கடமையில் தவறு செய்யாதே!

173

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

17•08•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(413) மனிதனே புனிதன் —
கடமையில் தவறு செய்யாதே!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது வேதங்கள் கூறுகின்ற பாவங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ” அறியாமை யில் மூழ்கிக் கிடப்பது ” என்பது தான். இரண்டு, “இறைவனை மறந்து தீமை சக்தியின் பிடியில் சிக்குண்டு தவிப்பது.” மூன்றாவ தாகக் கூறப்படுவது, ” பகவான் கொடுத்த அறிவின் மகிமையை உணராத மந்த புத்தியை உடைய மக்கள்.” இப்படியாக வேதங்கள் சுமார் நூற்றி எட்டு பாவங்களைப் பற்றி, இறைவனது கருத்தை முன் மொழிகின்றன. இவை களைப் பற்றி விலாவாரியாக எழுத வேண்டும் என்றால் அதற்கு அநேகம் பக்கங்கள் எழுத வேண்டும். இவைகளுக்குத் தோஷங்கள் என்று தான் விளக்கம் சொல்லப்படுகிறது. 108 வது தோஷம் எனப்படுவது,
” வியாதிகளைப் பிறருக்கும் பரப்பும் கொடியவர்கள்” என்றே இறைவன் உரைத்திருக்கின்றார். இவர்கள் மனம் திருந்த வேண்டும். திருந்தி இறைவன் கருணையைப் பெற்ற மகாத்மாக் கள், மற்றும் இறைவனது அருளினால் உலகம் காக்கப்பட வேண்டும் என எண்ணும், உத்தமர்களாகிய மகானு பாவர்களின் ஆசியைப் பெற்று உய்த்திட வேண்டுமாம். உத்தம இறைவன் சக்தியை நம்பிக்கை யோடு தியானித்து, மனம் திருந்தி வாழ்பவர்கள் நீடு வாழ்வார்களாம்! இதுவே இறை அனுபவமாக மாறி விடுமாம்! என்னே இறை சக்தியின் ஆற்றல் மிகுந்த கருணை!

நமது சுவாமி அவர்கள் அவரிடம், “நீங்கள் செய்தது பாவ காரியம் என்று எப்போதும் முதல் உணர்ந்து கொண்டீர்கள்? ” எனக் கேட்டார். அதற்கு அவர் கூறிய பதில் யோசனையைத் தூண்டுவதாக அமைந்தது. ” நாகு சுவாமி எனக்கு மற்றவர்கள் துன்பம் அடைவதைப் பார்த்து, மகிழ்ச்சி கொள்ளும் குணம் இயல்பாகவே இருந்தது. அதுவே எனக்கு நிம்மதி என எண்ணிக் கொண்டு இருந்தேன். ஹடயோகி தங்கவேல் வாத்தி யார் அவர்கள் குடும்பத்தினர் எங்கேயோ சென்று எனக்குச் சூனியம் செய்து விட்டதால்தான் எனக்கு விபத்து நேரிட்டது விட்டதாக எனது வீட்டில் கூறி வருகிறார்கள். நீங்கள் அவர்களிடம் பேசி எனக்கு நல்லது செய்யச் சொல்லுங்கள். எனது வங்கியில் உள்ள அவர்கள் நிலத்திற்குரிய பணத்தை, நான் குணம் பெற்றதும் தந்து விடுகின் றேன்” எனப் பேசினார். சுவாமி அவரிடம் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார். ஹடயோகி தங்கவேல் வாத்தி யார் அவர்கள் மருமகள் தனது குழந்தைகளுடன் கோயில் கோயிலாகச் சென்று தனக்கும் தனது குடும்பத்தினர் அனைவ ருக்கும் நீதி கொடுங்கள் என்று கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார். இது காலக்கிரமத் தில் பழி வாங்கும் பிரார்த்தனை யாக மாறிப்போனது. தங்களது சொத்துக்களை திரும்பாது என்று தெரிந்தவுடன், “எதிரிக்கு மரணத்தைத் தந்துவிடு “என்ற பிரார்த்தனை வலுவாக மாறி விட்டது. அவர்களை சந்தித்த சுவாமியிடம் சங்கடங்களைப் பற்றியே பேசினார்கள். “சொத்துப் போனால் போகிறது
ஆனால் அவன் பிணமாகத்தான் சாய்ந்து விடவேண்டும். தெய்வம் இருப்பது உண்மை என்றால் எங்களுக்கு நீதி கிடைக்கும் ” என்று கூறிய அந்த மருமகளின் கோபம் இல்லை மீறி இருந்தது. அவர்கள் கதறி அழுதார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு, “நாகு சுவாமி நாங்கள் வாழ இந்த பூமியில் எங்களுக்கு இடமில்லை யா? தாயாதி களாகிய நாங்கள் அநேகம் பேருக்குச் சொந்தமான இடம் இது. ஏதோ பிழைப்புக்காக வெளியூர் சென்று விட்டோம். நாங்கள் வருவதற்குள் இதனை ஆக்கிர மித்துக் கொண்டார்கள்.”

மேலும் கூறினார், ” அது மாத்திர மல்ல, எங்கள் பெரியவர்கள் தங்கியிருந்த வீட்டையும் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து நெருப்பிட்டுக் கொளுத்தி விட்டார்கள். இவர்கள் அனைவரும் வீடு கட்டிக் கொண்டார்கள். அதற்கு ஜமீனுக்குச் சொந்தமான வழிப் போக்கர்கள் தங்கிப் பசியாறிய மடத்தை இடித்துத்தான் வீடுகள் உருவாக்கிக் கொண்டார்கள். பாவத்தின் மொத்த உருவமாக விளங்கும் இவர்கள் சுகப்பட, நாங்கள் துயருறுவதா? ஆண்டவனே எங்களைக் கை விட்டு விட்ட பிறகு எங்களுக்குப் புகலிடம் ஏது சுவாமி? இங்கு நடை பெற்ற சம்பவத்தின் அதிர்ச்சி கண்டு எனது மகன் ஒருவனுக்குப் பைத்தியமே பிடித்து விட்டது. சுவாமி உங்கள் நல்ல குணம் எங்களுக்குத் தெரியும். அவனை மன்னித்து விடும்படி கேட்க எண்ணுகின்றீர் கள். உங்களது இஷ்டப்படியே ஆகட்டும். இறைவன் அவனை மன்னிக்கட்டும் ” என்று கூறிய படியே வணங்கிவிட்டுப் பைத்தியமான தனது மகனின் கையைப் பற்றியபடியே அழைத்துச் சென்றார். சுவாமி அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டார். இப்போது தான் ஆண்டவன் மீது மிகுந்த அதிகமான நம்பிக்கை வைக்க வேண்டும். இப்படிப்பட்ட நேரங்களில் தான் துன்பத்தில் வாடும் மக்களுக்காக் கருணை உணர்வுடன், ஆண்டவரிடம் உதவிகள் வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும். இப்படிப்பட்ட வேண்டுதல்களுக்குத் தனிப்பட்ட சங்கற்பங்கள் தேவையாயிராது. ஆனால் இறைவனின் உதவி கிடைக்கும்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button