மறைமுக, நேர்முக ஆசிகள்!

182

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

21•08•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(417) மனிதனே புனிதன் —
மறைமுக, நேர்முக ஆசிகள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மணமக்களை ஞானயோகி திரு SSM. சுப்பிரமணியம் ஐயா அவர்கள் ஆசி வழங்கி முடியும் வரை சபையே நிசப்தமாகி விட்டது.மனப்பூர்வமான அருள் ஆசியினை அவர் வழங்கிக்
கொண்டிருந்தார். இந்த நேர்முக ஆசீர்வாதத்தை உண்மையான தியான அன்பர்கள் வரவேற்று மகிழ்ந்தனர். தொழில் துறையில் வல்லவரான, உழைப்பைத் தெய்வீகம் என்று போற்றும் அவரால் அதிக நேரத்தை அங்கு செலவிட இயலவில்லை. திருமணம் நடைபெற்ற இல்லத்தின் பின்புறம் அநேக பக்த கோடிகள் ஞானகுரு அவர்களிடம் ஆசி பெற வரிசை யில் நின்று கொண்டிருந்தனர். அதில் மங்களூர்க்காரர்கள் , அன்னூர், புஞ்சைப் புளியம்பட்டி,
பவானிசாகர், திருச்சி, சத்திய மங்கலம், பழனி, மதுரை, சிதம்பரம், வெள்ளக்கோவில், பள்ளிபாளையம் மற்றும் சேலத்தைச் சேர்ந்தவர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு வரிசையில் நின்று ஆசிபெற்றுப் பிறவி எடுத்த பலனைப் பெற்று விட்டதாக எண்ணிக் கொண்டார்கள். மருத்துவர் ஒருவர் தலைமைச் சங்கத்தின் பேச்சாளர், தமது குடும்ப சகிதமாக ஆசி பெற்று அவருடன் இணைந்து கொண்டனர். அத்தனை பேரும் ஞானகுரு அமைக்கப் போகும் ஆஸ்ரமத்தில் உறுப்பினர்கள் ஆவதற்கான முன்னேற்பாடுகள் சேலத்தில் நடைபெற்றது. இந்த திருமண வைபவ நிகழ்ச்சிக்கு தியான நண்பர்கள் அனைவரும் சென்று கலந்து கொண்டு மேற் சொன்ன நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்களாக நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு அற்புதமான தியான சங்கத்தை இயங்க விடாமல் செய்வதற்கு கோஷ்டி கோஷ்டியாக இணைந்து கொண்டு இருந்தார்கள். அப்படி என்னதான் ஞானயோகி திரு. SSM ஐயா அவர்கள், ஞானகுரு விற்குத் தவறிழைத்து விட்டார்? இதனை ஞானகுரு அவர்களிடம் நேரிடையாகக் கேட்டு விட வேண்டும் என்று தியான நண்பர்கள் அனைவரும் தீர்மானம் செய்து கொண்டோம். அவர் பவானி தியானம் சங்கத்தை விட்டு விலகிச் சென்ற பிறகு சேலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், பெயர் வேலு என்று அன்புடன் அழைக்கப்படுபவர், பவானி தியானச் சங்கத்திற்டு வந்து சேர்ந்தார் . ஞானிகுருவை, ஞானயோகிக்கு அறிமுகப் படுத்தியவர்களை சேர்ந்தவர். கொஞ்சகாலம் தியானப் பாடங்கள் கூறுகிறேன் என்று பவானியில் தங்கியிருந்தார். ஞானநெருப்பாய்த் திகழும் ஞானயோகி திரு SSM. சுப்பிரமணியம் ஐயா அவர்களின தேஜஸ் முன்பு அவராலும் ஈடு கொடுக்க இயலவில்லை. வந்தது போல் திரும்பச் சென்று விட்டார்.

பெரு முயற்சிகள் செய்து தான் உருவாக்கிய தியான சங்கமா னது, தன்னைத்தேடி வந்து தியான வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்குவேன் என்று வாக்குத் தத்தம் தந்து, சத்தியம் செய்த ஞானகுரு அவர்களால் உடைந்து போனதே, என எண்ணி எண்ணி மனம் நொந்து போனார் ஞான யோகி திரு SSM.ஐயா அவர்கள். சத்திய சக்தியாக உருவாக்கத் தான் பணத்தைப் பணம் என்றும் பாராமல் செலவுகள் செய்து, உருவாக்கிய ஞானமார்க்கம் என்ற தியான சங்கம், ஆன்மிக வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று உறுதியாக நம்பினார். அதற்காக ஊராட்சிக்கோட்டை என்ற இடத்தில் ஆஸ்ரமம் அமைத்துத் தனிமையில் தவம் புரிந்து வந்தார். அவரது ஆன்ம ஒளியில் சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்கள் உதயமானார். அவருடன் மான சீகமாக உரையாடினார். அப்போது சற்குரு நாதர், “மகனே மனக்கலக்கமுறாதே. எனது ஆசியினில் பிறந்து வளர்ந்து வருகிறான் ஒருவன். எனது வளர்ப்பு மகனாகவே சகல சாஸ்த்திர ஞானங்களை என்னிடம் கற்றுக் கொண்டவன். பொள்ளாச்சியில் விசாரித்து உண்மையை உணர்ந்து கொள். உனது சங்கடங்களைப் போக்கி எனது ஞானத்தை உன்னிடம் சேர்ப்பிக்கும் ஒரு உத்தமன். நீ அழைப்புத் தந்தால் அவன் வருவான்” என்று கூறி விட்டு அவருக்கு ஆசியும் நல்கி யிருக்கிறார். நமது சுவாமி நாகராஜன் அவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தியை அவர் அடைந்து இருந்தார்.

நமது தவத்திரு நாகராஜன் சுவாமி அவர்கள் முக்கியமான ஞானப்பாடங்களை ஈர்ப்பதில் மிகுந்த கவனமாக இருந்தார். சுவாமியின் குழந்தைகள் கோகுலும், மெளலியும் தயார் மீனாம்பாள் நாச்சியார் கவனத்தில் மிகவும் எளிமையாக வளர்ந்து வந்தனர். எவ்வளவு செல்வம் இருந்தும், செல்வாக்கு இருந்தும் அவர்கள் தங்களின் எதிர்கால வாழ்வை எண்ணி, எந்த ஒரு பொருளையும் ஈஸ்வரனாக நினைந்து மதித்து வந்தனர். அதனால் அவைகள் இறைவனுடையது என்று எண்ணினால் ஆசைகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு விட்டனர். அதற்கு அவர்களது தாயார் கற்றுக் கொடுத்த தியானம் உதவிகள் செய்தது. ஆழியாற்றில் மணல் எடுக்க லாரிகள் வரிசையாக நின்று மணலை ஏற்றிச் செல்வார்கள். ஆற்றில் நீர்வரத்து எப்போதும் அதிகமாக இருக்கும். நீரினுள் இருக்கும் மணலைக் கூடைகளில் எடுத்து வந்து ஆற்றின் கரையில் கொட்டுவார் கள். அதனை லாரிகள் கொண்டு செல்லும்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button