ஜோதிட ஞானம் துலங்கப் பரிகாரம்.

213

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

11•08•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(407) மனிதனே புனிதன் —
ஜோதிட ஞானம் துலங்கப் பரிகாரம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாகராஜன் சுவாமி அவர்கள் கூறுவார், “பரிகாரம் கண்டு இறை அருளினால் விமோசனம் பெற்ற ஆத்மாக்கள், தாங்கள் விரும்பினால், நிர்வி கற்ப சமாதி யோகத்தில் அமர்ந்து கொள்ள முடியும். அவர்களுக்கு உயர்ந்த உயிர்த் துடிப்புடன் கூடிய மிகவும் அரிதான சக்தி இறை அருளால் நிறைந்திருக்கும். உடலை சீராக, இயங்க வைத்து தவத்தில் ஈடுபட்டு சிரஞ்சீவியாக ஜீவித்திருப்பார்கள். ஆலயங்களில் சமாதி யோகத்தில் இருக்கும் அநேக சித்தர் பெரு மக்களை நம்பிக்கையுடன் நாம் அணுகினால், நாம் விரும்பும் வாழ்வை உருவாக்க ஆசீர்வதிப்பார்கள். அதற்கு இறைவன் இவர்களுக்கு அருள் ஆற்றலை வழங்கியிருப்பார். இறையருள் பெற்ற இவர்களைச் சந்தேகம் கொண்டு அணுகினால், அல்லது புறக்கணிப்பதால், நாம் வாழ்வில் அடைந்து கொண்டிருப்பதாக எண்ணும் எதுவும் மாயை என்ற தன்மையாக அனைத்தும் விலகிச் சென்றுவிடும். சந்தேகம் கொள்வதும், மனம் போல் வாழ்வு என்பதும் உண்மையாகி விடும். மனதினுள் தோன்றும் சந்தேகங்கள் அனைத்தும் விரட்டப்படும் போதுதான், இறைவனது அருள் தானாகவே நம்மைத் தேடி வந்து சேர்கிறது. மனிதனின் தனது எண்ணத்தின் மூலமாக அவன் தேர்ந்தெடுக்கும் வாழ்வை உருவாக்குவதற்கு நிர்விகற்ப சமாதியில் இருக்கும் சித்தர்கள் உதவி செய்வது வழக்கம். இறைவனின் பிரதிநிதியாகச் செயல்படும் ஆற்றல் பெற்ற இவர்களைப் புரிந்து கொள்பவர்கள், உணர்ந்து கொள்பவர்கள், இவர்களை எண்ணி மகிழ்ச்சி கொள்பவர்கள் அனைவருக்கும், அவர்கள் எந்த விஷயத்தைப் பற்றித் தீர்மானித் தாலும் அதனைப் புரிந்து கொள்ளும் தன்மை ஏற்பட்டு விட அருள்வார்கள்.”

” இறைவனை எண்ணிப் போற்றுவதை இவர்கள் வரவேற் பதுடன், தியானம் செய்வதன் மூலம் நமது ஆத்மாவின் ஞானத்தை அதிகரிக்கச் செய்து, நம்மை வழி நடத்துவதுடன், பக்கத்துணையிருந்து பாதுகாத்தும் வருவார்கள். மகாஞானியர் களாகிய சித்தர் பெருமக்களை எண்ணி ஆத்ம ஞானம் பெறுபவர்கள், மாறுபட்ட எண்ணங்களை விடுத்துத் தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றிலும் இருப்பதிலும் கவனம் வைத்து, மற்றவர்களிடம் மரியாதையுடனும், நன்றி உணர்வுடனும் இருப்பார்கள். தன்னைத் தான் நேசிக்கும் அன்பையும் பெற்றவர்களாக விளங்குவார்கள். இறைவன் மீது கொண்ட நம்பிக்கை ஒன்றே சகல செளபாக்கியங்களையும் பெற்றுத் தந்து விடும் என்பது தான் பிரபஞ்ச இயற்கையின் எழுதப்படாத உண்மை விதி” என நிர்விகல்பத்தில் இருப்பவர்கள் உணர்த்தியதை நாகராஜன் சுவாமி அவர்கள் இயம்பினார். அத்துடன் சற்குரு நாதர் கூறிய ஜோதிடப் பரிகாரம் திரு ஷண்முகம் அவர்களுக்குக் கூறினார்.

ஜோதிட ஞானக்கலையில் சிறக்கப் பரிகாரம் :-
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
போதாயன அமாவாசை அன்று, அறிவு விருத்தியை ஏற்படுத்தும் சூரியனைக் கலசத்தில் நீர் நிரப்பி சங்கல்பம் செய்யவும். அதனுள்
நன்றாக முற்றிய, வடக்கு நோக்கிச் செல்லும் வெள்ளெருக்கன் வேர் ஒன்றை சூரிய கலச நீரினுள் போடவும். பிறகு கிரக பாதிப்புக்களை விலக்கும் சந்திரன் கலசம் வைத்து அதில் நீர்விட்டு சங்கல்பம் செய்யவும். அதில் வெள்ளை நிறப்பூ பூக்கும், கல்யாண முருங்கையின் வடக்கு நோக்கிச் செல்லும் முற்றிய வேர் ஒரு துண்டு, சந்திரகலச நீரினுள் போடவும். (இந்த வேர்களை அமாவாசை அன்று விரலிமஞ்சளால் காப்புக் கட்டித் தனது நிழல் வேரின் மீது படாமல் எடுத்துச் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வேரை எடுக்கும் போது கத்தி போல் உள்ள பாறைத்துண்டு ஒன்றினால் வேரை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் நீர் தெளித்து தூபதீபம் காட்டி மூலிகை சாபநிவர்த்தி சொல்லி எடுப்பது விஷேசம்.)
கலசத்திற்கு முப்புரிநூல், மாவிலைக் கொத்து, தேங்காய் வைக்கவும். வாழை இலையில் அல்லது ஒரு தட்டில் அரிசி, தர்பை , வில்வம், அறுகு வைத்து ஓம் என்ற பிரணவம் எழுதி அதன்மீது கலசங்களை அமைத்துக் கொள்ளவும். இக் கலசங்களுக்குத் தூபம், ஆம்பல், சந்தனம், சாம்பிராணி இவை களுடன் நெய் கலந்து இடவும். பூஜையில் அமரும் போது சிவப்புக் கரை வைத்த வெள்ளை வஸ்திரம், அதே கரை வைத்த வெள்ளை நிறத்தில் மேல் துண்டு அணிந்து கொள்ளவும். இதனால் புகழும், பாராட்டுதல்களும் கிடைக்கப்பெறும். இந்தக் கலசங்களுக்கு நைவேத்யமாக, நல்ல நினைவுகளுடன் ஆற்றல் தந்திடும் விளாம்பழம், ஆயுளுடன் ஞானம் சிந்திக்கும் நாவல் பழம், கலைமகள் கடாட்சத்துடன் நினைவின் ஆற்றலைப் பெருக்கும் நறுமணத் தேன், இவைகளைப் படைக்க வேண்டும். இதன் தொடர்ச்சி….

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button