கால நியதியில் வல்லபரின் முன்னெச்சரிக்கை!

342

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் – 2

 

(6)  கால நியதியில் வல்லபரின் முன்னெச்சரிக்கை!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

“ரிஷி பெருமானே அபாயகரமானது எதுவெனில், எதிர்மறையான குணங்களும், நேர்மறை குணங்களும் நொடிக்கு நொடி, மாறி மாறி, தோன்றி அலைக்களிக்கும் மனப்பான்மை கொண்டு, எதனையும் அடிக்கடி மறைக்கும், மறக்கும் புத்தியைப் பெற்றிருப்பவர்கள் மேல் வைக்கும் நட்பும், அவர்களிடம் எதிர்பார்க்கக்கூடிய அன்பும், என்றும் எப்பொழுதும் அபாயமானது. ஏனெனில் தனது சுயலாபத்திற்காக யாருக்கேனும் இன்னல்களை விளைவிக்கத் தயங்க மாட்டார்கள். அவர்கள் விரைவில், எந்த நேரமும், தனது புத்தி சுவாதீனம் இழந்து போகக்கூடிய ஆபத்தில் உழன்று கொண்டிருப்பவர்களே! ” என்று நமது நாகராஜன் சுவாமி அவர்கள் விடை பகர்ந்தார். இதனைக் கேட்டதும் திருப்தி அடைந்த மகான் ஶ்ரீ வல்லபர் தனது மனதினுள், ” நல்ல குணங்களையே நாடும் சற்குரு ஶ்ரீ ஈஸ்வரர் தீர ஆலோசனை செய்யும் பழக்க நலன் மிகுத்த சீடர்களை மட்டுமே தேர்வு செய்கின்றார்  “என எண்ணி மகிழ்ச்சி உற்றார்.  மேலும் ஶ்ரீ வல்லப ரிஷி நமது சுவாமியிடம், “ஶ்ரீ ஈஸ்வர குமரனே இவ்வுலகில் நீ செய்துள்ள அநேக நன்மையான காரியங்களினால் மட்டுமே இதுவரையில் காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றாய்.  அது தொடர்ந்தால் இனி வரும் காலங்களிலும் உனக்கு இறையருள் தகுந்த பாதுகாப்பை நல்கும். உனக்கு வர இருக்கின்ற பெரும் ஆபத்துக்கள் எப்பொழுது ஏற்படும் என்பதை முன்னெச்சரிக்கை செய்வது எனது கடமையானதால் நன்றாக கவனித்துக் கேட்டுக் கொள் ”  என்றார். 

 

“மலை உச்சியிலும், அடர்ந்த வனங்களிலும் தவம் செய்யப் போகும் சந்தர்ப்பத்திலும் ஏற்படும் ஆபத்துக்கள், பெரு வெள்ளத்தில் நீ ஜெபம் செய்யும் நேரத்திலும் ஏற்படும் இடர்கள், மறைமுக எதிர்ப்பாளர்கள் மற்றும் நேரிடையாக மோதும் எதிரிகள் தரும் தொல்லைகள், ஆழம் மிகுந்த பெரும் பள்ளங்களிலும், சர்பக்காவுகளிலும், காரண காரியங்களால் வீழ்ந்துபடும் போதும் உண்டாகும் ஆபத்துக்கள், மிருகங்களினால் ஏற்படப் போகும் இன்னல்கள், உறங்கும் காலத்தில் பிறரால் திட்டமிடப்பட்டு ஏற்படுத்தும் மரண அபாயக் கால கட்டங்கள்,  திடீரென நெருப்பினால் சூழப்பட்ட நேரம், உணர்வு மாறி மயங்கிப் பாதையில் விழும் சந்தர்ப்பங்கள் என இவைகளில் இருந்து, கட்டாயமாக இறையருள் பக்கத்துணையாக இருந்து உன்னைக் காப்பாற்றுவதை எனது மனக்கண்களினால்  கண்டு மகிழ்கின்றேன். பவானியில் நீ வாழ்ந்து வரும் போது பற்பல அனுபவங்களைப் பெறுவாய். உனது குலத்தில் ராஜமாதா தேவியின் அருளாசி உனக்கு உண்டு. வழிவழியாக முன்னோர்கள் வழிபட்டுப் பிற்காலத்தில் அந்த வழிபாடு நின்று விட்டதை நீ தொடர்ந்து செய்து வர வேண்டும்” என்று சொல்லி  தைரியம் ஊட்டினார். அவருக்கு நமது நாகராஜன் சுவாமி நன்றி கூறினார். பாட்டி பொன்னம்மாள் நாச்சியார் சுவாமியின் பயணத்திற்கு முழுமையான ஆதரவும், ஆசிகளும் வழங்கி நமது சுவாமியைக் கௌரவப்படுத்தினார். இந்தச் செய்கை அவருக்கு இருந்த கொஞ்சநஞ்ச ஆணவத்தையும் அடியோடு போக்கடித்து விட்டது. சுவாமி கூசித் தலைகுனிந்தார். இதனைக் கண்ட வல்லபர் கடகடவென சிரித்துஓ விட்டார். நல்ல பேரன், நல்ல பாட்டி எனக் கேலியாகக் கூறவும் அவரது ஆசி வேண்டிப் பணிந்தார் நமது சுவாமி ! வல்லபர் மனநிறைவுடன் ஆசியருளினார்.

 

சுவாமியின் துணைவியார் மீனாம்பாள் நாச்சியார் அவர்கள் மனதில் கவலை குடி கொள்ளத்துவங்கி இருந்தது. “தனது கணவன் உடன் இருக்கும் போதே எத்தனை துயரங்களைச் சமாளிக்க வேண்டியுள்ளது. அவர் இப்போது துறவி அழைத்திட உடன் செல்கின்றார். அவரது கர்மா இறையருள் மட்டும் தான். அதுவே வேதத்தின் உண்மை என்று என்னிடத்தில் அவர் கூறுவது முற்றிலும் உண்மை என்றே என் மனது கூறுகிறது. பாட்டி அவர்கள் பொறுமையில் பூமாதேவிபோல் இருக்க வேண்டும் என அடிக்கடி ஞாபகப் படுத்துகிறார். எல்லாம் ஆண்டவன் சித்தப்படியே தான் நடக்கிறது என உணர்கிறேன். துறவியோ அறிஞராகவும், புத்திசாலியாகவும் காணப் படுகின்றார். கணவரை அவருடன் செல்ல விடாமல் தடுத்தால், அவரின் விரோதம் ஏற்படும். அதனால் கணவரின் லட்சிய நோக்கம் தடைப்பட்டு விடுமல்லவா? அவர் துறவியுடன் சென்று வரட்டும். ஆண்டவர் துணையும், நாச்சியார் பாட்டியின் ஆதரவும் இருக்கும் வரையில் நமக்கு எந்தவிதப் பயமும் கிடையாது. இனி கடவுள் விட்டவழி” என தனக்குத்தானே ஆறுதல் படுத்திக் கொண்டார். தனது குழந்தைகளைத் தனது அருகே உட்கார வைத்து ஆறுதலுடன் அரவணைத்துக் கொண்டார். கால நியதியில் இறைவன் அநேக உண்மைகளை வெளிப்படுத்தித் தனது மகிமையை உலகினுக்கு உணர்த்திக் கொண்டு இருந்தார். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை இறைவனிடம்  சமர்ப்பித்து வந்தனர்.

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

வணக்கம், நன்றி!

ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன் 

மதுரை M. மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button