இறைவன் இருக்கின்றார், வேத உண்மை.

190

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

18•08•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(414) மனிதனே புனிதன் —
இறைவன் இருக்கின்றார், வேத உண்மை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இறைவனைப் பற்றி அறிந்து கொள்ளும் தகுதி ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது. அது இயற்கையின் இயல்பை ஒத்து இருக்கிறது. அதுவே தெய்வீக சக்தியின் ஆற்றலாகும். அதனை தன்னுள் இருந்து வெளிப்படுத்த முயலுபவர்கள் இறையருள் பெற்றவர்களாவர். தெய்வீக சக்திகளின் ஆற்றல்களை வெளிப்படுத்திட உதவும் வழி காட்டியே ஒரு நல்ல குருநாதர் ஆவார். தகுதி பெற்று உயரும் நன்மை வழிக்கு சீடனுக்கு உதவிடும் குரு நாதரின் செயல் தியாகம் எனப்படுகிறது. சீடனை வளர்ச்சி நிலை பெற வைக்கும் குருநாதர், அதன் வாயிலாகவே வளர்ந்து விடும் நன்மையை இறைவன் அருளால் தானும் பெற்று விடுகின்றார். தானும் வளர்ந்து பிறறையும் வளர்ச்சி நிலை பெறவைத்திடும் அறிவு அங்கே துலங்குகிறது. மகா ஞானியர்களாகிய தியாகத் செம்மல்கள், அறிவை வளர்க்கும் நன்மைகளைச் செய்து வருவதனால், மனித குலம் தெய்வீக வழிகளில் மேம்பாடு அடைகிறது. மகா ஞானியர்களை உலக மக்களின் நன்மையைக் கருதித் தங்களது தெய்வீக ஆற்றலைக்கூட தியாகம் செய்திடும் முக்தர்கள் எனலாம். தனது சொத்து, மனைவி, மக்கள் மற்றும் சுகங்களைத் துறந்து ஒருவன் இறைநிலையை அடைய விரும்பலாம். அதனால் கிடைக்கப் பெறும் வீடு பேற்றை இறையருள் வரவேற்பதும் இல்லை; நிராகரிப்பதும் இல்லை. இது தனியொருவன் பெற்ற தெய்வீக நிலையாகும். ஆனால் சற்குரு நாதர் தான் பெற்ற வீடு பேறாகிய உயர்ந்த தெய்வீக நிலையைக்கூட உலக மக்கள் நன்மையைக் கருதி துறந்து விடுவதால் என்றென்றும் இறைவனுடன் வாழும் பாக்கியத்தை அடைகின் றார்கள். இறைவனை அறியத் தன்னுள் உறையும் தெய்வீக சக்தியை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உண்மையான கருத்து ஆகும்.

ஒரு உண்மையான சீடன் என்பவன் எத்தகைய செயலினைச் செய்தாலும் அதன் நன்மை, தீமைகளைக் கருத்தில் கொண்டு, அறிவினால் ஆராய்ந்து அறிந்து பிறகு நன்மைகளில் நாட்டத்தைச் செலுத்துகின்றான். அவனது உள்ளத்தில் எப்போதும் இரக்க குணம் நிரம்பி இருக்கும். அன்பையும், சொத்தாகக் கொண்டிருக்கும் அவன் முகத்தில் எந்த நேரமும் சாந்தம் நிலவி, விரவி இருக்கும். யாரையும் சமமாகப் பாவிக்கும் உத்தம சீடன், யாருக்காகவும் தனது சமநிலையில் இருந்து வழுவி விடுவதும் இல்லை. இவனுக்கு ஏற்படும் நன்மைகள் அனைத்தும் இவன் செய்யும் நன்மையான நல்ல காரிய நிகழ்வுகளில் இருந்து பெற்று விடுகின்றான். தனது சுக துக்கங் களை உண்மைச்சீடன் கருத்தில் கொள்வதில்லை. அவன் இறைவனை வணங்குவது கூட, உள்ளத்தைக் தூய்மையாக வைத்திருப்பதில்தான். மற்றவர் களுக்குச் சேவை செய்வதிலே உத்தம சீடன் இறைவனைக் காண்கின்றான். எப்போதும் சீடன் தனது எண்ணங்களில் தெய்வீக உணர்வுடன் இருக்கிறான். அதனால் உலகாதயத் துன்பத்தில் இருந்து விடுபடுகி றான். நல்ல பழக்க வழக்கங் களைத் தினமும் தொடர்ந்து கடைப் பிடித்து வ ருவதனால் சீடன் என்றும் ஒழுக்கம் மிகவும் உடையவனாகிறான். மன வலிமையை, ஆற்றலை, ஒழுக்கத்தைத் தொடர்ந்து கடைப் பிடித்து வரும் உண்மைச் சீடர்கள், நிச்சயம் அடைந்து வாழ்வாங்கு வாழ்கின்றார்கள்.

நமது நாகராஜன் சுவாமி பவானி புறப்பட்டுச் சென்று பிறகுதான் ஹடயோகி தங்கவேல் வாத்தியார் அவர்கள் குடும்பத் தினர் விரும்பிய கிராமத்து தாதாவின் மரணம் நடை பெற்றது. அவர் தன்நிலை மறந்த நிலையில், மற்றொருவரைக் கோபத்துடன் அடிக்கச்சென்று, உயரமான திண்ணையில் இருந்து தரையில் வீழ்ந்து பட்டார். பிறகு அவருக்கு மரணம் நேர்ந்து விட்டது என்பதை சுவாமி, பவானியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கிராமம் திரும்பியபோது தான் அறிந்து கொண்டார். ஒரு மனிதருக்கு அன்பு நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் பிறர் செய்திடும் குற்றம், குறைகளை மன்னிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் வாழ்வில் மலர்ச்சியும், வளர்ச்சியும், விரிவாக்கமும் ஏற்படும். இது ஞானியர்கள் கண்ட அனுபவ உண்மையாகும். ஏதாவது ஒரு காரணம் கருதி மற்றவர்களை வெறுத்து ஒதுக்குவதாலும், சபித்து விடுவதாலும் வாழ்வின் குறுகிய வட்டத்தில் அகப்பட்டு , மனம் குறுகி விடுவதால் மரண தேவனுக்கு அழைப்பு விடுபவரா வோம். இவற்றையெல்லாம் விடுத்து மனிதன் நேர் மறையான எண்ணங்களில் தனது கவனத்தை இருத்தி, மனித சமுதாய சேவைகளை வெற்றிகரமாகச் செய்து பூரணமான வாழ்வைச் செழிப்புடன் வாழ வேண்டும். நமது சுவாமியின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையப் போவது பவானியில் தான். அங்கு ஒரு வருட காலம் தனது சற்குருநாதரைச் சந்திக்க, எவ்வித வழியுமின்றி தியானத் தில் ஆழ்ந்து போகும் காலமாக அதனை மாற்றிக் கொண்டார். பரபரப்பு மிகுந்த மக்கள் வாழும் பவானி செல்வதற்கான காலமும் கனிந்து வந்தது. அது ஒரு கடிதமாக பவானியின் செய்தியைச் தந்தது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button