குருவின் ஞானக்கல்வி தரும் நன்மை.

336

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

09•09•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(436) மனிதனே புனிதன் —
குருவின் ஞானக்கல்வி தரும் நன்மை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பார்வையற்ற அவரின் பெயர ஞானி. புறப்பார்வை இல்லாத அவருக்கு அகப்பார்வை ஞானச்சுடர் தான். ஏதோ ஒரு அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த அவரின் போற்றத்தக்க அறிவு முழுமை பெற்று, அவரது மனதினில் அடங்கியிருந்து, உலக நன்மைக்காக வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. இதற்குக் காரணம் அவருடன் இருந்த மகா குருவின் தூண்டுதலால் தான் இவ்வாறு அமைந்தது. அவரது உள்ளத்தினுள் அவரையே அவர் ஆராயப்புகுந்த விதம், அவருக்கு ஒரு நல்ல சந்தர்ப்ப வசத்தை உருவாக்கித் தந்ததே, அவரின் குருகடாச்ச மகிமை தான்! ஒருவர் ஒரு மகிமையை் வெளிப்படுத்துகிறார் என்றால் அது வெளியில் இருந்து அல்ல! அது அவரின் உள்ளேயிருந்து தான வெளிப்படுகிறது. சந்தர்ப்ப வசமெல்லாம் வெளியில் இருந்து ஒரு தூண்டுதல் சக்தியாய் அமைந்து தான் உதவுகிறது. பார்வையற்ற அவர் தன்னுடைய குருநாதரின் அரிய பெரும் கருத்துக்களைச் சிறிது சிறிதாகத் தன்னுள் ஈர்த்துக் கிரகித்துத்
தக்க வைத்துக் கொண்டார். பிறகு அதனைத் தனது வாழ்விலும், நடவடிக்கை களிலும் நிலைபெறச் செய்து கொண்டு, ஞானி என்ற தனது பெயருக்குத் தக்கபடி தன்னை இந்த உலகத்தில் வெளிப்படுத்திக் கொண்டார். ஞானியின் குருநாதர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் மனிதனை மனிதனாக வாழச் செய்வதாக அமைந்து இருந்தது. அதனால் சிறந்த ஒழுக்க சீலராக அவரை ஆளாக்கியது மட்டுமல்லாமல், கருத்துக்களைப் புரிந்து கொண்டு, தனது ஆற்றலையும் சேர்த்துப் பிறருக்கும் எடுத்து உரைக்கும் தனித்துவமும்
தந்தது. சிறந்த கல்வியானது தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, மனதில் உறுதியைத் தந்ததோடு,
சிறந்த ஒழுக்கத்தையும் தந்ததால், தனது ஊனத்தையும் வென்றார். வாழ்வில் இறைவனது நாட்டத்தைக் கைக் கொண்டதால் பண்பட்ட உள்ளத்தைகயும் பெற்று விட்டார்.
அதனால் அவர் எண்ணியவுடன் தெய்வீக உண்மைகள் இறைவன் அருளால் அவரிடத்தில் இருந்து உடனடியாக வெளிப்பட்டன.

இந்த ஞானியின் அறிவின் வளர்ச்சி மன ஒருமைப்பாடு அடையச் செய்ய உதவும் ஒரு வழிகாட்டியாக அமைந்து விட்டது. ஞானியின் இறைப் பற்று, உலகாதயப் பற்றிலிருந்து விடு படும் உள்ளத்தை உருவாக்கி, பக்குவ மனப்பான்மையை ஏற்படுத்தியது. இப்போது நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என்று கேட்டால், நினைத்ததை வெளிப்படுத்தும் திறந்த மனமாக அவரைப் பண்படுத்தி விட்டது. இப்படி ஒருவரை சந்திக்கும் பாக்கியம் நமது சுவாமிக்கு ஏறுபட்டது. ஞானக்கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்ற அதீத வேகமானது அது, மனக்கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, நன்மைகளை ஏற்படுத்துவதாக உள்ளதை, அறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை நமது சுவாமி நல்ல வகையில் பயன்படுத்திக் கொண்டார். ஒரு அமாவாசை தினத்தன்று நண்பர் ஒருவரின் கரத்தைப் பற்றியபடி நமது சுவாமியின் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். நாகராஜன் சுவாமி பவானி புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்த நேரம் அது. கண்களை இழந்துவிட்ட போதும் அவரது முகம் தேஜஸ் பொருந்தி விளங்கியது. அவரைப் பார்த்ததும் இவரும் சற்குரு நாதர் அனுப்பி வைத்திருக்கும் ஓர் புனிதன் என்பதைப் புரிந்து கொண்டார். ஞானி என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். பெயர்ப் பொருத்தம் அமைந்த விதம், அகக்கண் திறந்த மேன்மைக்கு இறையருள் சக்திக்கு நன்றி கூறினார். நமது சுவாமியின் கரத்தைப் பற்றிக்கொண்டு சிறிது நேரம் மெளனமாக இருந்தார். நமது சுவாமி வந்திருந்த ஞானி அவர்களிடம், ஒரு முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்டார். அது, “ஐயா ஞானி அவர்களே, யோக நிலையில் இருந்து தவம் செய்பவர்கள் அடைந்த ஆற்றல் சக்தியானது ‘எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ‘ உட்பட்டது என்று கூறப்படுகிறது. அதனுடைய பொருளை விளக்க வேண்டும் ” என்று கேட்டுக் கொண்டார்.

மெளனமாக இருந்த ஞானி அவர்கள் அதனைக் கேட்டதும்
மடைதிறந்த வெள்ளம் போலப் பேசத் துவங்கினார். “வணக்கம் அப்பா நாகராஜா சுவாமி. உங்களை சந்தித்ததில் என்னுடைய மனதில் என்றுமே அனுபவித்தறியா ஓர் இன்ப உணர்வு உண்டாகின்றது. யாரும் கேட்க விரும்பாத ஓர் (அற்புதமான) கேள்வி இது என, எனது மனதில் தோன்றுகிறது. குருநாதரிடம் அறிந்திருக்கும் தாங்கள் இதனைப் பிறரும் அறிந்து கொள்ளவே கேட்கின்றீர்கள் என எண்ணுகிறேன். வேதசாரத்தின் ஆன்மிகப் பாதையில் இது ஒரு முக்கியமான எச்சரிக்கை என்று தான் கூறுவேன். நல்ல குரு நாதரை அடைந்து அவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி ஒழுகும் சீடன் இரண்டு விதமான அனுபவ நிலைகளைக் கடந்து தான் வரவேண்டியிருக்கிறது. தாங்கள் எப்படியோ தெரியாது. என்னாலும் தங்களை அனுமானிக்க இயலாததற்குக் காரணம் ஒன்றுண்டு. ஏதோ ஒரு அதீத, இயற்கையின் ஆற்றல் சக்தியின் பாதுகாப்பில் தாங்கள் இருப்பதாக அறிகிறேன்….”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button