பணம் பத்தும் செய்யுமா? பற்றும் பறந்து விடுமா?

183

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

15•08•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(411) மனிதனே புனிதன் —-
பணம் பத்தும் செய்யுமா?
பற்றும் பறந்து விடுமா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
” நல்ல வழிகளில் ஈட்டப்படும் செல்வத்தில் இறையருள் நிறைந்து, அவரது அண்மையும் இருக்கும். இதனால் நமது வணக்கம் இறைவனைச் சென்றடையும். அதுமாத்திர மல்லாமல் நாம் செய்கின்ற காரியங்களில் தவறுகள் இருந்தால் திருத்திக் கொண்டு நல்ல முறையில் வாழவும் வேண்டும். மீண்டும் தவறுகள் நடந்து விடாமல் இருக்கவே ஒழுக்கம் கட்டுப்பாடுகளை இறையருள் நமது நன்மைக்காக வேண்டியே வழங்கி உள்ளது. எனவே வருந்துவதாலும், துக்கப் படுவதாலும் தீமைகள் அன்றோ வளர்ந்து விடும்? இறைவனைத் தவிர யாரால் நமக்கு அன்பையும், அரவணைப்பையும், ஆறுதலையும் தரமுடியும்? நாம் செய்யும் தவறுகளால் நமக்கு நாமே துன்பங்களை மேலும் மேலும் அதிகப்படுத்திக் கொண்டு, தாங்கிக் கொள்ள இயலா நிலையை உண்டாக்கிக் கொள்கிறோம். கவனமுடன் வாழும் வாழ்வை இறைவன் நமக்கு நிச்சயமாக அருளி இருககின்றார். நம்மை எப்போதும் கண்காணித்துக் கொண்டும் இருப்பதும், பக்கத் துணையிருந்து பாதுகாப்புத் தருவதும் இறைவன் செயலாகும்” என்ற ஈஸ்வர நீதி வாக்கியத்தை எண்ணியபடியே நமது சுவாமி தியானத்தில் ஆழ்ந்து போனார். ஈஸ்வர நீதியை மறந்து மனிதரூபத்தில் வாழும் அசுரனை வணங்கியவர்கள் கோயிலைச் சுற்றிலும் படுத்துக் உறங்கிக் போனார்கள். கட்டு நிறைவுக்கு வந்திருந்த உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் மக்கள் அனைவரும வீடுகளுக்குச் சென்று விட்டார்கள். நமது சுவாமி அவர்கள் இறை சிந்தனையில் மூழ்கி தியானத்தில் நிலை கொண்டிருந்தார். அவரது நண்பர் பாவம் என்னதான் செய்வார்? அவருக்கு மது, மாது மயக்கம் மேலிட மீதியுள்ள பண நோட்டுக் களை, ஆத்திரம் மேலிட நமது சுவாமியின் முகத்தில் வீசிவிட்டு எழுந்து சென்று விட்டார். அன்றே இறை சக்தியின் கோபத்திற்கும் ஆளாகிப் போனார்.

மனிதன் தன்னுடைய மகிழ்ச்சிக்காக, ஆடம்பரத்திற் காக, புகழுக்காக இறைவனால் படைக்கப்பட்ட எத்தகைய பொருட்களையும் வீணாக்கு வதையும், விரையம் செய்ய எண்ணும் நாட்டத்தையோ, இறைவன் விரும்புவதில்லை. மனிதனுடைய உதவிகள் அனைத்தும் வறுமையில் வாடும் மக்களுக்காகவே இருக்க வேண்டும். அவர்களை நேசிக்கக் கன்றுக் கொள்வது என உறுதி கொள்ள வேண்டும். சோம்பல், சலிப்பு, சங்கடம், சோர்வு கொள்ளும் காலங்களில், இருந்து, கிடந்து, இறைவனை மறந்து இருக்கும் நேரங்களில், அறிவைக் கெடுக்கும் மதுவும், சிற்றின்ப நாட்டமும் தரக்கூடிய மகிழ்ச்சியும் மனிதனுக்குத் துன்பத்தையே தரவல்லதாகும். இதனால் கிடைக்கும் ஓய்வும் நன்மையைத் தராது. சோர்வான காலங்களில் உண்மையான ஓய்வு என்பதை இறை சிந்தனை யுடன் கொள்ளும் பொழுது, அது உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தந்து உதவும். உழைப்பவன் எப்போதும் பிறர் நன்மையில் இன்பம் காண்கிறான். இறைவன் சிந்தனையை என்றும் நினைவில் கொள்கிறான். இறைவன் நாட்டத்துடன் சிறப்பான செயல்களைச் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதில்தான் மனிதன் என்றும் தீமைகளற்ற நன்மைகளை அடைந்து கொண்டே இருக்க முடியும். எதிலும் மனிதன் நேர்மை உடையவனாகவே வாழ முயலுதலே ஆண்டவனுக்கு உவப்பான செயலாகும். இப்படித் தான் ஈஸ்வர நீதி வலியுறுத்திக் கூறுகின்றது.

நமது சுவாமியின் குடும்பம் கிராமத்தில் தங்களால் இயன்ற அநேக உதவிகளை மக்களுக்குச் செய்து கொண்டிருந்தார்கள். இதனால் தாங்கள் செய்து வரும் வட்டித் தொழில் பாதிப்பு அடைவதாக தம்பன வசியன் குடும்பமும், புதிதாக வந்த வட்டித் தொழில் தாதாவும் எண்ணியதால்தான் சுவாமி மிகத் துன்பத்திற்கு ஆட்படுத்தப் பட்டார். வீட்டை விட்டு வெளியே செல்வதற்குத் தகுந்த காலம் உருவாகக் காத்துக் கொண்டு இருந்தனர். உண்ணுவதிலும், பருகுவதிலும் கூட அளவுடன் இருந்து, உயிர்த் தன்மை உடலில் மகிழ்வுடன் நிலை கொள்ளும் அளவிற்கே வாழ்ந்து வந்தனர். பசிக்குத் தேவையான உணவுகளை, ஆடம்பரமின்றி இறைவனோடு கூடி உண்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். வெளியுலக வாழ்வைக் குடும்பத்துடன் அனுபவிக்கச் செல்லும் போது, ஏழைகளாகக் கொடிய வறுமை யில் உழல்பவர்களாக அல்லது செல்வம் மிக்கவர்களாகவோ, எப்படி வாழ்ந்தாலும், இறை நெறியும் கூடி ஆண்டவனை மறக்காதவர்களாக, நேர்மை யுடன் நடந்து கொள்ளும் பண்பாளர்களாகத்தான் வாழ வேண்டும் எனச் சங்கல்பம் செய்து கொண்டார்கள். இந்த கிராமத்தைச் துறந்து உலகில் எங்கு சென்றாலும் நல்லவர், தீயவர் இல்லாத இடம் ஏது? ஆகவே நம்மை வெறுத்தாலும், அவதூறாகத் தூற்றினாலும், நம்மிடம் உள்ள பணிவான நற்குணங்களினால், இறை நம்பிக்கையுடன் எதனையும் வென்றுவர வேண்டும் என எண்ணினார்கள். இதனால் நல்ல வழிமுறைகளை இறைவனால்
உள்ளத்தில் உணர்த்தப்பட்டு, நீதி யான முறையில் வாழப்பழகிக் கொண்டார்கள். ஸ்ரீ ஈஸ்வரர் கண்ட குருஈஸ்வராலயப் புனிதப் பயணம் இனித் துவங்கியது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button