நம்பிக்கையைத் தளர விடலாமா?

171

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

19•08•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(415) மனிதனே புனிதன் —
நம்பிக்கையைத் தளர விடலாமா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞானகுரு தவத்திரு வேணு கோபால சுவாமி அவர்கள் பவானி தியான சங்கத்தை விட்டு வெளியேறிச் சென்று விட்ட பிறகும் அது நல்லபடியாகத் தான் நடந்து கொண்டிருந்தது. சேலம் குகையைச் சேர்ந்த செல்வச் சிறப்பு மிக்க ஒருவர் சுமார் நூற்றிஐம்பது தறிகள் வைத்து நல்லபடியாக நடத்திச் செல்வம் ஈட்டி வந்தார். அவர் தாம் தவத்திரு வேணுகோபால சுவாமியை, ஞானயோகியாக விளங்கும் திரு SSM. சுப்பிர மணியம் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். சேலம் குமாரபாளையத்தில் மிகச்சிறந்த தொழில் அதிபரும், அத்வைத ஆன்மிகக் கருத்துக்களில் நாட்டம் மிகக் கொண்டவ ருமான ஞானயோகி SSM ஐயா அவர்களை நாடி வந்தனர். தவத்திரு வேணுகோபால சுவாமி அவர்களின் ஞானக் கருத்துக்கள், ஞானயோகி திரு. SSM ஐயா அவர்களின் ஆன்மிகக் கருத்துக்களும் ஒத்துப் போனதால் அவரை மனம் உவந்து ஏற்றுக் கொண்டவர். எல்லா விதமான வகையிலும் தவத்திரு.வேணு கோபால சுவாமி அவர்களுக்கு உதவிகள் புரிந்து ஆதரித்து வந்தவர். பக்தர்கள் சுவாமிஜிக்கு “ஞானகுரு” என்ற பட்டத்தைத் தந்து விட்டதால் நாமும் ஞான குரு என்றே அழைப்போம். ஞானகுரு அவர்கள் விருப்பட்ட இடங்களுக்கெல்லாம், ஞானயோகி திரு.SSM ஐயா அவர்கள் அழைத்துச் சென்று காட்டினார். ஞானகுரு காண்பதற்கு விருப்பப்பட்ட இடங்கள், திருக் கோகர்ணம், உஜ்ஜெய்னி, பத்ரிநாத், கேதார் நாத், நேபாளம் முதலிய அநேக ஆலயங்களுக்கும் முக்கியத் துவம் பெற்ற அநேக வனங்களுக்கும் அழைத்துச் சென்று தவம் புரிய வைத்தார்.

பவானி தியான சங்கத்தின் வளர்ச்சி உச்சகட்டத்தை எட்டி இருந்த நேரம். பற்பல இடங்களில் பட்டி தொட்டி நகரங் களிலெல்லாம் தியானக் கூட்டங் கள் சிறப்பாக நடை பெற்று வந்த நேரம். சிறுவர் முதல் பெரியோர் வரைக்கும் ஞானகுருவை அறிந்து கொள்ளச் செய்த அறிமுகக் கூட்டங்கள் கணக்கில் அடங்காதவை. தவத்திரு வேணுகோபால சுவாமி அவர்களைச் தமிழகமெங்கும் அறிமுகம் செய்து வைத்த பெருமை, புகழ் அனைத்திற்கும் காரண கர்த்தா, ஞானயோகியும், தொழில் அதிபருமான திரு. SSM. சுப்பிரமணியம் ஐயா அவர்களையே சேரும் என்றால் மிகையாகாது. புகழை விரும்பாத ஞானயோகியாகிய அவரது தாரக மந்திரம் என்ன தெரியுமா? அன்பர்களே!
“புகழ் கண்டு மயங்காதே !
புகழ் தேடிச் செல்லாதே!
புகழாரம் பாடாதே!
இன்னல் கண்டு கலங்காதே!
இகழ்ச்சி கண்டு பதறாதே!
இகழ்ந்துரைக்க எண்ணாதே! ”
எத்தனையோ பெருமையாக ஞானயோகி SSM.அவர்களைப் பற்றி வாய்நிறைய, மனம் விட்டுத் தனது பக்தர்களிடம் உயர்வாகப் பேசிக் கொண்டு இருந்தவர் ஞானகுரு அவர்கள். அப்படிப்பட்ட ஞானகுரு அவர்கள் பவானி தியானச் சங்கத்தை விட்டு வெளியேறு கிறார்கள் என்றால் தகுந்த காரணங்கள் இருக்க வேண்டும்!

ஸ்ரீ ஜனகர் அவர்கள் ஞனியாக இருந்து கொண்டே அரசாட்சியை சிறப்புடன் நடத்தி வந்தார் அல்லவா? அதனைப் போன்றே ஞானயோகியாகவும், தொழில் அதிபராகவும், விளங்கி தெய்வங்கள் மனதில் இடம் பிடித்தவர், ஞானயோகி திரு SSM.சுப்பிரமணியம் அவர்களே!
நல்லதற்குக் காலமில்லை என்று கிராம மக்கள் பேச்சு வழக்கில் கூறுவார்கள். ஞானகுரு அவர்கள் பவானி தியானச் சங்கத்தை விட்டுச் செல்வதற்கும் காரணம், ஞானயோகி திரு. SSM ஐயா அவர்களின் ஆன்மிக வளர்ச்சி கண்டு பொறுத்துக் கொள்ள இயலாத, ஞானகுரு அவர்களின் பக்தர்களே காரணம் என்பதுதான் உண்மை. ராஜரிஷி ஜனகரை எப்படிப் போற்றிப் கொண்டாட மனம் வரவில்லையோ, அப்படித்தான் இதுவும். அது மாத்திரம் இல்லாமல் உள்ளூர் தனவந்தர்களில் இவரைப் பிடிக்காதவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் ஞானகுரு அவர்களைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் தாராளமாக, ஏராளமாக நிதி உதவிகளைச் செய்து அன்பை வெளிப்படுத்தினார்
கள். ஆதரவு தந்த ஞானயோகி திரு SSM ஐயா
அவர்களை சிறுகச்சிறுக மறந்து போகச் செய்வதில் வெற்றியும் பெற்றனர். பவானி மேட்டூர் செல்லும் பாதையில் ஊராட்சிக் கோட்டை என்ற இடத்தில் ஓர் அழகிய ஆஸ்ரமம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தார் திரு. SSM ஐயா அவர்கள். அங்கு தான் அவர் தவவேள்வி நடத்திக் கொண்டிருந்தார். இவற்றை எல்லாம் சகித்துக் கொள்ள முடியாத சிலர் ஞானகுரு தனியே ஆஸ்ரமம் துவங்கி நடத்த ஆதரவு தந்தனர். இவையேன்? தலைமைச் சங்க உறுப்பினர்களாக இருந்தவர்கள கூட சிலர் இதனை ஆதரித்தனர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button