மனிதனே புனிதன் பாகம் – 2 முன்னுரை (தொடர்ச்சி)

369

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் -2

முன்னுரை தொடர்ச்சி…..

 

ஆத்ம பலம் பெற்று, தன்னொளிப் பெருஞ்சுடராய் வளர்ந்து, ஈஸ்வர சக்தியுடன் இணைந்து செயல்புரிய விழையும் வைராக்கியம் கொண்டு வாழ்ந்து வரும் குருஈஸ்வராலய பக்தர்களே! அன்பர்களே, குரு உபதேசம் என்பது சொல்லால் விளக்கவொண்ணா அமிர்தம் நிறைந்த சாகா வரமளிக்கும் ஔஷதமேயாம். நாம் பாக்கியம் செய்தவர்கள். நன்றி சுவாமி.

 

ஆசிரியர் அவர்கள் சுவாமியின் வாழ்க்கை வரலாற்றுடன் கிடைப்பதற்கரிய அவருடைய மற்றும் ஈஸ்வர மஹா ஜோதி ஆண்டவருடைய அற்புதமான உபதேசங்களையும் அளித்திருப்பது நமக்கு நல்வழிகாட்டும் ,செயல்புரிய ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

 

எண்ணற்ற உபதேசங்கள், நிறைந்து இருக்கும் இந்த புத்தகம் மெய்ஞானப் பொக்கிஷம் ஆகும்.

 

அன்பர்கள், ஆசையுடன் பொறுமையாக , உள்ளார்ந்த அர்த்தம் மனதில் உதயமாக வேண்டும் என்று சுவாமி அவர்களையும் , சற்குருநாதரையும் வேண்டி வணங்கி, படித்து, வாழ்வில் கடைபிடித்து, பேரின்பப் பெருவாழ்வாய் வாழ்ந்து வளர்ந்திட வேண்டும் என்ற ஆசையுடன் அடியேனும் வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.

 

மேலும் ஈஸ்வரரின் அன்புக்கும், சுவாமியின் அருளுக்கும் உரியவனாக இருப்பதே எனது மகிழ்ச்சி என்று இத்துடன் முன்னுரையை நிறைவு(வாக) செய்து அவையடக்கம் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

என்றென்றும் அன்புடன்,

ஞானயோகி திரு K S மணிகண்டன்,

தூத்துக்குடி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button