ஆண்டவன் நீதி தவறுவதில்லை.

193

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

16•08•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(412) மனிதனே புனிதன் —
ஆண்டவன் நீதி தவறுவதில்லை.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற படிதான் நடந்தது. மனிதனின் அர்த்தமற்ற அதிகாரங்களும், வெறுப்பும், கோபமும், வீண் உறக்கமும், தேவையற்ற விளக்கமே இல்லாத சடங்கு, சம்பிரதாயங் களும், குருட்டு நம்பிக்கைக ளும், இதைப் பயிற்றுவிக்கும் போதனைகளும் மனிதனுக்கு வீணான கற்பனைகளைத்தான் வளர்க்கும். இது அற்ப இன்பங்க ளைத் தந்து தேவையற்ற விவாதங்களைச் செய்யும் பழக்கத்தையும் ஏற்படுத்தி விடும். பிறகு மனதைக் கெடுத்து விடுவதோடு ஒருவரோடொரு வர், போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு, வீண்குழப்பம் என வாழ்க்கைச் சூழலில் அழுத்தி விட்டு விடும். அன்பு நெறியை அறியாமல் செய்து, இறைவன் ஆற்றலை மதிக்காமல் செய்து, சமூக ஒழுக்கத்தை உள்ளத்தில் இருந்து நீங்கச் செய்யும் ஆற்றல், தீமை சக்திகளுக்கே உரியதாக இருக்கும். இதனை இறைவன் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் கண்காணித்துக் கொண்டே இருந்து வருவார். தீமையாளர் களுக்குத் தரவேண்டிய உரிய தண்டனையை, இயற்கையின் இயல்பருள் தன்மையில், பராபரமாகிய ஆண்டவன் தனது நீதியை வழங்கத் தவறுவதே இல்லை. இதனை உறுதிப்படுத்த ஒரு நிகழ்வு நடைபெற்றது. கிராம மக்களின் வாழ்வையே அல்லோல கல்லோலப்படுத்திய பக்கத்துக் கிராமத்து தாதா தனது வீட்டைக் கட்டும்போது, மற்றவர் வீட்டை விட உயர்ந்த வீடாக இருக்க வேண்டும் என எண்ணி படிக்கட்டுக்களுடன் கூடிய உயர்ந்த திண்ணையைக் கொண்ட வீட்டைக்கட்டித் திறப்பு விழா செய்தார்.

உயரமான திண்ணையில் சிம்மாசனம் போன்ற ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, அடியாட்களை ஏறிக் கிராமத்து மக்களைத் துன்புறுத்தி ஏவல் கொண்டார். இவர் ஒருநாள் இருசக்கர வாகனத்தைப் போதையில் ஓட்டிச் சென்று விபத்தில் சிக்குண்டு விட்டார். உடலின் பல இடங்களில் அறுவைச் சிகிச்சை செய்து, தகடுகள் பொறுத்தப்பட்டு உயிர் பிழைத்தார். அப்போதும் அவர் இறை நம்பிக்கை யைக் கொண்டிருக்க வில்லை. மாறாக இறைவனை இகழ்ந்து மேலும் மேலும் துன்பத்தில் துவண்டு கொண்டே போனார். அவர் மற்றவர்களுக்குத் தந்து கொண்டிருந்த இடையூறுகளை நிறுத்தவே இல்லை. ஒரு நாள் அவர் நமது சுவாமி அவர்களைச் சந்திக்க விரும்பினார். அவரைக் காரில் அழைத்து வந்தனர். கிராம ஆரம்பப் பாடசாலைப் பள்ளி வளாகத்தின் திண்ணையில் அமரவைக்கப் பட்டிருந்தார். நமது சுவாமியை உள்ளூர் கோஷ்டியினர் அழைக்க வந்து, அவர் தியானத்தில் இருந்து எழுந்து வரும் வரையிலும் காத்திருந்து அழைத்துச் சென்றனர். நமது சுவாமியை கண்டதும் கண்ணீர் விட்டு அழுது தான் நடந்து கொண்ட தவறுக்கு, மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
பிறகு அவர் ஹடயோகி தங்க வேல் வாத்தியார் வெறுமனே வைத்துக் கொண்டிருந்த நிலங்களை அபகரித்துத் தான் வைத்துக் கொள்ளாமல், வீ டற்ற கிராமத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்குத் தந்து விட்டதாகக் கூறினார். மேலும் நிலத்தின் வாரிசுதாரர்கள் வீடு கட்டிக்கொள்ளக் கணிசமாக இடம் தந்திருப்பதாகவும் தெரிவித்தார். நடுகிராமத்தில் தனியாகக் கிடந்த மூன்று ஏக்கர் நிலம் அநேக ஏழை மக்களுக்கு உபயோகமாகி உள்ளது என்றார். அதற்கு நமது சுவாமி, “நிலத்தின் சொந்தக்காரருக்கு அதற்குரிய தொகையைக் தந்து விட்டீர்களா?” எனக் கேட்டதும் மெளனமானார். வீடுகள் கட்டுவதற்கு நிலத்தைப் பெற்றுக் கொண்ட மக்கள் ஏழைகள் கிடையாது. வசதி படைத்த வர்களிடம் பெற்ற கிரயத்தொகை தாதாவின் வங்கிக் கணக்கில் சேர்ந்து கொண்டு விட்டதைப் புன் சிரிப்பில் தெரிவித்தார்.

நமது சுவாமி, “என்னை அழைத்த காரணம் என்ன? ” என்று அவருடன் படித்த நண்பராக இருந்த அவரிடம் கேட்டார். அதற்கு அவர் நமது சுவாமியின் முகத்தைப் பார்த்தபடி கண்ணீர் விட்டுக் கொண்டே, ” பாவத்தொழில் புரிந்தேன். இரக்கமற்ற தாதாவாக மாறிப்போனேன். உங்களது இறைவனது தண்டனைக்கும் ஆளாகிப் போனேன் ” என்றார். அவரிடம் சுவாமி கேட்டார், ” இறைவனில் எனது, உனது என்ற பேதாபேதம் உண்டோ? எப்படியோ இறைவன் தண்டித்து விட்டான் என்றாவது கூறி, இறைவன் இருப்பதை ஒப்புக் கொண்டு விட்டீர்கள் அல்லவா? நீங்களோ இறைவனை நினைத்துக் கூடப் பார்ப்பதே இல்லை. பிறகு அவர் ஏன் உங்களைத் தண்டிக்க வேண்டும்? ” எனக்கூறி அவரது முகத்தைக் குழைந்த பார்வை பார்த்தார். அவருக்கு மனதில் ஏதோ ஒருவகையில் நிம்மதி ஏற்பட்டிருக்க வேண்டும். அவர் மீண்டும் ஏதோ கூறமுற்பட, உடலில் பொருத்தப்பட்ட தகடுகளினால் அவரால் சரியாக அமர்ந்து கொள்ள வசதிகள் இல்லாததால் பள்ளிக் கூடத்துத் திண்ணையில் படுத்துக் கொண்டார். அவர் துன்பம் கண்டு அவருக்காக இறைசக்தியிடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர, வேறொன்றும் அப்போது அந்த நேரத்தில் நமது சுவாமிக்குத் தோன்றவில்லை. பிரார்த்தனை செய்து கொண்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button