நமது சுவாமியும், நாகபாபாவும்.

266

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

06•09•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(433) மனிதனே புனிதன் —
நமது சுவாமியும், நாகபாபாவும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் இருந்து வந்த நமது சுவாமியின் ஆத்ம நண்பனிடம், இளந்துறவி அநேக விஷயங்களை வெளிப்படுத்தி விட்டார். ஆனால் கடைசியில் தனது காதில் கூறிய முக்கியமான செய்திகளை மறைத்து விட்டார். தனது கண் முன்னால் நாக பாபா காற்றில் கரைந்து மறைந்து போன அந்த நிகழ்வை நேரில் கண்டதாலோ, என்னவோ அவர் மனதில் பலத்த பாதிப்பை அது ஏற்படுத்தி விட்டது. அதனை அவர் கிராமத்துக்கு வந்த போது நமது சுவாமியும் நேரில் தெரிந்து கொண்டார். அவர் தனக்குத் தானே தானாகப் பேசிக் கொண்டிருக்கும் அந்த சூழல் மனதை நெருடியது. நமது சுவாமி திண்டுக்கல் நண்பரிடம் கூறினார், “இறைவனை எண்ணி தியானம் செய்வது என்பது எல்லா மதத்திற்கும் பொதுவானது. அவரவர்கள் மதத்தில் இறைவனுக்கு என்ன பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறதோ, அதன்படியே தியானம் செய்யலாம். ஆனால் மனது முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் ” என்றார். அதற்கு நண்பர் கேட்டார், “மனம் முழு ஈடுபாடு கொள்வது என்பது தான் மனஒருமைப்பாடா? ” நமது சுவாமியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து விட்டு கேலிச் சிரிப்பொன்றை முகத்தில் காட்டினார். நண்பரின் வாதம் செய்யப் புகும் எண்ணத்தைப் பற்றிச் சிந்திக்காமல் நட்பாகச் சிரித்தபடியே பேசினார். “ஓரு வார்த்தை பேசப்படும் கருத்தை ஒட்டியே தமிழில் பொருள் கொள்ளப்படுகிறது. நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் மனது முழுமையாக ஒத்துழைத்தால்தான் சிறப்பான காரிய வெற்றியை எட்ட முடியும். மனம்ஒருமைப்பாடு அடைந்து விட்டால் நீங்களும் ஞானியர் என்றே கூறிக்கொள்ள முடியும். தியானம் செய்வதால் மட்டுமே மனஒருமைப்பாடு ஏற்படும். அதுவே வெற்றி! இந்த வெற்றியை அடைவதற்கு தியானம் செய்யும் போது ஈடுபாடும், அக்கறையும் கொண்டு முயற்சிக்க வேண்டும். தியானப் பயிற்சியைத் தினமும் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து கடைப்பிடித்து வரவேண்டும். இதனால் அற்புத ஆற்றல்கள் உண்டாவதை உணர்ந்து கொள்ள முடியும் ” என்று முடித்தார்.

அந்தக் காலகட்டத்தில் வெள்ளை நிறத்தில் ஜிப்பா ஆடையும், தூய மல்வேட்டியும் அணிந்தபடி ஒரு பெரியவர் அடிக்கடி கண்ணில் தெவன்பட்டுக் கொண்டே இருந்தார். பழனி கரிக்காரன் புதூரில் இருந்து வந்திருந்த கணேசன் அவரைப்பற்றி அடிக்கடி கூறி வந்தார். கணேசனிடமும், கிராமத்தில் அநேகம் பேர்களிடம் நமது சுவாமியைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்ததால், கிராமத்து ஆண் , பெண் முதியோர்கள், ” எதற்காக எங்களிடம் கேட்கிறீர்கள்? அதை அவரிடமே கேட்கலாமே, வாருங்கள் போகலாம் ” என்று நமது நாகராஜன் சுவாமிகளிடம் அழைத்து வந்தனர். நமது சுவாமி முன்னிலையில் நிற்க வைத்து அவர்களே விசாரணையைத் துவங்கி விட்டனர். பெரியவருக்குத் தகுந்த இருக்கை தந்து அமரச்செய்து உபசரித்தார் சுவாமி. பாட்டி பொன்னம்மாள் நாச்சியார் அவர்கள் அவருக்கு உணவு கொடுத்து சாப்பிட வைத்தார். கிராம மக்கள் திரும்பிச் சென்றனர். அவர் தன்னை பாபா என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். 2005 -ஆம் ஆண்டில் ராமாயண காலத்துப் பரிகார ஸ்தலம் வெளிப்படப் போகும் செய்தியை உறுதிப் படுத்திக் கொண்டார். தான் மருந்துவாழ் மலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, ஒரு வருடத்திற்குப் பிறகு சற்குரு நாதருடன் பவானி வந்து நமது சுவாமியைச் சந்திப்பதாகக் கூறினார். அவரும் சற்குரு நாதரின் அருமைச் சீடர் என்பதை அறிந்து கொண்டு சந்தோஷப்பட்டார் ஸ்ரீ நாகராஜன் சுவாமி.

பிறகு சுவாமி அவரிடம், “தங்களுக்கு சற்குரு நாதரால் தரப்பட்ட பணியைக் கூறமுடியுமா? ” என்று கேட்க அவரும், ” சற்குருநாதர் உததரவின் பேரில்தான் மருந்துவாழ் மலைக்குச் செல்லப் புறப்பட்டேன். அங்கே சூட்சும உடலுடன் தவம் புரிந்து கொண்டிருக்கும் இளம் பிள்ளை சித்தருடன் தங்கி இருக்கப்
போகிறேன் ” என்றார். பிறகு மேலும் கூறுகையில், ” ராமாயண காலத்திய பரிகார ஸ்தலத்தில், உடலில் ஒன்பது தேவதா சக்திகள் இயங்கி உடலை இயக்கி வருவதைப் போன்றே அவ்விடத்திலும் ஒன்பது சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கும். அந்த தேவதைகள், மனதின் ஆற்றல்,
பார்க்கும் சக்தி, கேட்கும் சக்தி, பேசும் சக்தி, புவியின் சக்தி, நீரின் சக்தி, அக்கினி சக்தி, வாயு சக்தி, ஆகாயவெளிசக்தி எனப்படும் ஒன்பது தேவதை சக்திகள் செயல்பட்டுக் கொண்டுள்ளன. புவி முதல் ஆகாயம் வரையுள்ள ஐந்து சக்திகள் ஆலயங்களில் ஸ்தூல சக்தியான கர்பக்கிரகமாக உள்ளன. மற்ற நான்கு சக்திகளும் ஆலயத்தில் இயந்திர சூட்சுமமாக, ஹோம ஒளியாக, சங்கல்பங்களாக, மந்திர ஒலிகளாக இயக்கும் நுண்மை வாய்ந்த சக்திகளாக விளங்கி வருகின்றன. இந்த ஒன்பது தேவதா சக்திகளையும் இயக்கும் பிராணனாக இறைவனருள் செயலுறுகிறது.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button