இறைவனையே வசமாக்கி, வாழும் சித்திநிலை !

422

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2

 

(7) இறைவனையே வசமாக்கி, வாழும் சித்திநிலை !

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

“இறைவன் நாமத்தை முறைப்படி தினமும் ஜெபிப்பவர்களுக்குத் துக்கமும், சங்கடமும் விலகிவிடும். சகல பாவங்களும் நீங்கி விடும். தியானிப்பவர்களோ சகலவிதமான சுகங்களையும், சௌபாக்ய சித்திகளையும் அடைகிறார்கள். எதனை அடைய விரும்புகிறோமோ அதனைப் பெற தியானமே சிறந்த சாதனம். கல்வியறிவு பெற வேண்டுமா, அரும்பெருங்காரிய சாதனைகளை நிகழ்த்த விருப்பமா? அதன் சக்திதான் தியானம். தினந்தோறும் அதிகாலை நேரத்தில் இறையருளை எண்ணி மிகுந்த நம்பிக்கையுடன் தியானம் செய்து வருபவருக்கு இறைவனே வசமாவான். மட்டுமல்ல எப்பொழுதும் இறைவனுடன் வாழுகின்ற பாக்கியத்தை அடைந்து வாழ்வாங்கு வாழ்வர். இறையருளால் தினமும் தொடர்ந்து இதனைக் கடைப்பிடித்து வருபவர்களுக்கு, என்றும் ஆனந்த மயமான இறை  சாயுஜ்ஜிய பதவியைப் பெற்று வீற்றிருப்பர். ஈஸ்வர குமரனே  இதனை நன்கு நினைவில் வைத்துக் கொண்டால் நீ தேர்ந்தெடுத்த நல்வழியில் வெற்றியை ஈட்டுவாய் ” என்று ஶ்ரீ வல்லபர் கூறினார். பிறகு பாட்டியையும், மீனாம்பாள் நாச்சியாரையும் வரவழைத்துப் பேசினார். “உங்கள் இருவருக்கும் ஓர் உண்மையான விஷயத்தைக் கூறுகிறேன். சற்குருநாதர் ஶ்ரீ ஈஸ்வரரைப் பகையாக எண்ணி வாழ்ந்தவன் தம்பனவசியன். அது விக்கிரமராஜன் காலத்தில் இருந்து தொடர் கதையாகக் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போதும் கூட தம்பன வசியன் கூட்டத்தார், உங்களைச் சுற்றிலும் பிறப்பெடுத்து பழி உணர்வு கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடம் இருந்து உங்கள் குடும்பத்தினரைக் காக்கும் பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது.”

 

மேலும் ஶ்ரீ வல்லபர் கூறுவார்,  “இறைவனையே எண்ணிக் கொண்டு, தியானித்து வரும் உங்களை ஏமாற்றுவதில் மகிழ்ச்சியையும், தங்களின் புத்தி கூர்மையையும், கேடுகள் செய்வதில் தான் தங்களது வீரம் எனவும் எண்ணுகின்றனர் தம்பனவசியன் மக்கள். உனக்கும் உனது குழந்தைகளுக்கும் தீங்கு விளைவிக்க எண்ணுபவர்களுக்கும் மற்றும் துரோகம் செய்பவர்களுக்கும் ஏற்படும் கொடிய பாவங்கள், ஒரு போதும் அவர்களை விட்டு விலகுவதில்லை. நம்பிக்கை துரோகமும், மித்ரு துரோகமும் செய்திடும் அவர்களுக்கு நரகத்தின் வாயில் திறந்திருக்கின்றது. தம்பன வசியனின் கூட்டத்தார், தெய்வீகத் தன்மைகளை அழிக்க நினைக்கும் பாவிகளாவர். என்றென்றும் மீளமுடியாத நரகத்தில் கிடந்து அல்லல்படுவார்கள். இறை நம்பிக்கை மிகுந்த பக்தர்களைக் கேடுறுத்த வரும் அவர்கள் குறிப்பாகக் கற்றறிந்த அறிஞர் பெருமக்களுக்கு அநேக துன்பத்தை ஏற்படுத்த முயல்வார்கள். ஏ பொன்னம்மாள் நாச்சியார் அவர்களே, நீங்கள் சர்வ ஜாக்கிரதையாக ஶ்ரீ ஈஸ்வர குமரரின் குடும்பத்திற்குத் தகுந்த பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்வது நலம். யார் வீட்டிலும் விருந்துண்ண அழைத்தாலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். உண்ணும் உணவில் விஷமிடுவது, மருந்தீடுகள் வைத்து அடிமை கொள்வது என்றெல்லாம் செய்து வருவது அக்கொடிய கூட்டத்தார் வழக்கம்”  என்றார்.

 

இச்சம்பவம் சுவாமியின் வீட்டில் நடைபெற்று முப்பத்தி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓர் உண்மையைத் தெளிவாகக் கூறுவதென்றால் ஶ்ரீ வல்லபர் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய எச்சரிக்கை அப்படியே பலிதமானது. பொறுமையுடன் காத்திருந்த தீமையாளர்கள் தங்களது காரியத்தைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டனர் என்ற அதிர்ச்சித் தகவல்கள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. நமது சுவாமியும் துறவியும் புறப்பட்டுச் சென்ற பிறகு அன்றைய இரவே வீட்டில் பூகம்பம் வெடித்தது. சரமாரியான கேள்விகளுக்கு மௌனத்தையே பதிலாக்கினார் மீனாம்பாள் நாச்சியார். பாட்டியோ சுவாமியின் குடும்பத்தைப் பாதுகாக்க இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார்.

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2  இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்

வணக்கம், நன்றி!

ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்

மதுரை M. மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button