Nagavanam Pallikonda Sri Selva Anjaneyar Parihara Temple

நாகவனம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் சன்னதி

கலியுகத்தில் வரபிரசாதமாக கிடைத்த கோயில். இருபத்தி ஏழு அடி நீளத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலம் காணக் காணப் பரவசத்தையும் பக்தி உணர்வையும் நமக்கு ஏற்படுத்தி விடுகின்றது இராமாயண கால தொடர்புடையது. பொதுவாக புண்ணியங்கள் கோடி தந்திடும் புனிதம் மிகுந்த ஷேத்திரம் இது. இங்கு விஷேச ஆராதனைகள், கலச பூஜைகள் மற்றும் பக்தர்களுடைய நலன் வேண்டி பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தினமும் இங்கு விசேஷ பூஜை நாட்கள் தான். உலகெங்கும் உள்ள பக்தர்கள் நாடி வந்து வழிபட்டு அருள் பெற்றுச் செல்வது கண்கூடு.

வாசனாதி திரவியங்கள் மற்றும் பச்சிலை மூலிகைகளினால் இவருக்கு அர்ச்சனைகள் நடைபெறுகின்றது. இங்குள்ள யாக குண்டத்தைப் பக்தர்கள் பதினோரு முறை வலம் வந்து வணங்கி தங்களது இஷ்ட கார்யப் பூர்த்திக்கு வேண்டிக் கொள்கின்றார்கள். சனிக்கிழமை மற்றும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூடி வழிபாடு செய்து வருகின்றார்கள்! தீமைகளை விலக்கி நன்மைகளைச் செய்திடும் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயரை, சொல்லின் செல்வனை வழிபட்டு வாழ்வின் உயர்நிலை பெற்றிட குரு ஈஸ்வராலயம் வாருங்கள்.

Call Now Button