சாதனையாளர் சிரஞ்சீவி ஆஞ்சநேயர்!

359

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(14)

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

சாதனையாளர் சிரஞ்சீவி ஆஞ்சநேயர்!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அஞ்சனாதேவி, ” மகனே பகுத்தறிவைப் பெற்றுவிட்ட உயிர்த் தன்மைக்குச் சில வெளிப்பாடுகள் உண்டு. அதற்குத் தன்னைத்தானே அறிந்து கொள்ள முடியும்.  தன்னைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல இயலும். தவிர தான் விரும்பியபடி  தன்னை உருவாக்கிக் கொள்ளவும் அதற்கு  தகுதியும் உண்டு. அத்துடன் தான் பெற்றதைத் தானே தான் அனுபவிக்கும். மேடையில் நடை பெறும் ஒரு கூத்தானது  ஏதாவது தடங்கல்கள் ஏற்படின், அது அரை குறையாக நின்று போகும் அல்லவா? ஆனால் பகுத்தறிவைப் பெற்றுவிட்ட மனித ஜீவனின் வாழ்வின் முறையோ, எந்த சமயத்திலும், எது நேர்ந்தாலும் அது பூரணமான முடிவை ஏற்படுத்திக் கொள்ளும். என்னதான் நேர்ந்தாலும் அதற்குத் தக்கபடி தனது கடமை இதுதான் என்ற முடிவை எடுத்துக் கொண்டு, எடுத்த முடிவைப் பூரணமாக ஏற்றுக் கொள்ளும். பகுத்தறிவு பெற்ற மனித வாழ்வை, மனித எண்ணம் போல் வழிநடத்தும் ஆத்மாவின் அறிவினுக்குள், பிரபஞ்சங்கள் முழுவதும் அடங்கி நிற்கும் மகனே. நாம் வாழும் உலகைச் சுற்றியுள்ளது ஆகாயம் எனப்படும். அதற்கு அடுத்து இருப்பதைக் காலம் எனக் குறிப்பிடுவர். அதன் பின்பு உள்ளது கல்பம் ஆகும். இவை அனைத்தும்  அறியும் பொருளாய் இருப்பது ஆன்மாவே!எதிர்காலம், கடந்த காலம் இரண்டையும்  அறியக்கூடிய பகுத்தறிவு உடைய உயிராத்மா, கருணையும், அன்பும், அழகும், தன்னை வளர்த்துக் கொண்டு பிறவற்றை வளர்ப்பதும், சகல சௌபாக்கிய செழிப்பு உடையதும், அடக்கமுடைமையும், சத்திய தர்மங்களும் கொண்டு விளங்குவதாகும். அப்படிப்பட்ட ஆன்மாவே உயர்ந்த பொருள் என அறிவாய் மகனே.”

 

“ஆன்மாவின் அறிவும், திறனும், உலகத்தின் நன்மையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இறைவனது அருட்கட்டளையாகும். மகனே ஆஞ்சநேயா, உலகத்தில் காணும் காட்சிகள், இயல், இசை, கூத்து, வேடிக்கை மற்றும் விளையாட்டுக்கள் அனைத்திலும் ஓர் உண்மை மறைந்து உள்ளதைக் கூறுகிறேன் கேட்பாயாக! அவைகளில் உள்ள, ஒலி, ஒளித்தன்மைகளை மற்றும் அவைகளின் அசைவுகளையும் வெவ்வேறாகப் பிரித்துப் பார்த்து அறிய வேண்டும். அதனை அறிந்து கொள்பவருக்கு நற்குணங்கள், நற்செயல்கள் தவிர வேறொன்றிலும் நாட்டம் செல்லாது. அதனை அறிந்து கொண்டு அற்பமானவற்றை நாம் தள்ளிவிட வேண்டும். அதில் தான் சிற்றின்ப, காமாதி, மோககுணத் தன்மைகள் அடங்கியிருக்கும். அவற்றில் இருந்து விடுபட நான் கூறிய உபாயத்தை நீ கைக்கொள்ள வேண்டும். மகனே கேள், நைஷ்டிகப் பிரம்மச்சரியத்தைக் கடைப் பிடித்து, சிரஞ்சீவியாக உலகில் என்றென்றும் நீ வாழ்ந்து வரவேண்டும். தவவாழ்வில் ஈடுபட வேண்டும் மகனே”  என அறிவுரை கூறி ஆசியருளினாள். அது மாருதியின் மனதில் கற்பூரம் போல் பற்றிக் கொண்டது. அன்று முதல் தாயின் வழிகாட்டுதலின்படி தவவாழ்வில் ஈடுபட்டு வரலானார். அவரது மனோசக்தியின் ஆற்றல் வளரத்துவங்கி விட்டது. அதனுடன்  உடல் வலிமை அபரிமிதமாகப் பெருகியது.  ரிஷிமுனிவர்களின் சாபத்தால் அவரது பலம் மட்டுமே நினைவை விட்டு விலகியிருந்இயல்ஓடத்துவங்காவதாரக் காலத்தில் ஆஞ்சநேயர் அவதார ரகசியத்தைத் தேவர்களுக்கு கைலாய ஆலால முனிவர் கூறியதை அருகில் இருந்து கேட்ட மாருதிக்கோ, “ராம், ராம்” என்ற ஜெபமானது உயிர்மூச்சில், சுவாசத்தில்  இயல்பாக ஓடத்துவங்கி விட்டது. அன்னையின் தவ போதனையும், தந்திட்ட ஊக்கமும் அவரை விடாத பகவத் சிந்தனையில் மகிழ்வுடன் ஆழ்த்தின.

 

தனது தயவுடைய தாயை நல்வழி காட்டிய குருவாக எண்ணி அமைதியான தவத்தில் ஈடுபட்டார். அவருக்கு அனைத்துமே சித்தி அடையச் செய்திடும் ஆகாயம் கடந்து நிற்கும் காலத்தின் செயல் துவங்கி விட்டது. இது ஆஞ்சநேயரின் பாக்கியம் தான். தவத்தினால் இறைவனிடம் உள்ள நியாயத்தையும், அவரின் மன்னிக்கும் தன்மையையும், ஆண்டவனின் கட்டளையை அவைகள் ஏற்று அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதையும் மாருதி அறிந்து கொண்டார். இறைவனின் மாறாத அன்பையும், அவரின் கருணையையும் நன்கு உணர்ந்தார். ஆத்மாவில் இருந்து வெளிப்படும் அறிவானது தன்னை சத்திய தர்மப்பாதையில் அழைத்துச் செல்லும் நல்ல வழிகாட்டியாக இருப்பதையும், அது தகுந்த பாதுகாப்புடன் இறைவன்பால் நெருங்கிய நட்பை ஏற்படுத்தித் தருவதையும் நன்கு அறிந்த ஆஞ்சநேயர் ஊக்கமுடன் தவத்தில் ஈடுபட்டார். அதனால் அறிவானது அவரைப் பொறுமை உடையவராகவும், சிறந்தவராகவும், இறைவன் மீது மாறாத அன்பு உள்ளம் உடையவராகவும் ஏற்படுத்திற்று. ஓர் உண்மைய நாடி  நல்ல தவவாழ்வில் ஈடுபடும் பொழுது, அதனிடையே கிடைத்திடும் சில அபூர்வ சக்திகள் மேலும் வளர்ச்சிபெற..?

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி, 

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button