சோதனை இன்றி சாதனை ஏது?

475

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(24) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

சோதனை இன்றி சாதனை ஏது?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சீதாதேவி தனது வளர்ப்புத் தந்தையான மிதிலாபுரி வேந்தன் ராஜரிஷி ஜனகரிடம், “தந்தையே இறைவனாகிய நாராயணனை ஆன்மரூபப்படுத்தி தரிசித்து வருபவள் நான். இதுவோர் அற்புதமான அனுபவம் அல்லாது மேன்மேலும் இதனைப் பெறவே உள்ளம் நாடுகின்றது! நாம் சத்திய தர்மம் தவறாத வாழ்க்கை வாழும்போது தான், நம்மால் பிறருக்கு ஏதாவதொரு வகையில் நன்மை மிகுந்த காரியங்கள் நடப்பதை நாம் அறிய முடியும். அப்போது தான் அனைத்து ஜீவர்களிடமும் நடுநிலை மாறாத ஶ்ரீமன் நாராயணனின் கருணைப் பார்வை, நம்மை ஆட்கொண்டுள்ளதை உணரலாம். இதில் சாதனையாளர் யார்? என்றால், நன்மை தீமைகளில் இருந்து உண்மைகளை அறிவால்  பகுத்துணர்ந்து, அதனை வாழ்வில் கடைப்பிடித்து வருபவரே ஆவர்! இவர்கள் தனது உடலில் இருந்து ஆன்மாவைத் தனியே பிரித்து உணரும் கலையில் பயிற்சி பெற்றால் வெற்றி அடைவதும், பலன் பெறுவதும் திண்ணம். இந்த சாதனையில் இடைவிடாத சுயமுயற்சியுடன், இறைவன் அருளுடன், குருவருளும் கூடியிருக்க மேலும் வளர்ந்து சிறப்படையலாம். இவர்களே விவேகமுடைய ஞானியர்கள்” எனத் தனது மழலை மொழி மாறாத இன்குரலில் உரைத்தாள். ஜனகர் பெற்ற பேற்றை யார்தான் பெறுவர். சீதாதேவி தூக்கிய சிவதணுசை, அவளது உரிய விவாகவயதில் ஶ்ரீ ராமச்சந்திர அவதார மூர்த்தி, எடுத்து, வளைத்து, நாணேற்றி, இரண்டு துண்டுகளாக உடைத்தார். விவேகமுடைய அவளை ராஜசபையில் மனைவியாகக் கரம்பிடித்தார். அக்கால பால திருமண நிகழ்ச்சி ரிஷி முனிவர்கள் அருளாசியுடன், இரண்டு தேசத்தின் மாமன்னர்கள் குடும்பத்தினர் முன்னால் நடைபெற்றதை, மக்கள் அனைவரும்  கண்டு களித்துப்பேருவகை உற்றனர்.

 

ராவணவதத்திற்காக அப்பாவி மனிதனாக அவதாரம் எடுத்த நாராயணன் அதற்கான நிகழ்வுகள் நடைபெற வேண்டித் தன்னைத் தானே சத்திய சோதனைக்கு ஆட்படுத்திக் கொண்டார். அத்துடன் வனராமராக  ஆரண்யத்தில் வாழ்ந்தால் தான் அசுரவதம்  செய்திடப் போதுமான ஆற்றல்களை தவரிஷிகளிடம் பெறுவதுடன், தனது குல தேவதை ஆதவனின் பாதுகாப்புக் கவசமுடன் கூடிய மந்திர உச்சாடனம் செய்து, சக்ருசம்ஹார நிகழ்வை உண்டாக்க வேண்டும் எனப் பலபடி மனதில் எண்ணிக் கொண்டிருந்தார். அயோத்தி நகரில் உள்ள உத்தியான வனத்தில், உல்லாசமாகத் தனது மனையாள் சீதாதேவியுடன் இருக்கும் போதும் தனது கடமையை மறந்தாரில்லை.  மனித ஜென்ம அவதாரம் எடுத்த பிறகு அதற்குரிய விதியின் வசப்பட்டே காரியம் ஆற்றவேண்டி இருந்தது. அப்பாவியாக, எதன்மீதும் பற்றற்ற மனிதனாக அவர் வாழவேண்டியிருந்ததால், தான் பெறும் சக்திகள் அனைத்தையும் மந்திர அஸ்த்திரங்களாக சேமித்துக் கொண்டும், ஜபதபம் செய்து அதனை உருவேற்றிக் கொண்டுமிருக்க, ஜானகி என்ற செல்லப் பெயரால் அழைக்கப்பட்ட ஆற்றலின் சொரூபமான சீதாதேவி மிகுந்த உதவிகள் செய்து வந்தாள். இவர்களின் வாழ்வே புனிதம் உடையதாக, அன்யோன்யம் மிக்கதாக, உலகத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்து கொண்டிருந்தது. ராவண சம்ஹாரத்தில் சீதாதேவிக்கும் முக்கிய கடமை விதியிருந்தது. அதற்காக சமயம் வாய்த்த போதெல்லாம் தவத்தில் இருந்து வந்தாள். தவக்கனலான அவள் உடலில் இருந்து ஆத்மாவைப் பிரித்து வாழும் வித்தையில் தேர்ச்சியையும், இறையருள் கடாட்சத்தில் மிகுந்த நம்பிக்கையும் கொண்டிருந்தாள்.

 

வாசகர்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்தப் புனித ராமகாவியத்தை பக்திபூர்வ உணர்வுடன், அனுபவப் பூர்வமாக, வடிவமைத்தவர் குரு ஈஸ்வராலயம் நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் என்பது, மறைக்கப்பட்ட ஓர் உண்மையாகும். ராமரைப் பற்றி ஆஞ்சநேயர் கணி்ப்பு மறுக்க ஒண்ணாத தெய்வீகக் கருத்தாகும்.  ” ஶ்ரீ ராமச்சந்திர பிரபு உணர்வு பூர்வமான, ஞானம் மிகுந்த, பண்பிற் சிறந்தவோர் அறிவாளியாவார். ஞானமானது ராமரது அறிவை இயக்கிய விதம் அவரது வாழ்வில்  முறையாக வெளிப்பட்டு, அவருடன் இருந்த அனைவர் உள்ளங்களிலும் ஊடுருவிப் பாய்ந்து, வசீகரத்தை உண்டாக்கிற்று. இவர் செயற்படுகின்ற எல்லாக் காரியங்களிலும் இறையருளின் நாட்டமே வெளிப்பட்டு அருள்வது தெள்ளத்தெளிவாகப் புலப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் இவரிடமிருந்த, நன்மைகளைத் தருகின்ற, தெய்வீக நற்குணங்களாகும். வனராமராக, ஞானவள்ளல் பிரானாக எழுந்தருளிய இவரிடம், குறிக்கோள் இருந்தது. சாதிக்கும் சாதனைகளின் சாத்தியம் மிக்கவராகத் திகழ்ந்த இவரை, ரிஷி புவங்க முனிவர்கள் மகாஞானி என்று போற்றினர். பணிவு மிகுந்த இவர் நேர்மையுடனும், அன்புடனும்,  காணப்பட்டார்” 

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button