கரை பேணும் முறை….

484

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

13•09•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(440) மனிதனே புனிதன் —
கரை பேணும் முறை….
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காற்றோலம் மிகுத்துவிடின்
தூயநீர்க் கரையுடைக்கும்
வாயோலம் காட்டுங் கோபம்
சிந்தனையைக் கேடுறுத்தும்
கரை பேணும் முறையால்
காக்கும்பயிர் தான்வளர்த்தல்
நிறைபேணல் உருவாற்றான்
வருமே சாந்தநிலை ஞானச்
சுடரே.
— இயற்றியவர் தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமி

கேலி பேசியவர்கள் மெளன நிலை பெற்று விட்டனர். நமது சுவாமி அவர்கள் தமது தந்தையிடம் கரையைப் பலப்படுத்தி நாணல் பயிர் வளர்க்கச் செய்தார். இன்று வரையிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படுத்தும் சேதத்தில் இருந்து அது பாதுகாத்து வருகிறது. அதன் பிறகு நமது சுவாமியின் தகப்பனார் பவானி சென்று வர சுவாமிக்கு அனுமதி வழங்கினார். மனிதர்களில் அநேக வித்தியாசமான குணம் பெற்றவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு சில பேருக்கு ஏற்பட்டு விடும். ஒரு உயர்ந்த லட்சியம் உள்ள மனிதன் ஒருவர் மரணித்து விட்டால் சந்தோஷம் கொள்பவர்கள் நம்முடன் இருக்கத் தான் செய்கிறார்கள். இவன் உலகைவிட்டு ஒழிந்து போனல் நாம் நிம்மதியாக சுகம் பெற்று வாழலாம் எனப் பழித்துக் கூறுபவர்களும் உண்டு. இதனை வெளிப்படையாகச் சொல்லா விட்டாலும், மனதிற்குள் எப்போதும் இகழ்ந்து வருவார்கள். இன்னும் சிலர் உயிர் வாழ்வதை வெறுத்துப் பேசுவார்கள். அத்துடன் பிறறையும் வெறுத்து, அன்பு குணம் இழந்து பகைமை கொள்வார்கள். இவர்கள் நம்மை நிழல் போல் தொடர்ந்து வரும் மரணத்தை வெறுப்பவர்கள். அதனால் தான் மனிதர்களை , பிற ஜீவன் களையும் வெறுத்துப் பயந்து வாழ்வை இழந்து விட்டவர்கள். நமது சுவாமி மரணத்தை உபாசனை செய்து வருபவர். அதனால் மக்களை அன்புடன் நேசிக்கின்றார். தர்மத்தைக் கடைப் பிடித்து வருவதால் நல்லெண்ணமும், அன்பும், சாந்தம் உடைய சித்த்தைக் கைக்கொண்டு இருக்கிறார். காலத்தை அறிந்து கொள்ளும் பகுத்தறிவு கொண்ட ஜீவன்களின் குணங்கள் அடக்கமும், அன்பும், சத்தியமும்
ஆகும். இவர்கள் ஆன்மாவை உயர்ந்த பொருள் என்று அறிந்து கொள்கிறார்கள்.

ஆன்மிக விஷயங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்படுவது, மற்றவர்கள் நம் மீது செய்கின்ற ஒவ்வொரு பிழைகளுக்கும், மனதினில் உண்டாக்கும் காயங்களுக்கும், அருமை மிக்க மருந்து ஒன்று நம்மிடமே இருக்கிறது. அது தான் நம்மிடம் இருக்கும் நற்குணங்களாகும். நம்மை ஒருவன் வைகிறான் என்றால் அவனுக்குத் தேவைப்படும் அன்பு என்ற மருந்து நம்மிடம் இருக்கிறது. நோயாளிக்குக் கட்டாயமாக மருந்து கொடுத்தே தீர வேண்டும். அதனைப் பரிகாரமாக எண்ணியாவது கொடுக்க வேண்டும். குற்றம் புரிகின்ற மனிதர்கள் உலக இயற்கை நியதியில் இருந்து வழி தவறிப் போனவர்கள். அவர்களுக்கு நல்ல வழி வகைகளைக் காட்ட வேண்டும். திருத்தி வாழ வைக்க நம்பிக்கை ஊட்ட வேண்டும். அது இறைவன் மீது நம்பிக்கை கொண்டு பிரார்த்தனைகள் செய்து வரும் மனிதாபிமானம் உடையவர்களின் கடமை விதியாகும். அதனை விடுத்து ஒருவன் நமக்குச் செய்து விட்ட தீங்கை எண்ணி அவன் மீது நாம் கோபப்படுவதால் என்ன பயன்? நமக்குத் தீங்கு செய்ததினால் நமது நற்குணங்கள் ஏதாவது மாறிப்போய் விட்டதா? இல்லை அல்லவா. எனவே நமக்குத் தீங்கு செய்த வரை நாம் கோபிப்பதால் அதனால் ஏற்பட்டு விடும் துன்பங்கள் நம்மையே வந்து அடைந்து விடுவதால், நமது உள்ளத்திற்கேதான் கேடு உண்டாகின்றது. அவசரமாக அன்பு என்ற மருந்தை நாம் உபயோகப்படுத்தும் வழியில் அமைதி காணலாம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அளப்பரிய ஆற்றல் சக்தியை இறையருள் தர, அதனை முழுமையாகத் தனது அறிவின் வளர்ச்சியில், விடா முயற்சியில் பெற்று நிறைவாக வாழ்வது திண்ணம். நமது ஞானியர்கள் இதனை விளக்கமாகக் கூறியுள்ளனர்.

ஒருவன் அறியாமல் செய்திடும் காரியங்களில், அதனால் ஏற்பட்டுவிடும் சிறு பிழைகளை நாம் பொறுத்து மன்னிக்கத்தான் வேண்டும். அவன் நம்மைப் போல் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தல் தகாது என நாம் அறிய வேண்டும். அறிவின் விருத்தியை அறியாதவன், எப்படி நடந்து கொள்வான்? அறியாதவன் அறியாதவனைப் போலத்தானே நடந்து கொள்வான்? அதைவிடுத்து அறிந்தவன் போல அவனால் நடந்து கொள்ள முடியாது. அறியாதவன் செய்யும் காரியம் பிழையாகத்தான் முடியும் என்று எதிர்பார்க்கும் நமக்கு, அதனை அறிந்து கொள்ள நம்முடைய அறிவு நமக்கு உதவி செய்வதும் காரண நிமித்தம் தான். அறியாதவன் பிழை செய்தான் என்று அறிந்தவன் கூறுவது தான் உண்மையில் பிழையானது தான. நமது சுவாமி அவர்களுக்கு பவானிக்குப் புறப்பட்டுச் செல்லும் முன்பு அநேக விஷயங்கள் நாசூக்காக, சமாதி யோகத்தில் இருந்த சற்குரு நாதரால் உணர்த்தப் பட்டது. “அங்கு சத்தியம் வாங்கிடப் பால் தருவார்கள்…”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button