Sri Nandi Mandapam

ஸ்ரீ நந்தி மண்டபம்

பிரதோஷ காலங்களில் ஸ்ரீ நந்தி பகவானுக்கு சிறப்பான விழா நடைபெறுகின்றது. பக்தர்கள் அறுகு, வில்வம், கனி மாலைகள் சூட்டி வழிபடுகின்றார்கள். ஸ்ரீ நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வெண்ணை, உறைந்த நெய் பூசப்படுகின்றது. குறைப்பாடு உடையவர்கள் நலம் பெற அஷ்ட தீப ஆராதனை செய்து பிரார்த்திக்கின்றார்கள்.

நினைவு ஆற்றல் குறைந்த குழந்தைகளுக்காக ஸ்ரீ நந்தி பகவானுக்கு அபிஷேகிக்கப்படும் தேனை பிரசாதமாக கொண்டு சென்று குழந்தைகளுக்குக் கொடுத்துவர நினைவு ஆற்றல் பெருகுகின்றது. இதை சிறப்பானதொரு வழிபாடாகச் செய்து வருகின்றார்கள்.

Call Now Button