உலக ஒற்றுமைக்கு வழி?

192

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

27•08•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(423) மனிதனே புனிதன் —
உலக ஒற்றுமைக்கு வழி?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் உலகத்தின் நன்மைக்கு மாறுபாடாக நடந்து கொள்ளுதல் கூடாது என்று அடிக்கடி கூறுவார். உலக நன்மைக்கு மாறாக நடப்பவர்களால் உலக ஒற்றுமை குலைந்து போகும் தன்மையும், அதனால் ஆபத்தும், அங்கஙீனம் ஏற்படும் சூழலும் உருவாகி விடும் என்பது சற்குருநாதர் கருத்தாகும். இந்த உண்மைகளை அவர் வெளிப்படையாகவே கூறினார். சற்குரு நாதர் கூறிய உலக ஒற்றுமை வழியின் சாரம் இதோ.
“மனித வாழ்க்கையில் நடந்து விட்ட, நடைபெறாத சம்பவங்கள் குறித்து அதே சிந்தனையில் வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். மனக்குறையுடன் அதே கவலையுடன் வருந்திக் கொண்டும், அலைந்து கொண்டும் திரிவார்கள். உலகத்தின் நன்மைக்கு மாறுபாடான செயல் இதுதான் என்பது குருநாதரின் கருத்தாகும். இந்தச் செயல் மூலம் வெகு வேகமாகப் பரவும் எண்ணத்தின் அலைகள் உலகம் முழுவதும் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் துக்கத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும். வருத்தப் படுபவர்கள் அனைவரிடமும் சென்று அவர்களின் துக்க நிகழ்வுகளில் தனக்கு ஒத்ததைக் கவர்ந்து கொண்டு, எங்கு புறப்பட்டதோ, அதே இடத்திற்குச் கொண்டு சேர்த்து மேலும் துக்கத்தை அதிகரிக்கச் செய்து கொண்டே இருக்கும். அநேக மக்களின் துக்க எண்ண அலைகளின் தாக்கம் அதிகரிக்க, அதிகரிக்க உலகத்தின் ஒற்றுமையை அது சீர்குலைத்து விடும். உலகத்தின் அங்கமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனித சமுதாயம், அதனை மதித்து நடக்காமல், நேர் மறையான எண்ணங்களைக் கொண்டு செயல்படாமல், எதிர் மறையான எண்ண நினைவுகளால், துக்கம், துயரம் உறுவதால், உலகின் ஒற்றுமை குறைவதால் சண்டை, சச்சரவுகள் மற்றும் உலகில் நடக்கும் யுத்தத்தால், மனிதனின் உடலுக்கும், உயிருக்கும் , அவனது உடமைகளுக்கும் அநேக சேதங்கள் ஏற்பட்டு மடிந்து போய் விடும் சூழ்நிலை உருவாகின்றது.”

” பிரபஞ்ச சக்திகள், ஜீவன்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு வாழ்ந்து வரவேண்டும், அத்துடன் பழையன கழிந்து புதியன உருவாக்கும் வளர்ச்சிக்கு, நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கி வரவேண்டும் என்பதே பிரபஞ்ச ஒருமைப்பாடு என்பதை அறிந்து அறிவாளிகளாக வாழவேண்டும். அதனை அறிந்து வாழ்வது தர்மம் என்று கூறும் சற்குருநாதர், அதனை அறிய முயலாதவனை மூடன் என்றே கூறி ஞானியர் அவனை விட்டு விலகி விடுகிறார்கள். அறிவை நாடாத, அறியாத பலர் ஒன்று சேர்ந்து தகுதி அற்றவர்களைப் போற்றுவதை விரும்பி, அவர்களை நாடிச் செல்வார்கள். தகுதி அற்றவர்கள் அவதூறு பேசுவதைப் கண்டு பயந்து வாழ்வார்கள். இது எதிர்மறை யான எண்ணமுள்ளவர்களின் போக்காகும். இப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணங்களை விலக்கிக் கொண்டு வாழ்ந்திட சற்குரு நாதர், சில வழி முறைகளைக் கூறியுள்ளார்.
உலகில் எங்கும் பரவி இருப்பது பிராணசக்தி நிறைந்த காற்றாகும். இந்தக் காற்றை உட் கொண்டு வாழும் ஜீவிதத்தில் மனிதர்கள், காற்றை இறைவனின் ஜெப மந்திரமாகிய, ஜெபத்துடன் உண்ண வேண்டும் என்று வழிகாட்டினார். இதனால் அறிவு வளர்ச்சி ஏற்படும். விசாலமான எண்ணம் உண்டாக, நேர் மறையான சிந்தனைகள் மேலோங்கி விடும் என்று சற்குருநாதர் கூறிய வாக்கு உண்மை.” நமது சுவாமி பவானி புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி ஒரு வருடகாலம் சமாதியினுள் தவம் புரிந்திடச் சென்றார். இருப்பினும் நமது சுவாமி தியானத்தில் ஆழ்ந்து இருக்கும் போது தொடர்பு கொண்டு வந்தார். தியானத்தில் இருந்த போது வில்வம், அறுகு, தர்பை, விபூதி, சந்தனம் ஆகியவற்றை நீரில் இட்டுத் தொடர்ந்து குளித்து வரச் சொன்னார். அதனால் நாகதோஷம் அண்டாது என உபதேசித்து இருந்தார். நமது சுவாமியும் அதன்படியே கடைப்பிடித்து வரலானார். மற்றொரு முக்கியமான செய்தியையும் கூறி இருந்தார். அது அறியாமை என்னும் ‘இருள்’ பற்றியது. இதனை வாசிப்பவர் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயமாகும். வாழ்க்கையில் பற்பல செய்திகளைக் கற்பதற்கு முன்பு அறியாமை இருளில் இருந்தவர்கள், கற்றுக் கொண்ட பிறகு, அறிவின் ஒளி விருத்தி பெற்ற பிறகு, அறியாமை இருள் அவர்களை விட்டு விலகிக் கனமான மூச்சலைகளில் செல்கிறது. விலகிய அவைகள் கனமான மூச்சலைகள் காரணமாக பூமியின் ஈர்ப்பில் சிக்குண்ட அவைகள் பற்பல இடங்களில் முச்சந்தி, நாற்சந்தி, தீமையான செயல்கள் புரியும் இடங்கள் என்று அலைந்து கொண்டிருக்கும். அறியாமை மற்றும் சங்கட மூச்சலைகள், தமக்கு ஒத்த நிலையில் தனித்தோ கூடியோ வீரியமுடன் சுற்றிக் கொண்டிருக்கும். எவ்வளவு சொல்லியும் கேளாதவர்கள், வருத்தப்பட்டு அழுது கொண்டே தெருவில் செல்பவர்கள், தெருவில் சண்டை, சச்சரவு செய்து கொண்டிருப்பவர்களை, ‘அறியாமை இருள்’ வெகுசீக்கிரம் பற்றும்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button