கரூர் சித்தரின் பரிகாரம்.

318

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

13•08•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(409) மனிதனே புனிதன் —-
கரூர் சித்தரின் பரிகாரம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தோப்பு மலையில் “மரா” மரங்கள் அடர்ந்த வனத்தினுள், கெளசிக வம்சத்தில் உதித்த வரும், திவ்ய மந்திரங்களை இயற்றியவரும், அஜிர் கர்த்தன் என்று போற்றப்படும் இருசிக மஹரிஷி யாகிய விஸ்வா மித்திரால் அமைக்கப்பட்ட மகா ஹோமகுண்டம் ஒன்று உள்ளது. அதற்குப் போகும் வழியில் மரா மரவனத்தில் பழமை வாய்ந்த மாமரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து சுரந்து வரும், எக்காலத் திலும் வற்றாத ஜீவநீரூற்று இருக்கிறது. சகல தோஷங்களை யும் களையவல்ல இதன் அருமை, பெருமைகளை அறிந்தவர் கொஞ்சமே. இந்த ஊற்று நீர் ஒரு குடுவையில் எடுத்து வந்திருந்த நமது சுவாமி அவர்கள், அதனையும் திரு. ஷண்முகம் ஐயா அவர்களிடம் தந்து கரூர் சித்தரிடம் கொண்டு சென்று சேர்க்கும் படியாகக் கேட்டுக் கொண்டார். பிறகு, “ஏதாவது என்னிடம் கேட்க எண்ணுகின்றீர்களா? “என்று நாகராஜன் சுவாமி அவர்கள் அன்புடன் கேட்டார்கள். “எனது அனுபவ சந்தேகங்களை மட்டும் கேட்க ஆசைப்படுகிறேன். முதலில் எனது உடைகளை எடுத்துச் சென்ற மந்திகள் நான் முழுமனதுடன் தவத்தில் ஈடுபாடு கொண்டதுடன், திரும்ப உடைகளைக் திருப்பிக் கொடுத்து விட்டன. அவைகள் யார்? “எனக் கேட்டார். அதற்கு சுவாமி, ” நீங்கள் முழு மனதுடன் எந்தச் செயலைச் செய்தாலும் அதற்கு இடையூறு ஏற்படாது. இங்குள்ள மிருகங்களை ஸ்ரீவித்யா பீடத்தின் சூட்சும சித்தர்கள் கட்டுக்குள் வைத்துள்ளார்கள். அதனால் இங்கு வரும் பக்தர்களுக்கு எந்த விதமான இடையூறுகளும் மிருகங்களால் ஏறுபட்டதில்லை” என்றார். திரு.ஷண்முகம் ஐயா அவர்கள், “சுவாமி விஸ்வா மித்திரர் மகரிஷி அவர்களின் செயற்பாடு இங்கு எந்த நிலையில் உள்ளது? அதனைப் பற்றிக் கூறமுடியுமா? ” என்று கேட்டார்.

” பலா அதிபலா சக்திகளைப் பெறுவதற்கு ராமலக்ஷ்மனர் துணையுடன தோப்பு மலைக்கு வரும் போது, தாடகையை வதம் செய்தனர். அன்றிலிருந்து தாடகையின் வம்சத்தினர் ரிஷிகள் பெருமக்களுக்குத் தொல்லைகள் தந்து வந்தனர். விஸ்வாமித்திர மகரிஷி அவர்களை அடக்கிக் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதன் பிறகு அவர் விஜயாபதி என்ற இடத்தைத் தேர்வு செய்து அங்கேயே நிரந்தரமாக வாசிக்கத் சென்று விட்டார் . அது அசுரர்கள் வாழும் வனமாகும். காசி விசுவநாதர், அகிலாண்டேஸ் வரிக்கு ஆலயம் அமைத்து தானே சிவலிங்க வடிவில் தவமியற்றி, சூட்சுமம் சரீரம் பெற்று என்றும் சிரஞ்சீவி யாக வாழ்ந்து வருகிறார். அங்கும் அசுரர்களைத் தனது கட்டுப் பாட்டில் வைத்து இறை அன்பர்களுக்குப் பாதுகாப்பு அருளினார். தோப்பு மலையில் இருக்கும் ஸ்ரீவித்யா பீடத்தில், ஸ்ரீ ஈஸ்வர பட் சற்குருநாதரின் பாதுகாப்பில் உலக நலன் வேண்டி சூட்சும சித்தர்கள் தவம் செய்து வருகிறார்கள். இந்த பீடம் சித்தர் பெருமக்களுக்கே உரிய பிரார்த்தனை செய்யவும், தவம் புரியவும் உரியதாக உள்ளது. வன தேவதைகள் காவல் புரிந்து வரும் இடமாகையால் இங்கு மனச்சலனமுடைய அன்பர்கள் செல்ல அனுமதிப்பதில்லை. ஆனால் நீங்கள் புனிதமான ஓர் காரியம் கருதி வந்திருப்பதால், உங்களை மட்டுமே அங்கு அழைத்துச் சென்றவர்கள் வனத்தின் தேவதைகளாவர். உங்களுக்கு ஸ்ரீ வித்யா பீடம் செல்லவும் சற்குரு நாதரின் மற்றும் சித்தர்களின் அருள் ஆசியைப் பெற வைத்ததும் நீங்கள் செய்த அநேக புண்ணிய காரியங்களின் பலனாகும். இவர்கள் இங்குதான் குரு ஈஸ்வராலயம் என்ற அமைப்பை உண்டுபண்ணிச் செயற்படு கின்றார்கள். ராமாயண காலத்தில் மறைக்கப்பட்ட புண்ணிய ஷேத்திரத்தை இந்தக் கலியுகத்தில் வெளிக்கொணர் வது இவர்களின் குருஈஸ்வரால யத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்காக இந்த வனத்தில் ஸ்ரீ வித்யா பீடத்தை உருவாக்கி தவமியற்றி வருகிறார்கள். ஆகட்டும் நாம் புறப்பட்டுச் செல்வோம். வாருங்கள் ” என்று ஜோதிட நிபுணர் திரு. ஷண்முகம் ஐயா அவர்களை அழைத்தார். வாத்தியார் பூஜாரி அவர்கள் தந்த யாக விபூதியை எடுத்து ஜெபம் செய்து எடுத்துக் கொண்டனர்.

பரிகாரம் செய்திட கரூர் சித்தரை சந்திக்க ஜோதிட நிபுணர் சென்று விட்டார். அது நல்லபடியாக நிறைவேற இறையருளை வேண்டிப் பிரார்த்தனையில் ஈடுபட்ட நமது சுவாமி, பவானி செல்லத் தகவலை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இந்த சமயத்தில் தான் நமது சுவாமி அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் நெருக்கடியான சம்பவங்களைத் தந்திடத் தம்பன வசியன் குடும்பத்தினர் துணிந்து செயலில் இறங்கி விட்டனர். இறைவனை மறந்து விட்டுச் செய்த அநேக பாவகாரியங்க ளில், கிராமத்தில் உள்ள மக்கள் துயரத்தில் தவித்தனர். அன்று அதிகாலைப் பொழுது விடிந்த போது சுவாமி குடியிருந்த வீட்டிற்கு கிழக்குப் பகுதியில் குடி யிருக்கும் ஒரு இஸ்லாமிய நண்பர் வீட்டின் முன்பு ஏகப்பட்ட கூட்டம் அமளி!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button