காற்றில் மிதந்து மறைந்தவர்.

222

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

01•09•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(428) மனிதனே புனிதன் —-
காற்றில் மிதந்து மறைந்தவர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திண்டுக்கல்லில் இருந்து நமது சுவாமியின் நண்பர் கிராமத்திற்கு வந்திருந்தார். அவர் நீண்ட நாளைய நண்பர். எப்போதும் இறைவன் சிந்தனையில் வாழ்ந்து வந்த அவருக்கு தியானம் கற்றுக்கொள்ள ஆவல் இருந்தது. கிராமத்தில் அவருக்கு உறவினர்கள் அதிகம். அவருக்குத் திருமணம் உத்தம பாளையத்தில் நடைபெற்றது. நமது சுவாமி அவர்களுடன் பழகியதால் அதிகமாகச் சந்தித்துப் பேசவும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டது. அதனால் தியானம் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பி தனது கருத்தை அடிக்கடி வலியுறுத்திக் கேட்டு வந்தார். “தியானம் யாராலும் கற்றுத்தருவதல்ல! நமது ஏக்கத்தாலும், இறையருளாலும் தான் ஏற்படுவது என்கிற வாதத்தை அவரால் ஏற்றுக் கொள்ள இயல வில்லை. வேதமானது “தியானம் செய்வது மற்ற பிரார்த்தனை களை விட மிகவும் சிறப்பானது என்று போதிக்கிறது. அதனை நாங்கள் யாரிடம் சென்று கற்பது? எனக்கு இறை நம்பிக்கை உள்ளது. தியானத்தால் அடைய முடியாத விஷயம் ஏதுமில்லை தெரியுமா? ஏன் அதனை எனக்குப் போதிக்க மறுக்கிறாய்?” என்று ஆதங்கப்பட்டார். “இன்னொரு செய்தி” என்றவர், யாரும் இருக்கின்றார்களா? என்று சுறுறிலும் பார்வையைச் செலுத்தி விட்டு மெதுவாகக் கூறினார். நமது சுவாமி அதைக் கேட்டு விட்டு மெல்லச் சிரித்தார். “என்ன சிரிப்பு இது, ஏன் நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? ” என்று கேட்டார். “அது இருக்கட்டும், மீண்டும் ஒரு முறை செய்தியைச் சொல்ல முடியுமா? ” என்று கேட்டதும் சற்று நேர மெளனத்திற்குப் பிற்கு நண்பர் கூறத் துவங்கினார். அதன் சுருக்கம் தான் இது.

கிராமத்தில் நமது சுவாமியின் நண்பர் உசேன் என்ற ஊனமுற்ற பையன் ஒருவரை சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி குணப்படுத்தினார் அல்லவா? அந்த உசேனின் இளம் வயது நண்பர் ஒருவர் திண்டுக்கல்லில் துறவி போல் வாழ்ந்து வந்தார். பேகம்பூர் என்ற இடத்தில் இருந்து அவர் உசேனைக் காணப் பலமுறை வருவார். மாறுகண் உடைய அவர் ஒடிசலாக, உயரமாக இருப்பார். சில கோவில்களில் அபிமந்திரித்த நீரைக் கொண்டு வந்து, மன நோயாளிகள், மற்றும் நோயுற்ற முதியவர்களுக்கு இலவசமாகக் கொடுத்து உதவி வந்தார். நண்பன் உசேனின் கால் ஊனம் குணமாக ஜெபநீரைக் கொண்டு வந்து தருவார். மனநிறைவுடன், இறை நம்பிக்கையுடன் இந்த உதவிகளைச் செய்து வந்தார். அவரிடத்தில் அந்த ஜெபநீரைப் பெற்றுக்கொண்டு பருகி வந்தவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் குணமடைந்தனர். அவருடைய தரும சேவையைப் கருத்தில் கொண்டு ஒரு பெரியவர் அவருக்கு நண்பரானார். தேஜஸ் மிகுந்த அந்தப் பெரியவரின் ஞானக் கருத்துக்கள் அந்த இளம் வாலிபத் துறவியின் மனதைக் கவர்ந்து விட்டது. அவரது வீட்டிற்குப் போனால் நன்கு உபசரித்து மகிழும் அவர் பிரார்த்தனை நேரத்தில் யாரையும் தன்னுடன் இருக்க அனுமதிப்பதில்லை. வெளியே அனுப்பி விடுவார். இளம் துறவிக்கோ பெரியவரின் பிரார்த்தனையில் கலந்து கொள்ள ஆவல்.

ஆவலை அடக்க இயலாமல் ஒருநாள் அந்தப் பெரியவரின் இல்லத்தில் மறைவாக நின்று கொண்டு அவரைக் கவனித்துக் கொண்டு இருந்தார். முதலில் வீட்டின் ஜன்னல், கதவுகளைப் பெரியவர் அடைத்துக் கொண்டார். பிறகு தனியறை ஒன்றில் ஒளிமிகுந்த தீபங்கள் ஏற்றி வைத்து அதன் முன்பாக அசையாது அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தார். திடீரென வீட்டின் ஜன்னல் கதவுகள் திறந்து கொண்டு படபடவென அடித்துக் கொள்ளவே, இளம் துறவியோ பயந்து நடுநடுங்கிப் போனார். ஏன்தான் இங்கு வந்து அகப்பட்டுக் கொண்டு விட்டோமோ? என்று எண்ணி மனம் துடிக்க அப்படியே தரையில் அமர்ந்து கொண்டார். பெரியவரைப் பயந்த கண்களால் பார்த்தபடியே இருந்தார். அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. பிரார்த்தனையில் இறையருளுடன் இரண்டறக் கலந்திருந்த பெரியவரின் உடல் மெல்ல மெல்லத் காற்றில் எழுந்து மிதக்கத் துவங்கியது. இளந்துறவி பயத்தால் நடுநடுங்கிக் கொண்டிருந்தவர், திடீரென பயத்தில் ஓவெனக் கத்தினார். பெரியவரின் மிதந்த உடல் மெல்ல மெல்லக் காற்றில் மறையத் துவங்கிப் பிறகு முற்றிலும் மறைந்து போனது. இளந்துறவி மயக்கமுற்று தரையில் அப்படியே சாய்ந்து விட்டார். இளந்துறவிக்குச் சுரணை வந்தபோது அந்த வீட்டில் யாருமே இல்லை. அந்தப் பெரியவர் வீடு வந்து சேரும் வரை பயத்தில் உறைந்து போயிருந்தார். மறுநாள் காலை வரையிலும் வீட்டினுள் அடைந்து கிடந்த இளம் துறவி, பூட்டப்பட்ட கதவைத் திறக்கும் சப்தம் கேட்டதும் தரையை படுத்தபடியே வருகிறது யார் என்று பார்த்தார். சிரித்தபடியே உள்ளே வந்த பெரியவர் புத்தம் புதிய நேபாளிகள் உடுப்பில் காணப்பட்டார். இளந்துறவிக்குப் பயத்தில் பேச நாஎழாமல் மாறு கண்ணால் அவரைப் பார்த்து கொண்டே இருந்தார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button