என்றும் எப்பொழுதும் அனுமன் “சிரஞ்சீவி”

383

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

(9)
நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

என்றும் எப்பொழுதும் அனுமன் “சிரஞ்சீவி”
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
திரிகால ஞானியும், பிரம்ம புத்திரனுமான நாரதமகரிஷி வாயுதேவன் இருப்பிடத்தை தேவர்களுக்கு எடுத்துக் கூறி அவ்விடம் அழைத்துச் சென்றார். வாயில் அடைக்கப்பட்ட ஒரு பிலத்தினுள் பாலன் அனுமனை மடியில் கிடத்தியபடி அதீத தவத்தினில் இருந்தார் வாயுதேவன். அவரை சமாதானம் செய்வித்துப் பிழை பொறுக்கும்படி வேண்டிக்கொண்டனர். நினைவு தவறி மூர்ச்சித்துக் கிடந்த அனுமனை மீண்டும் பிழைத்தெழச் செய்து, வாயு தேவனை மனம் குளிரச் செய்தனர். ஈஸ்வர புத்திரன் ஆஞ்சநேயருக்கு அருளாசிகளை வாரி வழங்கினர். என்றும் எப்பொழுதும் மரணமில்லாப் பெருவாழ்வில் வாழும் பாக்கியத்தைத் தந்தருளி, “சிரஞ்சீவி ” என வாழ்த்தினர். இருந்தாலும் அனுமன் மீது வாயுதேவனுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? எனவும் பேசிக் கொண்டனர். அப்போது கைலாயவாசி ஆலால முனிவர் அவர்கள் முன்னால் தோன்றினார். அவரை அனைத்து தேவாதி தேவர்களும் நமஸ்கரித்துப் போற்றினர். அவர் தேவர்களைப் பார்த்து, “மங்களம் உண்டாகட்டும் தேவர்களே! உங்களது ஐயத்தைப் போக்கிடவே மகாதேவரின் ஆணையின்படி உங்கள் முன்னிலையில் நிற்கின்றேன் ” என்று நட்புடன் கூறினார். முக்கால நடப்புக்களையும் அறியக் கூடியவரான திரிகாலஞானி நாரதர், தேவர்களின் சந்தேகத்தை அவரிடம் பக்குவமாக எடுத்துக் கூறினார். “ஐயனே சிரஞ்சீவி அனுமான் அவதார நோக்கமும், அஞ்சனை யார்? வாயுதேவன் புத்திரன் என்ற பெயர் காரணமும் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். அதனை எடுத்துக் கூறும் தகுதி உங்களுக்குத்தான் இருக்க முடியும். தங்களின் திருவாக்கினால் அதனை அடியேனும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்” எனப்பவ்யமாகக் கூறினார்.

கைலாய ஆலாலமுனிவர் வானவர்களை நோக்கி, ” ஓ தேவர்களே! சிவபக்தன் ராவணேஸ்வரன் இறவாத வரம் வேண்டி, சிருஷ்டிக்கும் தேவர் சதுர்முக பிரம்மனை நோக்கி கடுமையாக தபஸ் இருந்தான். தபஸ்வியின் நோக்கம் இயற்கைக்குப் புறம்பாக இருந்ததால் பிரம்மதேவர் காட்சி தர விரும்பவில்லை. அநேக ஆண்டுகள் மகாயாகம் செய்தும் படைப்புதேவன் காட்சி தராததால், அந்த யாககுண்டத்தில் தனது சிரசினை அறுத்து ஆஹூதியாக வழங்கினான். தவபலத்தாலும், சிவனின் அருளாலும், அறுபட்ட சிரம் மீண்டும் முளைத்தது. ஆனாலும்பிரம்மதேவர் தென்பட வில்லை. மீண்டும் உக்கிர தவம் செய்து சிரசை அறுத்து ஆஹூதி தந்தான். சிரசு மீண்டும் முளைத்தது. படைக்கும் தேவர் தென்படாததால் பத்துவிதமான மகாயாகம் பற்பல ஆண்டுகள் செய்து, பத்துத் தடவைகள் தனது சிரசைக் கொய்து ஆஹூதியாக இட்டான். தவத்தின் உக்கிர பலனால் தசகண்ட ராவணன் என்ற பெயர் பெற்றான். தவத்தின் ஜூவாலை தாளாது பிரம்ம தேவர் ராவணன் முன்பு தோன்றினார். இயற்கைக்கு மாறாக இறவாத வரம் கேட்டதால், அதனை மறுத்த படைப்புதேவர் வேறொரு வரம் கேட்க இயம்பினார். இறவாவரம் மட்டுமே வேண்டும் என ராவணன் வற்புறுத்தியதால், சிவனைக் குறித்து தவம் தவம் செய்வாய் என ஆலோசனை வழங்கிவிட்டு மறைந்தார்.

தசகண்ட ராவணன் சிவபெருமானை நோக்கி உண்ணாமல், உறங்காமல் ஒற்றைக் காலில் நின்று தபஸ் செய்தான். சிவன் பிரதியட்சமானார். தவத்தை மெச்சி ஈஸ்வர பட்டத்தை வழங்கினார். இறவாதவரம் வேண்டிய தசகண்ட ராவணேஸ்வரனிடம், படைக்கப்பட்ட அனைத்து ஜீவர்களும் மரணமடைய வேண்டிய விதி உள்ளதால், வேறொரு வரம் கேட்கப் பணித்தார். நன்கு ஆலோசித்த ராவணன் அப்பாவியாகப் பிறந்த மானுடன் ஒருவனைத்தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் நேரிடக் கூடாது என்ற வரத்தினைப் பெற்றான். சர்வேஸ்வரனும் அப்படியே ஆகட்டும் என்று ராவணேஸ்வரனுக்கு அருளாசி வழங்கி விட்டார் ” என்று கூறினார். மேலும் ஆலால முனிவர், “தான்பெற்ற வரத்தின் பலனால் தசகண்டராவணன் மிகவும் ஆணவம் கொண்டு, தேவர்களாகிய உங்களைத் துன்புறுத்தினான் அல்லவா? பஞ்சபூவைத்து அடிபணிய வைத்து ஆட்டிப் படைத்தான். ஆஸ்ரவாசிகளாகிய முனி, ரிஷிகள் யக்ஞங்களைச் செய்ய இயலவில்லை. பொதுவாகக் கொடுமைகளின் மொத்த உருவமாக அவன் மாறிவிட்டான். அசுராதிகள் தந்த தொல்லைகளை யாராலும் தாங்க இயலாமல் தவித்தனர். குபேரன் அவரது நகரத்தை விட்டு அடித்து விரட்டப்பட்டார். ஶ்ரீமன் நாராயணன் தேவமுனி ரிஷிகள் அனைவருக்கும் ஆறுதல், தேறுதல்கள் தந்தார். “நாமே ராவணன் வரம் பெற்றபடி, பூலோகத்தில் ரவி குலத்தில் உதித்த ராஜ வம்சத்தில், அப்பாவி மனிதனாக அவதரித்து, யுக்தியால் அவனை சம்ஹரிப்போம். தேவர்கள் அநேகர் அப்பாவி மனிதனுக்கு சக்தியைத் தந்திட அவதாரமஎடுப்பார்கள்.”

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!

அருளாசிகள்,
தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,
நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,
பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button