இறைவனால் முடியாதது ஏதுமில்லை!

140

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

10•08•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(406) மனிதனே புனிதன் —
இறைவனால் முடியாதது
ஏதுமில்லை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° அன்று வெள்ளிக்கிழமை மாலை நேரம் பூஜைப் பொருட்க ளுடன் பூஜாரிகளும், அன்னதானப் பொருட்களைச் சுமந்து கொண்டு வனவேடர்களும், மற்றும் சில பக்தர்களும் வந்திருந்தனர். கோயிலின் பின்புறம் அடுப்பு மூட்டி கோதுமை ரவை உப்புமா தயார் செய்யும் வாசனையில் எல்லோருக்கும் பசி உணர்வு உண்டாக்கி விட்டது. மலைவாழ் வனவேடுவ வாலிபர்கள் ஓடையில் இருந்து குடங்களில் நீர் எடுத்துச் சுமந்து வந்து அண்டாக்களில் நிரப்பிக் கொண்டிருந்தனர். பக்தர்களும் வனவேடுவர்களுமாகச் சுமார் இருபது பேர் இருந்தனர். சாப்பிட அழைத்து அனைவருக்கும் வாழை இலையில் சூடாக ஆவி பறக்கும் உப்புமா பரிமாறினார் ஆசிரியர். தொட்டுக் கொள்ள ஊறுகாய். தேவைப் படுபவர் களுக்கு நெய் வேறு ஊற்றப் பட்டது. இது வனமா? வீடா? விருந்து உற்சவ கொண்டாட்டம் அது! பூஜாரிகளின் அன்பான உபசரிப்பு எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. சாப்பிட்டு முடிப்பதற்குள் பனை வெல்லம் இட்டுத் தயாரித்த தேநீர் பெரிய பாத்திரத்தில் வந்தது. வனவேடர் களின் சந்தோஷம் சொல்லி மாளாது. ஜோதிட நிபுணர் இந்த உபசரிப்பில் மெய்மறந்து போனார். பூஜாரிகளுக்கு நமது சுவாமி அவர்களை நன்கு பரிச்சயம் ஆகி இருந்தது. பல தடவைகள் கோயிலுக்கு சுவாமி வந்து செல்வதால் அறிமுகம் தேவைப்பட வில்லை. அங்கு பல முறை சேவைகள் செய்து இருக்கிறார். அன்று இரவும் காட்டுப் பன்றிகளின் கூட்டம் மிக அதிகமாக இருக்கவே, விஸ்வாமித்திர மகரிஷியின் தவ மேடையின் மீது சுவாமியும், ஜோதிடரும் அமர்ந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பிறகு திரு.ஜோதிடர் ஐயா பரிகார விளக்கம் கேட்கலானார். அவர் கேட்கப் போவதைப் புரிந்து கொண்டு விட்ட நமது சுவாமி அவர்கள், ” ஐயா, பரிகாரமும் அதன் செயல் முறைகளும், இறையருளால் பேரருள் இயற்கையின் சக்தியில் இருந்தே வெளிப்படுகிறது. நாம் இங்கு எதையெல்லாம் உருவாக்குகின்றோமோ, அவை யெல்லாம் இறைவனது சிருஷ்டி ஆற்றலில் இருந்துதான் செயற் படுக்கிறது. அதனை ஒப்புக் கொள்ளும் புனித ஆத்மாக்கள் மட்டுமே இறைவனால் இங்கு அனுப்பப்படுகிறார்கள். பலவழிகளில் பூமிக்கு வந்து சேரும் இவர்கள் பற்பல ஆன்மிக காரியங்களில் ஈடுபடுகிறார்கள். தெய்வீகம் மிக்க அவர்கள் மனித சமுதாயத்தில் கலந்துகொண்டு இறைப்பணியை ஆற்றுகிறார்கள். இப் புனிதர்களைச் சந்திக்கும் பேறு அனைவருக்கும் ஏற்பட்டு விடுவதில்லை. பொது நல சேவைகளைப் பிரதிபலன் பாராது செய்து வருவார்கள். பொது நலன் கருதி பரிகார ஆலயங்கள் அமைப்பது, பிரார்த்தனைக் கூடங்களில் மக்களுக்கு இறையருள் நம்பிக்கையை ஏற்படுத்துவது,
உடல்நலம் கருதி தெய்வீக மருத்துவ சேவைகள் செய்து வருவது, அறிவு விருத்தி செய்யும் பணிகள் எனப் பல வழி களில் செயல்படுவார்கள். மற்றும் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்திட அவர்களுக்காகத் தவமியற்றி இறையருளைப் பெற்றுத் தருவார்கள். அற்புதமாக கடும் நோய்களைக்கூடக் குணப்படுத்தி விடுவார்கள். அன்னதானத்தை இறைவன் அருளுடன் நடத்துவார்கள்.”

” இவர்களுக்கு ஏதேனும் துன்பங்களை, மக்கள் விரும்பிச் செய்தாலும், இவர்கள் அதனை ஏற்காத பட்சத்தில் இறையருள் இவர்களைக் காத்து வரும். சில தெய்வீகப் பிறவிகளுக்கு அகால மரணம் ஏற்பட்டாலோ, அல்லது சாபங்கள் ஏற்பட்டு இறந்து விட்டாலோ, இவர்களுக்காக யாராவது ஒருவர் முன்வந்து பரிகாரம் தேடினால், விமோசனத்தைச் செயற்படுத்த இறைவன் நல்வழியை உருவாக்குகிறார். அகால மரணம் உற்ற, எங்கிருந்தோ வந்த தெய்வீகப் பிறவிகள் விமோசனத்திற்காகப் பழைய உருவை எடுக்க விரும்பினால், அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுடைய எண்ணப் பதிவுகளை, புலன்கள் எதுவாயினும் எதுஒன்றாயினும் அவைகளை உருவத்தோடு நிற்க வைக்கும் ஆற்றலை இறைவன் தந்து விடுகிறார். செயற்படும் செயலை உருவாக்குகின்றார். இறைவனால் ஆகாதது எதுவுமே இங்கு இல்லை.” இப்படித்தான் ஜோதிட நிபுணர் திரு.ஷண்முகம் ஐயா அவர்கள் விமோசனம் தேடிவந்ததன் காரணமுமாகும். “இறை சக்தியின் அருளால் தனது பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளும் இவர்கள் இறையருளுடன் சேர்த்து வாழத்தீர்மானிக் கின்றார்கள். பரிகாரத்தால் விமோசனம் பெற்று இறையருளுடன் தங்களது முன்னேற்றத் திற்குள் பெரும் மாற்றங்களை உருவாக்கிக் கொள்வார்கள். சாப விமோசனம் பெற்றதும் இவர்கள் தங்களது விருப்பு, வெறுப்புக்கள்
அற்ற உணர்வுடன் செயற்படத் துவங்குவார்கள். இறைவன் அருள் மீண்டும் இவர்களிடம் இருந்து பிரதிபலிக்கத் துவங்கி விடுவதால், நிர்விகற்ப சமாதி யோகத்தில் அமர்ந்து கொண்டு விடுவார்கள். இவர்களது சூழலை, உலக ஜீவர்கள் நல்ல வாழ்வை அன்புடன் நேசிக்கத் துவங்கி விடுவார்கள். இங்கிருப்பவர்கள் மட்டுமல்லாது இறந்து போன ஆத்மாக்களையும் எண்ணுவார்கள்.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button