மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 வாழ்த்துரை (தொடர்ச்சி)

284

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் வரலாறு பாகம்- 2 வாழ்த்துரை (தொடர்ச்சி).

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மனித சமுதாயம் மனஅமைதியைப் பெற வேண்டும். அறிவு பெற்ற மனிதர்களாக துன்பங்களை விலக்கி இன்பங்களை அடைய வேண்டும். அதற்கான வழிகாட்டிகள் சுயநலமில்லா நோக்கோடு சமுதாய சேவைகள் ஆற்றிட முன்வர வேண்டும். மனித மனதினைப் பலவீனப்படுத்தும் எத்தகைய செயல்களாயினும், வாழ்கையில் ஏற்படும் முன்னேற்றத் தடைகளாயினும், உடலுக்கு உண்டாகும் இன்னல்கள் அனைத்திற்கும் தீர்வு காண்பவராகவும், தைரியம் தந்து முன்னேற்பாதையில் செல்வதற்கு ஊக்குவிப்பவராகவும் இருந்து விட்டால் பிறப்பின் நோக்கம் நிச்சயம் வெற்றி பெற்று விடும் என்பது உறுதி. அப்படிப்பட்ட அற்புத ஆத்மாக்களில் சிறந்தவராக நமது சுவாமி அவர்கள் திகழ்ந்து கொண்டு இருக்கின்றார். இந்த உலகில் மனித வாழ்வினுக்கு உதவிடும் ஏதேனும் ஒன்றைக் கண்டுபிடித்து, அதனை உற்பத்தி செய்பவர் உபயோகப்படுத்திடும் தொழில் துறைகளுக்குத் தகுதி உடையதா என்று கவனித்துப் பார்த்து உறுதி செய்து கொள்வார். பிறகு உலகத்திற்கு அதனை வழங்கி விடுவாரே தவிர, அப்பொருளுடன் ஒன்றி விடுவது கிடையாது. அப்படித்தான் நாங்கள் அறிந்த தவத்திரு நாகராஜன் சுவாமி அவர்கள் தாம் அறிந்த, உணர்ந்த பல உண்மைகளை மற்றும் பரிகாரங்களை வழங்கிக் கொண்டே, தமது நல்வழிப் பாதையில் சென்று கொண்டே இருக்கின்றார். எப்போதும் அவர் தெய்வீகத் தன்மை நிறைந்தவராகக் காணப்படுவதுடன், அவர் உறுதிபடக் கூறியவை அனைத்துமே உண்மையாக நடந்துள்ளது எனில் பலன் பெற்றோர் அநேகர் என்பது வெளிப்படை! அவரிடம் அன்புதான் வளர்ச்சியாகவும், பெருக்கமாகவும், நேர்மையுடனும், நேர்மறையான எண்ணங்களுடனும், பொறுமையுடனும், சிறப்புடனும் என்றுமே வீற்றிருந்து ஆள்கின்றது.

 

மனிதனே புனிதன் இரண்டாம் பாகம் முழுவதும் பவானியைச் சுற்றிலும் நடப்பதாகக் காணப்படுகிறது. அற்புத ஆற்றல்களின் வெளிப்பாடாக அப்புனிதம் அதனை  நிறைவு செய்கிறது.  தவத்திரு நாகராஜன் சுவாமி அவர்கள் எங்களுக்கு அறிமுகம் ஆனதும் இங்குதான். நாங்கள் செய்த பாக்கியம்  என்றுதான் கூற வேண்டும். இவருடைய குருநாதர் பழனியில் சமாது ஆன பல ஆண்டுகளுக்குப் பிறகு திருவாவினன்குடி  கோவிலில் வைத்து குருநாதருடன் நமது ஶ்ரீ நாகராஜன் சுவாமி நேரில்  சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த அரிய காட்சியை , அருகில் இருந்து காணும் பேறு பெற்றவன் என்கிற முறையில் உறுதிபடக் கூறுவேன். பவானியில்  இவரைக் கொண்டு இவரது குருநாதர் நிகழ்த்தியுள்ள அற்புதங்கள் ஏராளம். அவைகளைப் பற்றி மனிதனே புனிதன் பாகம் 2 – ஐ வாசிக்கும் மெய்யன்பர்கள் உணர்ந்து கொள்வதுடன் பலன்களும் பெறுவது உறுதி. நமது சுவாமி அவர்களுடன் பவானியில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து நான் பழகி வந்ததைப் போலவே, பழனியில் உள்ள சற்குருநாதர் சமாதுவில் பூஜை செய்து வந்த லைன்மேன் நடராஜா சுவாமி அவர்களும் என்னிடம் நன்கு பழகி வந்தார். அவரை ஒரு ஞாயிரன்று சந்திக்கச் சென்றிருந்தேன். ஶ்ரீ ஈஸ்வரபட் சற்குருநாதர் அவர்கள் நமது நாகராஜன் சுவாமி அவர்களைப் பற்றிய அநேக விஷயங்களைக் கூறியுள்ளதாகவும் கூறி ஆச்சரியப்பட வைத்தார். மேலும்  அநேக ஆன்மிகப் பாடங்களை சற்குருநாதர் அவருக்குப் போதித்துள்ளதாகவும், அவைகள் அனைத்தும் பொக்கிஷம் போன்றவை என்றார். நடராஜா சுவாமி அவர்கள் எதனையும் வெளிப்படையாகப் பேசும் பழக்கம் உள்ளவர். அவர் நமது ஶ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களிடம் எப்போதும் மதிப்பும், மரியாதையும், அன்பும் காட்டி வந்தவர். இவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது இறையருட் கருணை என்றால் மிகையாகாது.

 

மனிதனே புனிதன் இரண்டாம் பாகம் தனி மனிதன் உயர்வைப் பற்றிய சிந்தனையின் வெளிப்பாடு என்பதாகத்தான் நமக்கு உணர்த்துகிறது. நமது சுவாமிக்கு இது சோதனையான காலம். அவர் இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு ஸ்புடமிட்ட தங்கம் போல் ஜொலிக்கின்றார். சோதனைகளில் வென்று வருவதைக் காணும் போதில் நமக்கும் அவரைப் போன்றே வெற்றி வாய்ப்பின் உத்வேகம் பிறக்கின்றது. இதுவே இந்நூலின் வெற்றி என்பதில் ஐயம் சிறிதும் இன்றி, பெருமிதம் துலங்குகிறது. பல தெய்வீக உண்மைகளை வெளிப்படுத்தும் இந்நூலைத் தொடர்ந்து வாசிப்பவர்கள்  பெரும் பேறு பெற்றவர்கள் என்பதால் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியையும், வணக்கத்தையும் கூறிக் கொள்கிறேன். நன்றி.

 

சற்குருநாதர் துணை,

ஞானயோகி திரு ஆராவமுதன்,

பவானி,

 

வாழ்கவே! வளர்கவே! வளம் பெருகவே! அருள் தருகவே!

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button