உயிராற்றல்கள் நீங்காத வழி

223

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

03•09•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(430) மனிதனே புனிதன் —
உயிராற்றல்கள் நீங்காத வழி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பெரியவர் மேலும் கூறுவார், “இளந்துறவியே பயிற்சி காலத்தில் நீ ஏதேனும் தவறுகள் செய்தால் அதனால் உண்டாகும் இடையூறுகள் உனது உடலைத் தாக்கிக் துன்புறுத்துமே அல்லாது உனது ஆத்மாவைத் தீணடாது. மேலும் மனிதர்களைத் தாக்கும் மற்றொரு விஷயம் உண்டு. அதாவது மனிதன் தனது பகுத்தறிவை உபயோகப் படுத்தாமல் இருந்தாலோ, அல்லது தானாக உருவாகும் எண்ணங்களின் சம்பவங்களால் தான், மனமும், உடலும் பாதிப்பை அடைந்து துன்புறுமே தவிர ஆத்மாவை எந்த விஷயமும் பாதிக்காது. இயற்கையில் மனிதன் பெற்ற வரம் என்றும் இறைவனின் கொடை என்றும் இதனைக் கூறலாம். அது மிகையாகாது. ஆனால் மனிதனைத் தவிர மற்ற ஜீவன்களுக்கோ, வேறு பொருள்களுக்கோ இந்த வசதி, அமைப்புக் கிடையாது. அவைகளுக்கு நேர்ந்திடும இடையூறுகளால், துன்பங்களால் அவைகள் மிகுந்த பாதிப்பை அடைந்து விடுகின்றன என்பது உண்மை. ஆனால் மனிதனுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும், அத்தகைய இடைறுகளுக்குத் தகுந்தபடி, தான் செய்யும் செயலை உடனடியாக மாற்றிக் கொண்டு, தன் வழியில் தனது கடமையைச் செய்து முடிப்பான். இதனால் புதிய புதிய அனுபவங்களையும், அதற்காகச் செயற்படும் போது புதிய புதிய ஆற்றல் சக்திகளையும் அடைந்து விடுவதில் மனிதனுக்கு நிகர் மனிதனே! இவ்வாறு தான் எங்களுக்கு முன்பு வாழ்ந்த ஞானியர்கள் எங்களுக்கு உபதேசித்தனர்
ஏ, இறந்துறவியே உனக்கு நேரிட்ட இடையூறுகளால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதாக எண்ணுவதால் தான் உன்னால் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை, அப்படித்தானே? நான் கூறுவதில் உனது நேர்மறை சிந்தனைகளைச் செலுத்துவாயாக ” என்றார்.

இறந்துறவி திண்டுக்கல் மலை உச்சியில் பெரியவர் முன்பாக அமர்ந்து கொண்டு அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர், “ஐயா தனிமனிதன் ஒருவனுக்கு ஏற்படும் துன்பங்களால் உலகம் பாதிப்பை அடையுமா? அடையாதா? என்பதற்குத் தாங்கள் விளக்கம் கூற வேண்டுகிறேன் ” என்றார். அதற்குப் புன்னகை பூத்த அந்த மகான், ” மகனே கவனமாகக் கேள். ஜீவன்களில் ஆறறிவு கொண்டு பகுத்தறிவின் ஆற்றல் பெற்ற மனிதரில், நல்லோர், தீயோர் என்ற இருசாரார்கள் இருக்கின்றார்கள் அல்லவா ? அந்த மனித சமுதாயம் பல சேர்ந்த அமைப்பே சமுதாய அமைப்பு. மனித சமுதாயம் உலகத்தைச் சார்ந்தே உள்ளது. உலகம் தனது இயல்பினில் உலக அமைப்பான பிரபஞ்சத்தில் இயங்கி வருகிறது. இவை அனைத்தும் இறை சக்தியைப் பெற்று சுதந்திரத்தில் நேர்மறை, எதிர்மறை மின் நுண்காந்த சக்தி கொண்டே அனைத்தையும் இயக்கி வருகிறது. வாஸ்த்தவத்தில் நாம் என்ன என்ன எண்ணுகின்றோமோ, அதுவே வாழ்க்கையாக மாறிவிடுகின்றது. அதுதான் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை செயல்பட வைக்கின்ற அதீத நுண்மின் காந்த புலத்தின் இறையருள் ஆற்றல் சக்தி.” மேலும் கூறுவார், “மகனே உனக்கு நேர்கின்ற இன்னல்களைக் கொண்டு நீ, பிரபஞ்ச இயக்கத்தில் இயங்கும் உலக அமைப்புக்கு எந்தவித இடையூறுகளையும் செய்ய இயலாது. உலக அமைப்புக்கே தீங்கு செய்யாத எதுவும் உலகத்தைப் பாதிப்படையச் செய்யாது. உலகத்திற்கு இடையூறு செய்யாத எதுவும் உலகில் வாழும் நேர் மறையான எண்ணம் கொண்டவர்களை எந்தவிதமான பாதிப்புக்கும் உள்ளாக்க மாட்டாது. எனவே நீ சஞ்சலப்படுவதை விட்டுவிடு” என்று கூறினார்.

இளம் துறவி மகானாகக் காட்சி தந்து கொண்டிருக்கும் பெரியவரைப் பார்த்து, “ஐயனே தங்களுக்குக் குருவாக வந்தவர் உலகினுக்கு ஏதாவது கூறினாரா? ” எனக் கேட்டார். “மகனே, ஒருவனது வாழ்வில் அவன் எவ்வாறு எண்ணி, நடந்து, செயல் புரிகின்றானோ, அவ்வாறே அவனது வாழ்வின் பாதையின் போக்கு அமைகின்றது. அப்படித் தான் அவனும் ஆகின்றான். மனிதனின் ஆசையால் தான், நன்மைகள் செய்த நல்லவன், தீமைகள் புரியும் தீயவன், அடாதன செய்யும் பொல்லாதவன், தூய வினைச் செயல் புரியும் தூய்மையாளன் என்று அவனவன் எண்ணம்தான் அவனுக்கு வாழ்க்கையாகிறது. மனிதனது எண்ணத்தால் ஆசையும், ஆசைகள் எப்படிப்பட்டதோ அப்படியே நம்பிக்கையும், அவன் நம்பிக்கை எப்படியோ அப்படியே தான் அவனது செயல்களும் அமையும். இந்தப் பூமியில் மனிதன் ஆசையின் பிடியின் கீழ் வாழ்ந்து பயணம் செய்து இறுதியில் முடிவாம் உலகை எய்துகின்றான். பிறகு மீண்டும் அந்த உலகின்றும் மனிதன் இம்மானுட செயல் உலகினுக்கே திரும்பி வருகின்றான். இறைவனின் மீது எப்பொழுது மனிதனுக்குப் பற்று உண்டாகின்றதோ, அப்போது இருந்து, இதயத்தைப் பற்றி இருந்த உலகப் பற்றுக்கள் மெல்ல மெல்லக் குறைந்து வரும். அவனை விட்டு உயிராற்றல்கள் நீக்காமல் இருந்து வரும். அவன் இப்பிறவியிலேயே மரணத்தின் பிடியில் இருந்து விடுபட்டு விடுதலை எய்துகிறான். மரணமில்லாப் பெருவாழ்வைத் தரும் இறைவனாகிய பராபரத்துடன் ஒன்றிக் கலந்து விடுகின்றான்” என்றார். மீண்டும்

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button