட்டில் நடை பெற்றது. அந்த தியானக் கூட்டத்தில் கலந்து கொண்டார், ஞானயோகி திரு. SSM. ஐயா அவர்களின் தவப்புதல்வி திருமதி வேணியம்மாள் காமாட்சி சுந்தரம் அவர்களாவர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button