ஸ்ரீ அகத்தியர் மகா சித்தர் அருளுரை

720

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!
(2)
நாகவனம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஸ்ரீ அகத்தியர் மகா சித்தர் அருளுரை :—
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

குரு ஈஸ்வராலய இறை வழி பக்தர்களே உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். புனிதம் மிகுந்த தெய்வீக வழிபாட்டு ஸ்தலங்களில் புண்ணியம் மிகுந்த ஸ்தலம் குரு ஈஸ்வராலயம் நாகவனம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கு வந்து வழிபட்டு பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் சகல பாவங்களையும் போக்குவதோடு, கருவினில் உருவாகும் ஸர்ப தோஷங்களை நீக்கி அருள புரிவதும், சகல செளபாக்கியங்கள் பெறச் செய்வதும் குரு ஈஸ்வராலயமே!

குரு ஈஸ்வராலயத்தில் தெய்வீக சித்தர் பெருமக்களும், தெய்வங்களும் குடிகொண்டு மெய்யன்பர்களுக்கு அருள் வழங்கி வருகின்றார்கள். இறைவன் அருளினால் உங்களுக்குக் கொடையாக்கப் பட்டிருக்கும் நாகராஜன் சுவாமி எமக்கு மிகவும் பிரியமானவன். சித்தர் பெருமக்களைச் சந்தித்திடும் பேறு பெற்ற இவன், உலக நன்மைக்காகச் சதா பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதே இவன் செய்து வரும் வேலையாகும். தன்னை நாடிவரும் பக்தர்களின்
நல்வாழ்வுக்காகத் தோஷங்கள் போக்கிடும் வழிகளைக் கூறி வருகின்றான். இவனது குருநாதன் ஆதிசிவனே ஆகும். அவரே முதல் சித்தர். எம்மை இரண்டாவது சித்தன் என்றும் அழைப்பார்கள். இவன் எம்மிடத்தில ஒரு தை மாதத்தில் ஹஸ்த நட்சத்திரத்தன்று ஆசி பெற்றிருக்கின்றான். குருஈஸ்வராலயத்தில் இவன் ஏற்படுத்தியுள்ள அன்னதானம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பிரதி சனிக்கிழமை, பெளர்ணமி, அமாவாசை காலங்களில், அநேக சித்தர்களும், முனிவர்களும், தெய்வங்களும் கூடி, அன்னதானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மகிழ்வுடன் ஆசியருளி வருகின்றார்கள். அனுதினமும் அன்னதானம் வழங்கிடும் வழியை எம் பெருமான் இவனுக்கு ஏற்படுத்தித் தருவார்.

இறைவழி ஆசானாகிய இவனுடைய தவப்பயனால் இப்புண்ணிய ஷேத்திரத்தை, இறைவன் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கின்றார். பரம பக்தர்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதல்லவா இவனது பிரார்த்தனை!

புண்ணியம் தந்திடும் குரு ஈஸ்வராலயத்தை நாடிவரும் மெய்யன்பர்களாகிய பக்தர்கள் பாக்கியம் பெற்றவர்களே! குரு ஈஸ்வராலயம் உலகினில் மிகவும் பிரபல்யம் அடையும். தெய்வங்கள் குடி கொண்டிருக்கும் இப்புண்ணிய ஷேத்திரத்தில் நாமும் குடி கொண்டு அருள்புரிய விருப்பம் கொண்டுள்ளோம்.

பிரம்ம முகூர்த்தம் காலத்தில் சற்குரு நாதரிடமும், அனுமானிடமும் உபதேசம் பெற்று வரும் நாகராஜன் சுவாமி, பக்தர்களுடைய நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்து வரும் செயல் கண்டு மகிழ்ச்சி உற்றோம். புகழ் விரும்பா இவன் கீர்த்தியே பெரிதென நாம் எண்ணுகின்றோம். இவனைச் சார்ந்து இருக்கும் அத்துணை மெய்யன்பர்களும் பிறவாப் பெரு நிலையை அடைவார்கள்.

குரு ஈஸ்வராலயம் நாகவனம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல பக்தர்கள் அனைவருக்கும் எமது பரிபூரண நல்லாசிகள். இறைவன் வழிபாட்டை மகிமைப் படுத்துங்கள்! அருள்.

வளம் பெருக! அருள் பெறுவோம்!

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

அருளாசிகள்,
தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமி,
நாகவனம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,
பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button