மனித லட்சியம் சமூதாய சேவை.

645

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். 

 

18•09•2017,

ஞாயிற்றுக்கிழமை, 

குரு ஈஸ்வராலயம்,

பொள்ளாச்சி. 

 

(445) மனிதனே புனிதன் —

மனித லட்சியம் சமூதாய சேவை. 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மனிதன் தனக்குள் மறைந்து வீற்றிருக்கும் ஆத்மாவை அறிந்து கொள்ளத் தன்னுள்ளே மனதினைச் செலுத்திக் கண்டு கொள்வதுடன், மேலும்  விடாமல் தனது சிந்தனையைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மனிதன் தனது ஆத்மாவிற்குச் செய்திடும்  சேவை இதுதான் என்பது ஞானியர்கள் வாக்கு. இதனால் கவலைகள் மறையும். காம, மோக குணங்கள் கட்டுப்படும். மனக்கலக்கங்கள் உள்ளத்தைக் பாதிப்படையச் செய்யாது காத்துக்கொள்ள முடியும். சுகம், துக்கம் இரண்டையும் சமமாகக் கொள்ளும் மனம் ஏற்பட்டு விடும். வாழ்வின் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் இறையருளால் நடை பெறுகிறது  என்று எண்ணி அவைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டாகும். நமது குடும்பத்தினர் உற்றார்  உறவினர்கள், மற்றும் நண்பர்கள் யாருடைய குற்றம், குறைகளையும் மன்னிக்கும் மனப்பான்மை உண்டாகும். எது நன்மை? எது தீமை என்று அறிந்து கொள்ளாத ஜனங்கள் செய்யும், அறியாப் பிழைகளைக் கண்டு அவர்கள் மீது இரக்கம் கொள்ளும் குணம் உண்டாகும். அதற்கும் மேல் இறைவன் மீது நீங்காத, இடைவிடாத பற்றும் ஏற்பட்டு விடும். இவைகளை உணர்ந்து  அடைந்து விடாத மனிதர்கள் அறிந்து கொள்ளவே, உலகக் குப்பைகளை சுத்தம் செய்து நெருப்பிட்டு பஸ்மப் படுத்துவது போலவே உள்ளத்தில் உள்ளே கிடக்கும் வேண்டாத தீமை குணங்களை அறிவின் நெருப்பால் சுட்டெறிக்க வேண்டும். இதனை சற்குருநாதா உணர்த்தியதால்  நமது சுவாமி பக்குவ நிலையில் செயல்படத் துவங்கினார். தங்கும் விடுதி மேலாளருக்குச் சுவாமி மனதினுள் நன்றியைத் கூறிக்கொண்டார். இல்லாவிடில்  இரவு முழுவதும் தியானத்தில் ஈடுபடும்  அருமையான வாய்ப்பு வாய்த்திருக்குமா? கேள்விகள் அற்ற விடைகள் அநேகம் அந்த நிசப்தமான இரவில் கிடைத்தும் கொண்டே இருந்தன. ஆனால் அதற்கான கேள்விகள் பற்றி சுவாமி அறிந்திருக்க வில்லை. தியானத்தின் போது சற்குரு நாதர் குரல்  இனிமை மிகுந்த ஓசைக்குப் பிறகு கேட்கத் துவங்கியது. குரல் செல்லிய வாசகம், “பதில் கூறுவது சுலபம் ஆனால் கேள்விகள் கேட்க அநேக ஞானவிஷயங்களை அறிந்திருக்க வேண்டும். தொடர்ந்து ஆத்மாவின் மீது உள்ளத்தைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும் ” என்றது.

 

நமது நாகராஜன் சுவாமிகள் அதி காலையில் காவேரியில் நீராடி விட்டுக் குமாரபாளையம் தொழில் அதிபரும், பவானி தியானசங்கத்தின் ஞான யோகியுமாய் விளங்கி வந்த திருSSM சுப்பிரமணியம் ஐயா அவர்களை அவரது வீட்டில் சந்திக்க ஆயத்தமானார். தொலைபேசியில் தொடர்பு  கொள்ளப் போனார். விடுதியில் பேசினால் அங்கு தெரிந்து கொள்வார்கள் என எண்ணினார். குறிப்பிட்ட எண்ணில் அவரது மகன் பேசினார். தன்னை அறிமுகம் செய்து கொண்டு பவானி விடுதியில் தங்கியுள்ளதாகக் கூறினார். உணவு சாப்பிட்டு விட்டு வந்து விடுவதாகக் குறிபுபிட்டார். மறுமுனையில் பரபரப்பான பேச்சுக்குரல்களும், சீக்கிரமே அழைத்து வா என்னும் சப்தங்கள் கேட்டன. தகவல் சொல்லி விட்டு நமது நாகராஜன் சுவாமி உணவு அருந்தச் சென்றார். தற்போது நமது பரிகார ஸ்தல அன்னதானக் காசாளர் பொறுப்பை வகித்து வரும் ஞானதவச் செல்வர் திரு ஆராவமுதனின் மாமா அவர்களின் வீட்டிற்கு எதிர்ப்புறம அந்த உணவு விடுதி இருந்தது. அக்காலகட்டத்தில் திரு ஆராவமுதன் அவர்களும் மற்றவர்கள் யாரும் நமது சுவாமி அவர்களுக்கு அறிமுகமாயிருக்க வில்லை. அந்த உணவு விடுதி பாரத் கபே என்ற பெயருடன்,  உயர்ந்த படிக்கட்டுகளுடன் விளங்கியது. இப்போது பாரத் கபே இருந்த இடத்தில் கரூர் வைஸ்யா வங்கி  இயங்கி வருகிறது. கவுண்டர் கடை என்று உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படும் அந்த உணவு விடுதியில் தரம் வாய்ந்த உணவுகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்தது. 

 

சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்கள் நமது சுவாமியின்  வீட்டிற்கு வரும்போது ரவாதோசையை விரும்பிச் சாப்பிடுவார். திருமதி மீனாம்பாள்  நாச்சியார் அவர்கள் பக்தியுடன் படைப்பார்கள். சிலசமயம் குருநாதர் நெய் காரசீடை கேட்பார்கள். தெய்வீக உணர்வுடன் படைப்பதை உண்டு மகிழ்வார்கள். ஆனால் அவர் உணவு உண்பதை பழனி தெய்வத்திரு. நடராஜா சுவாமி அவர்கள் கண்டு ஆனந்தப்பட்டு இருக்கிறார்.  கண்ணீர்மல்கி  அன்பின் மிகுதியால் அவர் தரும் உணவை உண்டு ஆசி அருளியுள்ளார். நமது சுவாமியும் சுவையான உணவை உண்டு விட்டுத் தங்டும் விடுதிக்குத் திரும்பினார். விடுதி பரபரப்பாகப் காணப்பட்டது. விடுதியின் மேலாளர் ஓடி வந்து நமது சுவாமிக்கு நமஸ்காரம் கூறினார். ” ஐயா, தாங்கள் யார்?  எதற்காக வந்திருக்கின்றீர்கள்? என்று தெரியாததால் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டு விட்டேன். திரு SSM ஐயா அவர்களின் வீட்டில் இருந்து உங்களை அழைத்துப் போக மூன்று கார்களில் வந்தார்கள் ” என்றார்.

 

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்! 

 

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்! 

மதுரை M. மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button